Friday, November 5, 2021

ஜெய்பீம் சினிமா படத்தில் சூர்யாவின் அராஜக மோசடிகள்

 ஜெய்பீம் சூர்யாவுக்கு நறுக்கென சில கேள்விகள் :

ஜெய் பீம் படம் பார்த்தேன்.. பிரமாதமான மேக்கிங்.. விழுப்புரம் மாவட்டத்தின் பேச்சு வழக்கை எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் உதவியுடன் தத்ரூபமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள்.. வட தமிழக பேச்சு வழக்கை வெள்ளித்திரையில் காட்டி இருப்பதற்கு மிக்க நன்றி... எங்கள் இருளர் சமுதாய சொந்தங்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருந்தீர்கள்.. அதற்காகவும் நன்றி... இப்படத்தின் மூலம் சம்பாதித்த பல கோடியில் ஒரு கோடியை எங்கள் சமுதாயத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள்.. ( இதை கணக்கு காட்டி வருமான வரியை குறைத்து செலுத்தலாம் என்பது தனிக்கதை ).. இருந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உதவியதற்கு நன்றி... 

சரி விஷயத்திற்கு வருகிறேன்... உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என்பதால் வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட அப்பாவி ராஜிகண்ணு என கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்... அதே வேளையில் நிஜத்தில் எங்கள் சொந்தம் ராஜி கண்ணுவை மிக மிக கொடூரமாக அடித்துக்கொன்ற சப் இன்ஸ்பெக்டரின் பெயர் அந்தோணி சாமி .. அவர் கிறிஸ்தவர் (தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்) .. ஆனால் திரைப்படத்தில் அவர் பெயரை குருமூர்த்தி என மாற்றி இருக்கிறீர்கள்.. அதோடு அவரைஇந்து வன்னியராகவும் காட்டி இருக்கிறீர்கள்... 

I have not seen the Film Jai Bheem and I have no intention to see it. From press reports I have come to know that Rajakannu Vs State is the basis for the Film Jai Bhim.

 The judgement is attached herewith. The judge was Prabha Shankar Mishra from Bihar. Later he became Chief Justice of Calcutta HC. As he was superceded for elevation to Supreme court, he resigned and practiced as a Senior Advocate in Supreme court. 

He appeared for several VHP cases. The result of the case was more to the judicial activism of the judge rather than the efforts of K Chandru. In one case he ordered the then Commissioner of Police, Chennai to stand in his court and refused give him seat . 

On that day, the commissioner was directed to appear before the bench headed by PS Mishra. When the judges entered the Court hall they found the Police Commissioner Sri Pal occupying a chair of the Advocates around the Horse Shoe Table . Justice Mishra asked the Commissioner Sri Pal to stand up and explain as to why he sat on the table meant only for Advocates. Sri Pal answered that when ever he had come to court he would sit in chair around the Horse Shoe Table. PS Mishra pounded on him like anything and made stand for the whole day and passed a judicial order prohibiting non lawyers from sitting in the Horse Shoe table.

 several years later DMK advocates and Naxalites objected to Dr. Subramanian Swamy sitting in the chair around the Horse Shoe table citing the order of PS Mishra Bench for which Dr Swamy answered that he had the permission of the Bench. There was a mayhem later and resulted in police entering the HC campus and Lathi charging advocates and few judges as well. Coming back, PS Mishra was a terror to the erring police officials and gave relief to several persons affected by illegal police action. 

The legal concept of state government being responsible for the illegal actions of the officials was developed by him only as for as Tamil Nadu is concerned. He was so independent and had lateral thinking and original in his approach. But for PS Mishra Chandru would not have succeeded in the Rajakannu case. As he became VHP activist after his resignation, his contribution is ignored. 

Magazines like Nakkeeran had indulged in character assassination against him. Had he been a leftist he would have been celebrated like God by the Tamil media. Since he became part of Hindutva brigade he has been not only ignored , but his character assassinated.

 I have not seen Chandru referring to Justice PS Mishra s name in any of his interviews after the Film Jai Bheem. Magazines like Junior Vikatan which received judicial protection against illegal State action has also denied due recognition to him. Later our Karyakarta Advocate R Nandakumar from Kulithalai, Trichy District had obtained similar relief. Our heros also should be given their due share if not celebrated

அதேபோல எப்பொழுதும் நமச்சிவாய என சொல்லிக் கொண்டிருக்கும் வழக்கறிஞரை ஒரு சமூக கோமாளி போலவும் சித்தரித்து உள்ளீர்கள்...

