Sunday, December 13, 2020

மோசேயின் நியாயப் பிராமணங்கள் - இயற்றப்பட்டது எப்போது??

யூத மோசேயின் நியாயப் பிரமாணம் எனும் தொன்மக் கதைகள்  இன்றைய வடிவம் பொமு 130லிருந்து பொஆ 180 இடையே தான் இயற்றப் பட்டது என்பது இன்று பைபிளியல் அறிஞர்கள் ஏற்பதை நாம் காண்போம்.

யோவான் 10:22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. 23இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார்.


  1 மக்கபேயர் 4:36 யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய்த்  தேவாலயத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்” என்றார்கள். 37எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச்சென்றார்கள். 38 தேவாலயம் பாழடைந்திருந்ததையும், பலிபீடம் தீட்டுப்பட்டுக் கிடந்ததையும், கதவுகள் தீக்கிரையானதையும், காட்டிலும் மலையிலும் இருப்பதுபோல முற்றங்களில் முட்செடிகள் அடர்ந்திருந்ததையும், குருக்களுடைய அறைகள் இடிபட்டுக் கிடந்ததையும் அவர்கள் கண்டார்கள்; 39தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் அழுது புலம்பி, தங்கள்மீது சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்; 40நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள்; எக்காளத்தால் அடையாள ஒலி எழும்பியதும் விண்ணக இறைவனை நோக்கி மன்றாடினார்கள். . 41தாம் தூய இடத்தைத் தூய்மைப்படுத்தும்வரை கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி யூதா சிலரை ஒதுக்கிவைத்தார்; 42திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த குற்றமற்ற குருக்களைத் தேடிக்கொண்டார். 43அவர்கள் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்தி, தீட்டுப்பட்ட கற்களை அழுக்கடைந்த இடத்தில் எறிந்துவிட்டார்கள்; 44தீட்டுப்பட்ட எரிபலிப் பீடத்தை என்ன செய்வது என்று அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்; 45அதை வேற்றினத்தார் தீட்டுப்படுத்தியிருந்ததால், தங்களுக்குத் தொடர்ந்து இகழ்ச்சியாய் இராதவாறுஅதை இடித்துவிட வேண்டும் என்ற நல்ல முடிவுக்கு வந்தார்கள்; அவ்வாறே அதனை இடித்துவிட்டார்கள். 46அக்கற்களை என்ன செய்வது என்று அறிவிக்க ஓர் இறைவாக்கினர் தோன்றும்வரை, அவற்றைக் கோவில் மலையில் தகுந்ததோர் இடத்தில் குவித்து வைத்தார்கள்; 47திருச்சட்டப்படி முழுக்கற்களைக்கொண்டு⁕ முன்பு இருந்த வண்ணம் புதிய பலிபீடத்தைக் கட்டினார்கள்; 48தூயகத்தையும் கோவிலின் உட்பகுதிகளையும் பழுதுபார்த்தார்கள்; முற்றங்களையும் தூய்மைப்படுத்தினார்கள்; 49தூய கலன்களைப் புதிதாகச் செய்தார்கள்; விளக்குத் தண்டையும் தூபபீடத்தையும் காணிக்கை அப்ப மேசையையும் கோவிலுக்குள் கொண்டுவந்தார்கள்; 50பீடத்தின் மீது சாம்பிராணியைப் புகைத்துத் தண்டின்மீது இருந்த விளக்குகளை ஏற்றியதும் கோவில் ஒளிர்ந்தது;✠ 51மேசைமீது அப்பங்களை வைத்துத் திரைகளைத் தொங்கவிட்டார்கள்; இவ்வாறு தாங்கள் மேற்கொண்ட வேலைகளையெல்லாம் செய்து முடித்தார்கள். 52நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு⁕ கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, 53தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். 54வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின. 55எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; 56பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்;✠ 57பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணிசெய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள். 58மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. 59ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள்வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.


