Friday, March 24, 2023

சர்ச் ஏசு பொம்மையில் ரந்தம் (மணவாளக்குறிச்சி வின்சென்ட் தே பவுல் சர்ச்) வடிந்ததா?

 கன்னியாகுமரி சர்ச் ஏசு சிலையில் ரத்தம் வடிந்தது என கல்லா கட்டினராம்.

போலீஸ் உடனடியாக அந்த ரத்தம் கலெக்டு செய்து ஆய்வு முடிவு - அது மனித ரத்தமா? ஆடு- மாடு- கோழி ரத்தமா? அல்லது மும்பை சர்ச் போல சாக்கடை நீரா? என அறிவிக்க வேண்டும்

 https://www.dailythanthi.com/News/State/did-jesus-bleed-925112https://www.maalaimalar.com/news/district/kanyakumari-newsfor-the-2nd-day-the-public-was-amazed-to-see-the-blood-dripping-from-the-statue-of-jesus-in-the-manavalakurichi-periyavilai-temple-586435 
https://m.rediff.com/news/1998/apr/18christ.htm

மும்பை சர்ச் ஓன்றில் இது போல பல நாள் தொடர்ந்து நடந்தபோது கிறிஸ்துவ நாத்தீகர் சென்று மேல் மாடி பாத்ரூம் சாக்கடை ஒழுகுவது என நிரூபித்தார். சர்ச் அந்த அறிஞர் மீது வழக்கு போட இந்தியாவில் வாழ முடியாது நார்வே தப்பி ஓடினார்.

கிறிஸ்துவ நாத்திகர் சணல் இடமருகு கேரளாவைச் சேர்ந்த பெண்ணிற்கு ஐரோப்பா வேலை-விசா என பல லட்சம் ஏமாற்றகய வழக்கு என அங்கேயே தொடர்கிறார் 

ஏசு-மேரி- சிலுவை பொம்மைகள் ஆர்சி தவிர மற்ற ப்ரோட்டஸ்டண்ட் சர்ச்களிலும் உள்ளது. இதுவரை ப்ரோட்டஸ்டண்ட் சர்ச் ஏசு பொம்மை ரத்தம் விட்டது ஏனச் செய்தி/ கதைகள் இல்லை

மணவாளக்குறிச்சி அருகே இயேசு சொரூபத்தில் ரத்தம் வடிந்ததாக பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி: மணவாளக்குறிச்சி அருகே இயேசு சொரூபத்தில் ரத்தம் வடிந்ததாக பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பழமையான ஆலயம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவர் கிராமத்தில் புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலையில் ஆலயத்திற்கு சென்ற ஒரு மாணவர் பீடத்தில் உள்ள சிலுவையில் அறையப்பட்ட இயேசு சொரூபத்தின் இடது பக்க தோள்பட்டை பகுதியில் ரத்தம் வடிந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மதியம் பிரார்த்தனைக்கு சென்ற பங்குமக்களும் இதைப்பார்த்தாக தெரிகிறது. பின்னர் மாலையில் ஆலயத்திற்கு சென்றவர்கள் சொரூபத்தில் மேலும் ரத்தம் வடிந்து வயிற்றுப்பகுதி வரை உறைந்து நின்றதை பார்த்தாக கூறப்படுகிறது. பொதுமக்கள் திரண்டனர் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. ஏராளமான பொதுமக்கள் பெரியவிளை ஆலயத்திற்கு திரண்டு வந்து ரத்தம் வடிந்ததாக கூறப்படும் சொரூபத்தை பார்த்து பரவசமடைந்தனர். மாலை பிரார்த்தனைக்கு வந்த பங்குமக்கள் அந்த சொரூபத்தின் முன் அமர்ந்து உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். இதுகுறித்து ஆலய பங்குத்தந்தை கூறுகையில், 'ஆலயத்தில் இயேசுநாதர் சொரூபத்தில் வடிந்த ரத்தம் குறித்து உறுதி செய்யப்படவில்லை. உறுதி செய்ய 3 நாட்கள் ஆகலாம். அதன்பின்பே ஆதாரப்பூர்வமாக கூற முடியும்' என்றார். இயேசு சொரூபத்தில் ரத்தம் வடிந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment

UPI மூலமாக பணம் கொள்ளை- மீட்ட சோக கதை- நமக்கு பாடம்

  2 வாரத்துக்கு முன்பு என்னோட Priyadharshini Gopal வங்கிகணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டு என்னுடைய பணம் ரூ.7800 UPI மூலமாக எட...