 உங்களின் சூரரைப்போற்று திரைப்படமும் தொழிலதிபர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.. கோபிநாத் தெய்வ பக்தியுள்ள பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்.. ஆனால் படத்தில் அவரை பெரியாரியவாதியாக, கடவுள் மறுப்பாளராக காட்டியிருந்தீர்கள்.. 

இந்து மதத்தின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்..? ஜெய்பீம் திரைப்படத்தின் இறுதியில் நீங்கள் நன்றி சொல்லி போட்டிருக்கும் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களாக வருகின்றன... நீங்கள் ஸ்டாலினை சந்திக்கும் பொழுது உங்களுடன் அம்மதத்தை சேர்ந்த பெரியவர்கள் இருந்தார்கள்.. இதெல்லாம் உங்கள் மீது பெருத்த சந்தேகத்தை வரவழைக்கிறது... ஏற்கனவே அப்பாவிகளான இந்துக்களை, குறிப்பாக எங்களைப்போன்ற இருளர், மீனவர், பறையர் போன்றோரை ஏதேதோ பொய் புரட்டுகளையும், ஆசை வார்த்தைகளையும் கூறி மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்... மதமாற்றத்தால் அகண்ட பாரத தேசம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் , இலங்கை என சிதறுண்டு கிடக்கிறது...

 இந்தியாவில் மிச்சம் மீதி இருக்கும் இந்துக்களையும் மதம் மாற்றிக்கொண்டு இருக்கும் சதிகாரர்களுடன் கைகோர்த்து, நீங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது.. உங்கள் தந்தை எவ்வளவு பெரிய பக்திமான்.. நீங்கள் அவருக்கும் அவரது கொள்கைகளுக்கும் துரோகம் இழைப்பதாக தோன்றவில்லையா!?   

 

இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமா ?உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா ?

நாங்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டாலும் எங்கள் கலாச்சாரத்தை விட்டு எப்பொழுதும் விலகியது இல்லை ... எங்களுக்கும் பலமுறை பண ஆசை காட்டி மதம்மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள் .. சிவபெருமானின் வாரிசுகளான இருளர்ளாகிய நாங்கள் அதற்கெல்லாம் அடிபணியவில்லை... எங்களை வழிநடத்த எங்கள் குலதெய்வம் இருக்கிறது... எங்கள் கலாச்சாரம் , எங்கள் வாழ்வியல் தான் எங்களுக்கு அடிப்படை.. அதை மாற்றிக் கொண்டால் எங்கள் இனமே அழிந்து விட்டதாக அர்த்தமாகிவிடாதா ? 

எப்போதாவது எங்காவது இந்துக்கள், மற்ற மதத்தினரை கத்திமுனையில் மதம் மாற்றியதாக வரலாறு உண்டா ? பணம் கொடுத்தோ மற்ற மத தெய்வங்களை சாத்தான் என இகழ்ந்து பேசியோ மதம் மாற்றியதாக கேள்வி பட்டதுண்டா? தான் உண்டு தன் வேலையுண்டு என இந்தியாவில் மிச்சம் மீதி இருக்கும் எங்களை, எங்கள் வழியில் நிம்மதியாக வாழ விடுங்கள்... 

ஜெய்பீம் ! ஜெய் ஹிந்த்!

இப்படிக்கு ,

இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த உண்மைத் தமிழன்

- நன்றி, திரு. ரவிச்சந்திரன்!