கிரேக்க வழிபாட்டுத் திணிப்பு

2 மக்கபேயர் 6:1
சிறிது காலத்துக்குப்பின், யூதர்கள் தங்கள் மூதாதையரின் சட்டங்களைக் கைவிடும்படியும், கடவுளுடைய சட்டங்களின்படி நடப்பதை விட்டுவிடும்படியும் அவர்களைக் கட்டாயப்படுத்துமாறு ஏதன்சு நகர ஆட்சிமன்றத்தைச் சேர்ந்த ஒருவனை அந்தியோக்கு மன்னன் அனுப்பி வைத்தான்.
 
2மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி அதற்கு “ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்” எனப் பெயரிடவும், கெரிசிமில் வாழ்ந்த மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அங்கு இருந்த கோவிலை, “அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்” என அழைக்கவும் அவனைப் பணித்தான்.

எபிரேய பைபிள் தொன்மக் கதைப்படி, கானான் எனும் மிகப் பெரும்பகுதி 10 வெவ்வேறு இனங்கள் அம்மண்ணின் மைந்தர்கள், அன்னிய வந்தேறி ஆபிரகாம் வாரிசுகளுக்கு இந்த கானான் பகுதியை தந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை, இன அழிப்பு செய்ய வைத்து கன்னிப் பெண்களை அனுபவிக்க உரிமை தந்து, 32 கன்னிப் பெண்கள் இஸ்ரேலிற்கான தேவன் பங்கு எனவும் தரப் பட்டது எனவெல்லாம் கதை.

  ஆதியாகமம்15:7 ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார்.  18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகிய இனத்தார் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.

 உபாகமம்20:12 அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு.13 கடவுளாகிய ஆண்டவர் அதை உன்கையில் ஒப்படைக்கும்போது, அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்றுவிடு.14 ஆனால், பெண்களையும் சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள். உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம்.15 இந்த நாடுகளைச் சாராத தொலையிலுள்ள எல்லா நகர்களுக்கும் அவ்வாறே செய்வாய்.16 ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே. 17 இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்....  

 உபாகமம் 6:10“ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக் கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.

 பழைய ஏற்பாடு தொன்மக் கதைகளில் முதல் ஐந்து நூல்களை மோசே இயற்றியதாக நம்பிக்கை இயேசுவும், அதை நம்பி அப்படியே சொன்னராம் 

மாற்கு 10:2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 இயேசு அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு இயேசு அவர்களிடம், ' உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே இக்கட்டளையை எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.  8இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார். 

 மத்தேயு 11:13மோசேயின் நியாயப்பிரமாணமும் எல்லாத் தீர்க்கதரிசசிகள் சொன்னவைகளும்  யோவானின் வருகை வரைக்கும் நடக்கவிருந்த செயல்களை அவை உரைத்தன.  

          இந்தக் கதைகள் எப்போது புனையப்பட்டது.   
                  பைபிள் தொன்மம் உள்ளே மூன்று இடங்களில் சட்டங்கள் தொன்ம கதைகள் இயற்றப்பட்டதை காட்டும் சம்பவங்கள் உள்ளன.       
            ராஜா யோசியா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டு பிடித்தனராம்.         

 2 இராஜாக்கள்22: 8 தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.  10 மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான். 11அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார். 12 பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே: 13 நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். 16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன். 17 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.

 எஸ்ரா காலத்தில் வேறொரு கதை                                                       நெகேமியா 8:5 எனவே எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். ஜனங்கள் எல்லோரும் அவனைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் அவன் உயர்ந்த மேடையில் நின்றுக் கொண்டிருந்தான். எஸ்றா சட்ட புத்தகத்தைத்  திறந்ததும் ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றனர். எஸ்றா உன்னத தேவனாகிய கர்த்தரைத் துதித்தான். ஜனங்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அதற்கு மறுமொழியாக “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பிறகு ஜனங்கள் அனைவரும் குனிந்து முகங்குப்புற விழுந்து கர்த்தரை தொழுது கொண்டார்கள்.

