சென்னையில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 5.8 ஏக்கர் (ரூ. 48,100/Sft; கிரவுண்ட்- ரூ.11.5 கோடி) இடத்தை ரூ.1,212 கோடிக்கு வாங்கிய பாஷ்யம் குழுமம்
செய்திப்பிரிவுUpdated on: 02 Dec 2025 https://www.hindutamil.in/news/business/bhashyam-group-buys-58-acres-of-land-from-standard-chartered-bank-in-chennai-for-rs-1212-crore
Devapriya view -இந்த இடம் உள்ள பகுதி ரோடு அகலம் அதீத FSIக்கு போதாது எனும் நிலையில் இது மிக அதைகமான விலை
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியிடமிருந்து 5.8 ஏக்கர் இடத்தை ரூ.1,212 கோடிக்கு பாஷ்யம் குழுமம் வாங்கியுள்ளது.
சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பிரபலமான பாஷ்யம் குழுமம், ரியல் எஸ்டேட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைக்கும் வகையில் நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள 5.8 ஏக்கர் இடத்தை ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியிடமிருந்து வாங்கியுள்ளது.
இந்த நிலத்தின் மொத்த மதிப்பு பதிவுக் கட்டணங்கள் உட்பட சுமார் ரூ.1,212 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை இதுவாகும்.
ஏற்கெனவே பாஷ்யம் குழுமம், கிழக்கு கடற்கரை சாலையில் (இசிஆர்) வரவிருக்கும் ‘பிரார்த்தனா பை பாஷ்யம்’, ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா தளத்தில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், அசோக் நகரில் ‘தி பீக்’, போட் கிளப்பில் ‘தி பைனாக்கிள்’, கோபாலபுரத்தில் ‘தி எபிக்’, போயஸ் கார்டனின் ‘ராயல் தமேரா கார்டன்ஸ்’, ஓஎம்ஆர் துரைப்பாக்கத்தில் ‘ப்ரொமநேடு, என்சாண்டட்’ போன்ற பல்வேறு ஆடம்பர குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய சென்னையில் ஆடம்பர குடியிருப்புத் திட்டங்களுக்கான நிலத்தின் தேவை அரிதாகி வரும் சூழலில், பாஷ்யம் குழுமத்தின் இந்த கையகப்படுத்தல், முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்துக்கான பரிவர்த்தனை ஆலோசகராக சிபிஆர்இ நிறுவனம் செயல்பட்டது. இந்த கையகப்படுத்தல் மூலம், நகரின் ஆடம்பர ரியல் எஸ்டேட் பிரிவில் பாஷ்யம் குழுமம் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment