Sunday, April 11, 2021

ஆரிய திராவிட கோட்பாடு பின்னணி ஏற்போர் முட்டாள்கள்

யூதர்கள் என ஒரு இனமே கிடையாது, மரபணு மூலக்கூறுகள்,  பைபிள் கதைகள் & தொல்லியல் நிரூபிக்கிறது.


இன்று மக்களிடையே பேச்சில்
வெள்ளை இனம், ஆரியர், திராவிடர் இன்னும் சொல்லப்போனால் தமிழினம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அறிவியல்பூர்வமாக இப்படி இனங்களே கிடையாது. மரபணு மூலக்கூறுகள் இவ்வாறாக பிரிக்க இயலாது.
அறிவியல்படி எல்லோருமே ஆப்பிரிக்காவின் தோன்றி வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கண்டங்களில் குடியேறியவர்கள் தான். இதில் ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை அன்னியர் வந்தேறி என்றால் அறிவற்று பேசுகின்றனர் என பொருள். 
இதையும் தாண்டி சிலர் ஒரு சில அறிஞர்கள் பல நூல்கள் பெயர்களைக் கொடுத்து அதில் உள்ளது, இதில் உள்ளது என்பார்கள் அந்த நூல்களை வாங்கிப் படித்தால் அதன் படியாக தமிழர்களும் வழியில் இருந்து வந்தவர்கள் ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் தமிழில் வந்த முதல் குடியேறிகள் பிறகு மற்றவர்கள் என்றெல்லாம் மாறி மாறி வருகிறது சரி மொழியியல் ரீதியாக பார்க்கலாம் என்று சொன்னால் தமிழ் மொழியானது வைத்திய மொழி அதாவது ரஷ்யா பக்கத்தில் உள்ள நாடான நாடுகளில் உள்ள ஸ்கைத்திய   மொழியோடு  பொருந்துவதால்  தமிழ் மொழி அல்லது திராவிடர் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறி மொழி என்பது பாதிரி கால்டுவெல் உடைய கண்டுபிடிப்பு ஆகும்.

இந்த இனக் கொள்கை அதாவது பிறப்பினால் வெவ்வேறு இனங்கள் என்பதை நமக்கு கிறிஸ்தவ பைபிள் தொன்மத்தில் வருகிறது.
கானான் மண்ணின் மைந்தர்களை என பத்து இனங்கள் வாழ்ந்தனர். அன்னிய வந்தேறிகள் மண்ணின் மைந்தர்களை இனப்படுகொலை இன அழிப்பு செய்து  ஆக்கிரமித்தமை பைபிள் ஒரு வெற்றிக்கதையாக புனைகிறது.
எபிரேயர்கள் இடையேவே யாக்கோபு என்பவருடைய 12 மகன்களும் 12 யூத ஜாதிகளாக பிரிக்கின்றனர். ஒரு ஜாதியில் பிறந்தவர் இன்னொரு ஜாதியில் பெண் எடுக்கக்கூடாது. ஒவ்வொரு ஜாதியினருக்கும்  நாட்டின் ஒரு பகுதி என்றெல்லாம் பிறப்பினால் அத்தனை வேறுபாடுகளையும் பைபிள் தொன்மம் உருவாக்கியுள்ளது
பைபிள் கதைகளை உலகில் உள்ள பல்வேறு கிறிஸ்தவர்களும் முழுமையான வரலாறு என நம்பிக் கொண்டிருந்தது 1960 வரை இருந்தது. இஸ்ரேல் எகிப்து போன்ற நாடுகளில் தொல்லியல் செய்தபோது குழியை தோண்டிவிட்டு ஏதாவது தென்பட்டால் அதை உடனே வெளியே பைபிள் கதைகளோடு இணைத்து மிகவும் ஆரவாரமாக பத்திரிகைகளில் செய்தி பரப்பப்பட்டது. பின்னர் அதே தொல்லியல் அறிஞர்கள் அவற்றை முழுமையாக ஆராய்ந்து கட்டுரை கொடுத்தபொழுது பைபிள் கதைகளுக்கும் இஸ்ரேலுக்கு அடியே வாழ்ந்த மக்கள் நாகரீகத்திற்கும் சிறிதளவும் தொடர்பே இல்லை. பைபிள் கதைகள் முழுவதும் கட்டுக்கதை என நிரூபணம் ஆனது

இங்கு பமு 300 க்கு முன்பு வரை வாழ்ந்தது கானானிய நாடோடி மக்களே;  கிரேக்கர்களும் இடமும் ரோமனியர்கள் இடமிருந்தும் நாகரீகம் பெற்று தான் இஸ்ரேல் வளர்ந்தது அதற்கு முன்புவரை ஆடு மாடு ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பெருமளவில் கானானிய இஸ்ரேலியர்கள்

பைபிள் தொன்மக் கதையில் இஸ்ரேல் எனக் கூறப்படுவது யூதேயா மற்றும் இஸ்ரேல் என இரண்டு சிறு  நாடுகளை சேர்ந்த ஒரு மொத்தமான பகுதி. 
 













No comments:

Post a Comment