எஸ்றா  சட்டப்புத்தகத்தை உரத்த குரலில் ஆண்களும் பெண்களுமாய் கவனித்து புரிந்துகொள்ள வாசித்தான்.  அதாவது எஸ்ரா காலத்தில் சட்டங்கள் உருவானது என்பது தெளிவாக்கும்.  

 யூதர்களின் மிக முக்கியமான் 3 பண்டிகைகள் கூடாரப் பண்டிகை, பஸ்கா பண்டிகை மற்றும் பெந்தகோஸ்தே

அறுவடைக்கு பயிர் தயாராய் இருக்கையில் பறவை மற்றும் திருட்டில் இருந்து காக்க நிலத்தில் அறுவடைக்கு முன் கூடாரம் செய்து தங்குவர் என்பது லூக்கா 2:6ல் காண்கிறோம், அதே போல அறுவடை செய்த முதல் பயிரை இயற்கை தெய்வத்திற்கு படைப்பதே பஸ்கா, 50 நாள் கழித்து பார்லி அறுவாடைப் பண்டிகையே பெந்தகோஸ்தே;  இந்த இயற்கை - அறுவடைப் பண்டிகைகளுக்கு ஒரு கதையை செய்து ஜெருசலேமில் உள்ள ஒரே தெய்வ ஆலயத்தில் லேவியர் ஜாதி அனுபவிக்க அங்கு மட்டுமே பலி என மாற்றி கதை செய்தது எப்போது எனக் கண்டால் நம்க்கு மோசே சட்டன் புனைந்த காலம் புரியும் 

கூடார பண்டிகை வேறொரு கதை                                                             நெகேமியா 8:13 பிறகு அம்மாதத்தின் இரண்டாவது நாளில் அனைத்து குடும்பத் தலைவர்களும் போய் எஸ்றாவையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் சந்தித்தனர். அவர்கள் அனைவரும் வேதபாரகனாகிய எஸ்றாவைச் சுற்றி சட்டத்தின் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள கூடினார்கள். 14-15 அவர்கள் கற்று சட்டத்தில் கட்டளைகள் இருப்பதைக் கண்டனர். கர்த்தர் இந்தக் கட்டளையை மோசே மூலம் ஜனங்களுக்குக் கொடுத்தார். ஆண்டின் ஏழாவது மாதத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரங்கள் விழா கொண்டாட எருசலேமிற்குப் போக வேண்டும். அவர்கள் தற்காலிகமாக கூடாரங்களில் அங்கே குடியிருக்கவேண்டும். ஜனங்கள் தங்களது சகல நகரங்களுக்கும் எருசலேமிற்கும் போய் இவற்றைக் கூறவேண்டும்:... 17 ... அவர்கள் அமைத்த கூடாரங்களிலேயே அவர்கள் குடி இருந்தார்கள். நூனின் மகனாகிய யோசுவாவின் நாட்கள் முதல் அந்நாள்வரை இஸ்ரவேல் ஜனங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையை இவ்வாறு கொண்டாடவில்லை. ஒவ்வொருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். 

  பஸ்கா பண்டிகை

2 இராஜாக்கள்23:22 நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் அரசர்களோ யூத அரசர்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை. 

 அதாவது மோசே சட்டங்கள் இந்த காலங்களில் உருவானதான தோற்றம் வரும்படி கதை  

மறு அர்ப்பணிப்பு பண்டிகை 

யோவான் 10:22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தெய்வாலயப் மறு அர்ப்பணிப்பு பண்டிகை வந்தது. 23இயேசு தெய்வாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார். 