சூர்யா என்கிற நபர் சுமக்கும் இந்த படத்தில் செய்த தவறு என்ன?
ஒரு பின்தங்கிய பழங்குடியின மக்களின் நிலை அவர்கள் சந்திக்கும் பேரவலம் பற்றி சினிமா வழியாக பேசுப்படுவது சரியே!  அதுதான் நியாயமும் கூட !! 
ஆனால் அப்படி பேசும் போது சொல்லப்படும் நிகழ்வுகளில் உண்மை தன்மை அவசியம் என்பதை உணர வேண்டும். கொஞ்சம் பொய்யை கலந்தாலும் மொத்தமாக நிகழ்வின் நம்பக தன்மை காணாமல் போகும் அபாயம் உண்டு. 
இன்று பெரும்பாலான சம்பங்களின் பதிவுகளில் அந்த நிலை ஏற்படுகிறது. 
சரி.. அந்த இருளர் சமுதயா குடும்பத்தில் நடந்த சம்பவத்தை விவரித்து வெளிக் கொணர்வதில் உங்கள் நோக்கம் என்ன?  
ஒரு தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு நிகழ்ந்த சோகம் இனி நடக்க கூடாது என்பது தானே !  அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் சொல்கிறீர்கள்.  ஆனால் நீங்கள் அதில் ஒற்றை நேர்கோட்டில் நேர்மையாக இருந்தீர்களா?  இல்லையே !! 
உண்மையில் அன்று அந்த இருளர் குடும்ப தலைவனை அடித்து கொன்றது அந்தோணிசாமி என்கிற தலித் (இவரும் பின் தங்கிய வகுப்பில் இருந்து மதம் மாறியவர் தான்) காவல் துறை இன்ஸ்பெக்டர் தான். 
அவர் ஏன் கதை சொல்ல வரும் போது குருமூர்த்தி எனும் வன்னியரானார்.??  இதுதான் நேர்மையில்லாத செயல். ஏன் அப்படி செய்தீர்கள்??
அந்தோணிசாமி கொன்றார் என்று சொல்ல புகும் போது அங்கு ஜாதிய வன்மம் என்கிற நோக்கம் காணாமல் போகிறது. காவல்துறை வன்முறை  அராஜகம், ஊழல் என்கிற காரணம் மட்டுமே மிஞ்சி நிற்கும். நிற்கட்டுமே!!
இந்த கொடுமை ஒழிய வேண்டாமா?  எதையும் போலீஸ்காரன் செய்தால் தப்பித்து விடலாம் என்கிற வெள்ளையன் விதைத்த விஷ மரத்தை அழிக்க வேண்டாமா?  
ஆனால் இந்த உண்மையை மாற்றி குருமூர்த்தி என்கிற வன்னிய இன்ஸ்பெக்டர் அடித்து கொன்றார் என்று பொய் சொல்லும் போது நீங்கள் உண்மையை மட்டும் அழிக்க வில்லை!  ஒரு பொய்யை விதைத்து இரு ஜாதியினர் இடையே ஏற்கனவே இருக்கும் காழ்ப்புணர்ச்சியை தூண்டி விடுகிறீர்கள். இதுதான் நீங்கள் இந்த சமுதயாத்திற்கு செய்யும் நல்ல சேவையா?  இதுதான் தலித் பழங்குடி முன்னேற்றமா? 
நீங்கள் படம் எடுத்து நாலு கோடியோ நாற்பது கோடியோ சம்பாதித்து விட்டு ஒரு கோடியை எந்த விதத்திலும் உதவாத ஒரு அரசிடம் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டு சென்று விடுவீர்கள். ஆனால் உங்களால் எதிர் எதிராக கொம்பு சீவி விடப்பட்ட அந்த இரண்டு சமுதாயத்தினர் என்ன செய்வார்கள்?  அந்த இருளர் பழங்குடியினர் பொய்களை நம்பி வெறுப்பை மனதில் சுமந்து அதே மண்ணில் தானே வாழ வேண்டும்.?
இதே நிலைதான் அந்த வன்னிய சமுதாயத்தினருக்கும்.  இது தேவையா?
இந்த இரண்டு சமுதாயமும் ஏதாவது அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கிறார்களா?  நாளை நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் ஒண்ணுக்குள் ஒன்றாய் ஒரே ஊரிலே வாழ வேண்டியவர்கள் தானே ! இவர்கள் என்ன உங்களை போல 8 கோடியில் வீடு கட்டி ஊரை விட்டு விலகி நகரில் வாழ்பவர்களா? 
ஒரு அந்தோணிசாமியின் கொலையை குருமூர்த்தி செய்த கொலையாக மாற்ற சொன்னது யார்?  அங்கு இருக்கு முடிச்சு !
