தமிழக அரசும் காவல்துறையும், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, இனி நீதிமன்ற தீர்ப்பை யாரும் மதிக்கவேண்டிய அவசியமில்லை என்று ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
நாங்கள் மேல்முறையீடு செய்யப்போகிறோம் அதனால் அந்த தீர்ப்பை மதிக்கவேண்டியதில்லை என்று யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம்தானே?!
இது பலவகையிலும் Backfire ஆகும்போதுதான் இதன் விளைவுகள் புரியும்.
ஒரு நாள் எந்த அரவமும் இல்லாமல் தீபமேற்றி வணங்கிவிட்டு போயிருப்பார்கள், அது அன்றே முடிந்திருக்கும்.
தீபமேற்றவிடாமல் செய்தால், இஸ்லாமியர்கள் மகிழ்ந்து தமக்கு வாக்களிப்பார்கள் என்று திமுக செய்த இந்த செயலால் என்னென்ன பாதிப்புகள் எதிர்காலத்தில் வரும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
ஒரு பொதுவெறுப்பு மற்றும் மனக்கசப்பு உருவாகிறது, அதற்கு இஸ்லாமியர்களும் காரணமில்லை, இந்துக்களும் காரணமில்லை!
அதேபோல் அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் மதிக்காமல், ஆட்சியாளர்களின் ஏவல் அடிமைகள் போல் நடந்துகொண்ட காவல்துறையினர் ஆட்சி மாற்றத்தின்போது என்ன ஆனார்கள் என்பது கடந்தகாலத்தில் பதிவுகளாக இருக்கிறது.
இருபுறமும் கூர்மையான கத்தியை கையிலெடுத்திருக்கிறீர்கள், விளைவுகளை பார்க்கத்தான் போகிறீர்கள்.
https://x.com/BJP4TamilNadu/status/1996970317839782026
No comments:
Post a Comment