பொமு 164 ல் யூதாஸ் மக்கபேயு என்பவர் இப்பண்டிகையை ஏற்படுத்தினார். அதாவது அந்தியோச்சு எப்பிபேனஸ் என்ற பேரரசன் எருசலேம் தெய்வாலயத்தில் ஒலிம்பஸ் தேவன் சிலை வைத்து அந்நிய வழிபாட்டை ஏற்படுத்தி தெய்வாலயத்தைத் தீட்டு படுத்தினான். இவைகளினால் உண்டான மாற்றம் யூதாஸ் மக்கபேயு போன்றவர்களை எழுப்பியது. அவர்களின் அயராத போர் முயற்சியினால் அந்நியர் தோற்கடிக்கப்பட்டு எருசலேம் தெய்வாலயம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு கிமு 164 டிசம்பர் மாதத்தில் நடந்தது. இதை தொடர்ந்து இந்நாளை தெய்வாலய  மறு அர்ப்பணிப்பு பண்டிகையாக அனுசரித்து வந்தனர். 

2 மக்கபேயர் 6: 2 அந்தியோக்கு மன்னன் எருசலேமில் இருந்த கர்த்தர் தெய்வ ஆலயத்தில்  “ஒலிம்பஸ் தேவன் சிலையும், கெர்சிம் மலைஇருந்த கர்த்தர் தெய்வ ஆலயத்தில், தேயுஸ் தேவன் சிலையும் வைத்தனர்...

இதில் நாம் காண்பது இஸ்ரேலிற்கான தெய்வம் கர்த்தருக்கு ஜெருசலேமிலும், கெர்சிம் மலையிலும் தெய்வ ஆலயம் பொமு164 ல் இருந்துள்ளது, ஆனால் நாம் தெளிவாக மோசே சட்டங்களில் ஒரே இடம் மட்டும் என்றும் அது சாலமொன் ராஜ காலத்தில் இருந்து ஜெருசலேம் தெய்வாலயம் எனக் காண்கிறோம். இன்றுள்ள மோசே சட்ட்ங்கள் இதற்கு பின் தான் இன்றைய வடிவம் பெற்றது. 

யூதர் - சமாரியர் பிளவு முழுமையாக நிகழ்ந்தது எப்போது    

சமாரியா என்பது இஸ்ரேலிற்கும் யூதேயாவிற்கும் இடைப்பட்ட பகுதி, பைபிள் கதைப்படி 12 கோத்திரங்களில் (எபிராயிம், மானசே ) எபிரேயர் தான். 

போரில் கிரேக்கரோடு இணைந்தனர் என அரசியல் ரீதியில் ஒதுக்கினர்.  இதன்பின் பொமு126ல் யூதர்களால் யூதா ஹிர்கானஸ் எனும் மன்னன் போரில் சமாரியர் யாவே கர்த்தர் ஆலயம் அழிக்கப்பட்டது. அதன் பின் எபிரேயர்கள் சமாரியா செல்லக் கூடாது, சமாரியர் ஜெருசலேம் வரக் கூடாது. 

பழைய ஏற்பாடு முழுக்க ஜெருசலேம் மட்டும் எனும்படி மாற்றப் பட்டது.  சமாரியர் யூதரிடமிருந்து பிரிந்தபோது, பழைய ஏற்பாட்டில் நியாயப் பிரமாணங்கள் எனப்படும் முத 5 நூல்கள் மட்டுமே உருவாகி  ருந்தமையால், சட்டங்கள் எனும் டோரா(தௌராத்) மட்டுமே சமாரிய விவிலியம்.  

ஏசு யூத இனவெறியில் சமாரியரோடு இணைவதை தவிர்த்தார்  

மத்தேயு 10:5..இயேசு அவர்களிடம்,, யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்)  மட்டும்   செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 

யோவான் 4:4 கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார்... 9“குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)

நாம் பார்த்த சாலமோன் முதல், ராஜாக்கள், நாளாகமம், எஸ்ரா, நெகமையா இவை எல்லாம் எப்போது எழுதப் பட்டது என பைபிள் உள்ளேயே உள்ள ஆதாரம் 

2 மக்கபேயர் 2:13.. நெகேமியா ஒரு நூல்நிலையம் நிறுவி மன்னர்கள், இறைவாக்கினர்கள்பற்றிய நூல்களையும் தாவீது எழுதியவற்றையும் நேர்ச்சைப் படையல்கள் தொடர்பான மன்னர்களின் மடல்களையும் அதில் சேகரித்து வைத்தார். 