அந்தோணிசாமி என்கிற இன்ஸ்பெக்டர் கொலை செய்த போது கூட தான் ஒரு கிறிஸ்துவன் அந்த இருளர் ஒரு இந்து என்பதால் கொலை செய்யவில்லை!  தான் ஒரு போலீஸ்காரன். அந்த இருளர் ஒரு சாதாரண யாரும் இல்லாத சாமானியன்  என்பதால் தான் கட்டற்ற வன்முறையை பிரயோகிக்கிறார். (This is a case of violence let out by the Powerful person on a Powerless Person)
ஆனால் கிறிஸ்துவ லாபியின் அழுத்தத்தின் காரணமாக நீங்கள் உண்மையை மறைக்க செய்ததால் நாளை இன்னொருவர் கிறிஸ்துவ காவல் துறை அதிகாரி தன்னை காக்க தன் கிறிஸ்துவ லாபி பின் வரும் என்கிற நம்பிக்கையுடன் தவறுகளை தைரியமாக செய்ய துணிய மாட்டாரா?  என்ன பைத்தியக்காரதனம் இது? 
மேலும் காவல்துறை அன்று செய்த கொடும் வன்மூறையை யார் மீதும் நிகழ்த்தும். அதை சரியாக சுட்டி காட்டாமல் அதை ஜாதிரீதியாக திரிக்கும் போது காவல்துறையின் வன்முறையின் காரணம் திரிக்கப் பட்டு நீர்த்து போகிறது. இது தான் உங்கள் விருப்பமா?? 
உண்மைகள் திரிக்கப் படும் போது எப்படிபட்ட பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்று சிந்திக்கவில்லை என்றால் தயவு செய்து உண்மை கதைகளை படம் எடுக்காதீர்கள். 
மேலும் சம்பந்தமேயில்லாமல் பிராமின வகுப்பின் மேல் இந்து நம்பிக்கை கொண்டவர்களின் மேல் பாயாதீர்கள். மார்க்ஸிட்களாலேயே வெளியேற்றப் பட்ட நீதிபதி சந்துரு மட்டும் வக்கீலாக இல்லை. 
இதே சிதம்பரம் பத்மினி வழக்கு போன்றவற்றில் ஆஜாராகி காவல்துறையால் பாதிக்கப் பட்டவர்களின் சார்பில் நின்றதால் வக்கீல் வெங்கட்ராமன் என்பவர் வீடு அதே சிதம்பரத்தில் மதிமுக குண்டர்களால் தாக்கப் பட்டு கார் எரிக்கப் பட்டு, அவர் தன் மனைவியோடு தப்பி ஓட வேண்டிய சூழல் வந்த போது காவல்துறை மௌனமாக வேடிக்கை பார்த்ததுமின்றி மதிமுக குண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!  இப்படி பாதிக்கப் பட்ட வக்கீல் வெங்கட்ராமனும் உயர் சாதியை சேர்ந்தவர்தான். இதை நான் சொல்லவில்லை!  உங்கள் நாயகன் நீதிபதி சந்துரு சொல்கிறார். 
சாதி உண்டு. அதற்குள் வெள்ளைய கிறிஸ்துவர் கற்பித்த பொய்களின் அடிப்படையில் மோதல் உண்டு. அதைப் பற்றி உண்மையாக எடுக்க பெரிய தைரியம் வேண்டும். அது உங்களுக்கு இல்லை ! 
வெறும் மதமாற்ற கை கூலிகளிடம் பணம் வாங்கி உண்மையான இருளர் சமுதாய துயரத்தை, போலீஸ் அராஜகத்தை தேவையில்லாமல் ஜாதி சண்டையாக காட்டி காசு பார்த்து விட்டீர்கள். 
அன்று அந்த ஆரோக்கியசாமி இந்த இருளரை போலீஸ் அதிகார வெறியில் கொன்றான். நீங்கள் அதே இருளரை மீண்டும் அடிப்படை நேர்மையின்மையின்றி பண வெறியில் கொன்று விட்டீர்கள். 
அவனை விட நீங்களே விஷம்.!
ரவி சுந்தரம் 
05/11/2021 
பி. கு:- இந்த படம் 50 வருடமாக சமூக நீதி காத்ததாக சொன்ன திராவிடத்திற்கே அவமானம். உண்மையில் இந்த படத்தினால் இந்த திராவிஷங்களே வெட்கபட வேண்டும். அதை விடுத்து  சம்பந்தமேயில்லாமல் சங்கிகளை சூர்யா ஆசிங்கபடுத்தி விட்டார் என்று திசை திருப்பி சுயஇன்பம் அடையும் கம்மிக்கள், திருட்டு மூஞ்சி கழகத்தினர் ஓரமாக போகவும்.







No comments:

Post a Comment