Sunday, April 4, 2021

கோமாளி நடிகர் உதயநிதி ஸ்டாலின் மனிதநேயமற்ற மிருகத்தனமான வெறுப்பு தூண்டூம் நாசீய உளறல்களும்

 கோமாளி நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிருகத்தனாமாய் சிறிதும் உண்மையே இல்லாமல் வேசியைக் கிட கேவலமான பேச்சு.   மனித நேயமற்ற மிருகத்தனமான பேச்சுக்களும் உளறல்களும்.

சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மரணத்திற்கு காரணம் ஸ்டாலினும் உதயநிதியின் கொடுத்த அழுத்தம் தான் என அன்பு உடன்பிறப்புகளே கூறுகிறார்கள். இப்பொழுது ஜெ அன்பழகன் தொகுதியை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார்.

சிறுநீரக கோளாறில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்ற மாபெரும் தலைவர்களை இந்த பரம்பரை என்றபடி என்ந்த தகுதியும் இல்லாத இந்தக் கோமாளி நடிகர் பேச்சு நல்ல சிந்தனையாளர்கள் திமுகவை அறுவருக்கத்தனமாக பார்க்க வைத்துள்ளது

இந்திய நாட்டோடு காஷ்மீரை முழுமையாக இணைக்காமல் முறையற்று தாற்காலிகம் என அம்பெத்கர் சொன்ன 370 பிரிவு சட்டம் நீக்கியதைப் பார்த்து இதற்காகவே உயிர் பிடித்துக் கொண்டு இருந்தேன், மன நிறைவு என்பது தான் அவரது கடைசி ட்வீட்

உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு... கொதித்த சுஷ்மா, அருண் ஜெட்லி மகள்கள் - என்ன பிரச்னை? வருண்.நா 

  

``உதயநிதி ஜி, தயவுசெய்து உங்கள் பிரசாரத்தின்போது எனது தாய் குறித்து எதுவும் பேச வேண்டாம்!'' - பன்சூரி ஸ்வராஜ்.

தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல்வாதிகள் தங்களது பிரசாரங்களில் வார்த்தைகளைத் தீயென வீசுகின்றனர். சில அரசியல் தலைவர்கள் தங்களது கட்டுப்பாட்டை மீறி பிரசாரங்களில் பேசிவிடுகின்றனர். இதில் பல விஷயங்கள் சர்ச்சைகளாக உருவெடுத்து நிற்கின்றன. அப்படியான சர்ச்சைகளின் பட்டியலில், சமீபத்தில் இணைந்திருப்பது தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு!

கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) அன்று தாராபுரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் எல்.முருகனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து பேசினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், ``தி.மு.க-வின் இளவரசர், கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு முக்கியப் பதவிக்கு வந்துவிட்டார்'' என்று உதயநிதியைச் சுட்டிக்காட்டி வாரிசு அரசியலை விமர்சித்துப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த புதன்கிழமை (மார்ச் 31) அன்று தாராபுரம் பிரசாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நேற்று இங்கு வந்த பிரதமர் மோடி, நான் குறுக்குவழியில் வந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இதை யார் சொல்கிறார் என்று பாருங்கள்... எத்தனை முக்கியத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, குஜராத்தின் முதல்வரானார் மோடி என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் பட்டியலே இருக்கிறது'' என்று பேசிய உதயநிதி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட சில தலைவர்களின் பெயரைப் பட்டியலிட்டார்.

 
அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ்

தொடர்ந்து பேசிய அவர், ``அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்கள், மோடியின் சித்ரவதை காரணமாகத்தான் உயிரிழந்தனர்'' என்று கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர்களின் மரணம் குறித்து உதயநிதி பேசியது இந்திய அளவில் சர்ச்சையானது.

இதையடுத்து நேற்று (ஏப்ரல் 1) உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ்.

உதயநிதி ஜி தயவு செய்து உங்கள் பிரசாரத்தின்போது எனது தாய் குறித்து எதுவும் பேச வேண்டாம்! நீங்கள் சொன்னது அனைத்துமே பொய். பிரதமர் நரேந்திர மோடி ஜி என் தாயார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் கடினமான நேரங்களில், பிரதமரும் கட்சியும்தான் துணையாக நின்றனர். உங்களின் பேச்சு எங்களைக் காயப்படுத்திவிட்டது.
பன்சூரி ஸ்வராஜ்
 
அருண் ஜெட்லி, சோனாலி ஜெட்லி
Twitter/@sonalijaitley

பன்சூரி ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்ட கருத்தைப் பதிவிட்ட சில மணி நேரங்களில், அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லியும் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

அதில், ``உதயநிதி ஸ்டாலின் ஜி, உங்களுக்குத் தேர்தல் குறித்த அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் பொய் சொல்லும்போதும், என் அப்பாவின் நினைவுகளை மதிக்காமல் பேசும்போதும் நான் அமைதியாக இருக்க முடியாது. என் அப்பா அருண் ஜெட்லியும், பிரதமர் மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பைப் பகிர்ந்துகொண்டனர். அத்தகைய நட்பைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்'' என்று பதிவிட்டிருந்தார்.

 

 
 
 

 


 




 

 

 

No comments:

Post a Comment

Karnataka Public Service Commission’s (KPSC) annual income was reflected as only ₹40,000 in certificates used by his daughters

https://www.instagram.com/p/DbCtO8Xhh5m/ Karnataka High Court on July 20 expressed shock over allegations that the Chairman of the Karnataka...