.இவை எல்லாமே பொமு முதல் நூற்றாண்டில் இயற்றினர் என ஆதாரம் தெளிவாக உள்ளது

ஆதியாகமம்11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 31 தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

 ஆதியாகமம்12:1ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். 2உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.  3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார்.




மோசே சட்டங்கள் உருவான கதையைக் காணலாம்.

2இராஜாக்கள்23: 21 பிறகு அரசர் மக்கள் எல்லோரையும் பார்த்து, இவ்வுடன்படிக்கை நூலில் எழுதப்பட்டுள்ளதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாடுங்கள்.22 இந்தப் பாஸ்காவைப்போல், முன்பு இஸ்ரயேலக்குத் தலைமை தாங்கிளய நீதித் தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் எல்லாக் காலங்களிலுமோ கொண்டாடப்பட்டதில்லை.23 யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் எருசலேமில் ஆண்டவரின் பாஸ்கா கொண்டாடப்பட்டது.
பஸ்கா, கூடாரப் பண்டிகை போன்றவை உண்மையில் விவாசய அறுவடைக் காலப் பண்டிகைகள். பஸ்கா, கூடாரப் பண்டிகை, பெந்தகோஸ்து போன்றவை உண்மையில் விவாசய அறுவடைக் காலப் பண்டிகைகள்.  லேவியர் 23:5- 31,33- 37 மற்றும் எண் 28:16- 31, 29:1- 15
விவசாயிக்ளின் அறுவடைப் பண்டிகைகளை -யாத்திரையோடு இணைக்கும் கதைகள், 600- 700 வருடம் இல்லாத அளவில் கொண்டாட்டமாம்.


எஸ்ரா6:14 இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்: வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்15 மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.
எஸ்ரா7:1இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார்.
12 மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது:13 என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிரும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன்.
இம்மன்னர்களில்  தாரியு, அர்த்தக்சஸ்தா- 1, தாரியு- 2,அர்த்தக்சஸ்தா- 2  அர்த்தக்சஸ்தா- 3, தாரியு- 3 என்ற வரிசையில் பொ.மு.330 வரை ஆண்டதாக வரலாறில் கூறுகின்றனர்
பைபிளியல் அறிஞர்கள்படி- 4 பிரிவினர் - எல், யாவே என கடவுள் பெயரை வைத்து புனைந்தவர், ஜெருசலேமில் மட்டுமே என்னும் உபாகமக் குழு, யூதப் பாதிரிகள் லேவியருக்கெ உரிமை எனும் நான்கு பிரிவினர் புனைந்தனர்.இதில் மேலுள்ள ராஜா காலத்தில் உபாகம சிலவும், எஸ்ரா காலத்தில் சிலவும் வடிவு பெற, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இன்றைய வடிவம் பெற்றது, எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் ஒரே சமயத்தில் தான் புனையப்பட்டது.
ஆனால் பழைய ஏற்பாடு புனையல் அடிப்படை- யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், யூதர்களைக் காப்பாற்ற செங்கடல் இரண்டாகப் பிளந்து தூணாக நின்று வழிவிட்டதாகக் கதை. இஸ்ரேலின் ஆட்சி உரிமை அவர்களுக்கு என நிலை நாட்ட அரசியல் சூழ்ச்சியே இப்புனையல்கள்
ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது-Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."
ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது
ஆபிரகாம் வாழ்வில் இரண்டுமுறை- மனைவி தங்கை என்பது வாய்ப்பில்லை.அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும். இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழகானவர்கள்- இஸ்ரேலின் யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.
செங்கடல்-கதை New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editorOne has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745
மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49 
நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்து -முள்ளனர். 
தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17

பைபிளை நடுநிலையோடு முழுமையாக ஆராய்பவர்கள் கண்டது, மோசே சட்டத்தில் கர்த்தருக்கு ஒரேஒரு இடத்தில் மட்டும் பலி, என்றெல்லாம் இருக்க, தீர்க்கர்கள் கூட பல இடங்களில் பலி செய்து வழிபட்டதாகக் கதையில் உள்ளதைக் கண்டனர். பின் மேலும் ஆராய மோசே சட்ட்ங்கள் எனும் புத்தகங்கள் உருவான கதை பைபிளிலேயே உள்ளதை கண்டனர்.

