Friday, February 11, 2022

மகாபாரதமும் திருக்குறளும் - நீ உன்னிடம் எப்படி செயல்படுவது போலவே பிற உயிரினங்களிடமும் நட -அறவழியின் முக்கிய விதி

 மகாபாரதமும் திருக்குறளும் 

                                 

 மனித வாழ்வியல் அறவழியின் முக்கிய விதி - நீ உன்னிடம் எப்படி செயல்படுவது போலவே பிற உயிர்  னங்களிடமும் நட

ஒருவன் தனக்குத் தீங்கு எனக் கருதுவதை மற்றவனுக்கு ஒருபோதும் செய்யக்கூடாது. இதுவே அறத்தின் சுருக்கமான விதியாகும். வேறு வழியில் செயல்படும் ஒருவன் ஆசைக்கு வசப்படுவதன் மூலம் அறமற்ற {அதர்மம் செய்யும்} குற்றவாளியாகிறான். - யுதிஷ்டிரனிடம் பிருஹஸ்பதி -அநுசாஸனபர்வம் 113:8   mahabharatham.arasan.info/2019/06/Mahabharatha-Anusasana-Parva-Section-113.html 

ஒருவன், அறத்தில் முக்கியக் கவனம் செலுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் வாழ வேண்டும். அவன் தன்னைப் போலவே பிற உயிரினங்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.  - யுதிஷ்டிரனிடம் விதுரன்- சாந்திபர்வம் 167:9   mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-167.html

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. குறள் 190: புறங்கூறாமை.
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் பார்ப்பார்களேயானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. குறள் 315: இன்னாசெய்யாமை.
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாகக் கருதிக் காப்பாற்றா விட்டால் அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். குறள் 319: இன்னாசெய்யாமை
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் முற்பகலில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் பிற்பகலில் தானாக வரும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. குறள் 436: குற்றங்கடிதல்.
முதலில் தன் குற்றத்தைக் கண்டு க் கொண்டு அதன் பின்னர் பிறருடைய குற்றத்தை காணும் ஆற்றல் மிக்க தலைவனுக்கு என்ன குறை நேரும்?


பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. குறள் 1015: நாணுடைமை.
சாலமன் பாப்பையா உரை:தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் உறைவிடம் என்று உலகத்தவர் கூறுவர்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை.
பிறர் பொருளையும் தம் பொருள் போலவே கருதி நேர்மையுடன் வியாபாரம் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

No comments:

Post a Comment

ராகுல் காந்தி காங்கிரஸ் முஸ்லிம் மதவெறி தூண்டி ஓட்டு ஜிஹாத்

  Vote JIHAD in Malegaon Dhule Loksabha Maharashtra BJP lost by 3,831 Votes in Malegaon Assembly area Congress got 1,98,869 Votes while BJP ...