1 இராஜாக்கள் 6:1சாலொமோன் அவ்வாறே ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின் இரண்டாவது மாதமாகவும் இருந்தது.

சால்மன் காலம் பொ.மு.970- 930 எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோசே  காலம் அதற்கு 480 வருடம் முன்பு எனில் பொ.மு 16 - 15 நூற்றாண்டு ஆகும். 

பொ.மு.15ம் நூற்றாண்டிலிருந்த்து மோசே சட்டம் வைத்து வாழ்ந்தும் பின் முறையாக வரலாறு உள்ளதாகவும் புனையப்பட்டுள்ள நிலையில் கிழே உள்ள கதையைக் கண்டனர்.

 2 இராஜாக்கள்22:8 தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். 10 மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.11 அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.12 பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே:13 நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். 16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.17 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்து விட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.

இந்த ராஜா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டு பிடித்தனராம்.  ஆனால் எஸ்ரா காலத்தில் வேறொரு கதை

நெகேமியா 8: ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப் புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர்.

எஸ்றா  சட்டப்புத்தகத்தை உரத்த குரலில் ஆண்களும் பெண்களுமாய் கவனித்து புரிந்துகொள்ள வாசித்தான்.  அதாவது எஸ்ரா காலத்தில் சட்டங்கள் உருவானது என்பது தெளிவாக்கும்.  

சாமுவேல், இராஜாக்கள் நாளாகமம் எஸ்றா நெகேமியா - இந்த தலைப்பில் உள்ள புத்தகங்கள் பொ.மு. 400 - 300 வாக்கில் பழங்கதைகளை தொகுத்து, யூத மதத்தினை சீர்படுத்தியதாக சொல்ல்ப்படும்.
பைபிளியல் அறிஞர்கள்படி- 4 பிரிவினர் - எல், யாவே என கடவுள் பெயரை வைத்து புனைந்தவர், ஜெருசலேமில் மட்டுமே என்னும் உபாகமக் குழு, யூதப் பாதிரிகள் லேவியருக்கெ உரிமை எனும் நான்கு பிரிவினர் புனைந்தனர்.இதில் மேலுள்ள ராஜா காலத்தில் உபாகமம் சிலவும், எஸ்ரா காலத்தில் சிலவும் வடிவு பெற, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இன்றைய வடிவம் பெற்றது.

இதில், மேலுள்ள ராஜா காலத்தில் மோசே சட்ட நூல் கண்டுபிடித்து எடுத்ததாகக் கதை, இக்காலத்தில் உபாகமத்தின் சில பகுதிகள் புனையப் பட்டதாக பைபிளியலாளர் ஆய்வுகள் மெய்ப்படுத்திகின்றது. எஸ்ரா படித்தது, மோசே சட்டப் பகுதியில் "பா" மரபு, இவர் காலத்திற்குப் பின்பு கிரேக்க காலத்தில் தான் இன்றைய வடிவில் பொ.மு. 300- 200 இடையே சட்டங்கள் உருவாகின என்பது நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் பைபிள் அடிப்படையில் ஏற்பது.

 இவற்றைப் பல பைபிளியல் நூல்களும் உறுதிப் படுத்துவதையும் காணலாம். 

//In the years, 539 - 333 BCE, the Persian empire was dominant and it was in this period that Judaism consolidated as a religion based on the Bible.
Authoritative tradition which appears to suggest that Ezra, a priest and scribe from Babylon was an agent of Persian Government in establishing the Torah as the nation law of Judeans in Judea and Syria. He was either a contemporary of Nehemiah in the mid 5th Century BCE or lived a century later ..  Nothing outside the Bilbe adds anything of Historical value to the Picture of Moses.// Lions Hand book of Religions ; page- 280
Many laws in the Pentateuch or Torah, the first five books were not different from those of the surrounding nations. " page- 238, Vol.3, Grolier's Encyclopedia.
"Although there was no canonization of a complete tradition text until late 2nd century CE, no change was made in the basic structure of the Pentateuch and Historical books after the 3rd or 2nd Century BCE" . Pictorial Biblical Encyclopedia; Page -173.
//"The OT Genealogies are mostly the work of the Pentateuchal Priestly writer in the Persian Period from 6th to 4th Century BCE. .. Some such as Genesis Chapters 4-5 have parellels in Babylonian Literature".// New Catholic Encyclopedia, Vol-6, Page 319

மோசே தான் சட்ட்ங்கள் பெற்றதாக் ஏசு சொன்னதாக சுவிசேஷங்கள் புனைகின்றன.

மாற்கு 10:3இயேசு அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார். 4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.   5 அதற்கு இயேசு அவர்களிடம், உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே  இக்கட்டளையை எழுதி வைத்தார்.

செங்கடல்-கதை :  New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745

மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 300௨00 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்க- வில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49

நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர். 
தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (Mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15
அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17

 இதனிடையே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று. மேற்கத்திய நாடுகளின் பெரும்பாலனோர் கிறிஸ்துவர், இவர்கள் பைபிள் கடவுள் வார்த்தை எனும் நம்பிக்கையில் 19, 20ம் நூற்றாண்டின் சில புதைபொருள் ஆய்வாளர்கள் எந்த ஒரு தேடுதலையும் பைபிளோடு இணைத்து பைபிள் சரியானது என மேம்போக்கான பார்வையில் புனைந்தனர். ஆனால் கிடைத்த பொருட்களை தெளிவாக ரேடியோ கார்பன் 14 மூலம் தெளிவாக காலம் குறிக்கும் அறிவியல் வர பழைய ஆய்வுகள் தவறு என உடைந்தது.   இதில் ஒரு பெரும் முயற்சி இதில் ஒரு பெரும் முயற்சி  இஸ்ரேல் ப்ராங்கிஸ்டன் எனும் அன்றைய இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக புதைபொருள் ஆய்வுத் துறை துணைத் தலைவர் நூல் "The Bible Unearthed" ,   தற்போது தலைவர், இதற்கு பெரும் எதிர்ப்பு ஆரம்பத்தில் எழுந்தாலும் பெருமளவில் ஏற்கப்பட்டது, ஏன் என்றால் ஆய்வின் தரவு தெளிவானது. 

20க்கும் மேற்பட்ட பைபிள் வசனங்களில் ஒட்டகத்தை வீட்டு கொட்டிலில் ஆபிரகாம் வைத்து இருந்ததாகக் கதை.  ஒட்டகங்கள் அரேபியாவில் இருந்தன, அது பற்றி சில கல் குகை வரைபடங்கள் உள்ளன.

ஆனால் முழுமையாக பழக்கப்பட்டு வீட்டு கொட்டிலில் கட்டிவைத்து வாழ்ந்தது எப்போது, என்பதே கேள்வி. இது பற்றி விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்இங்கே
// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//

நியாயப்பிரமாணங்கள் பொ.மு.300- 200 இடையே புனையப் பட்டவையே.

மோசே இல்லவே இல்லை

தற்போது மேலும் ஒரு தரமான ஆய்வு வெளியீடு, இதுவும் இஸ்ரேலின் டெல் அவிவ் ல்கலைக்கழக ஆய்வாளர்களான லிடார் சேபிர்-ஹென் மற்றும் ஈரேஸ் பென்-ஜோசெப் ஆகியோர்-இதுவரை அறியப்பட்ட அதி புராதன ஒட்டக எலும்புகளில்  மேற்கொள்ளப்பட்ட  கார்பன் வயதறிமுறை ஆதாரங்களைக் காட்டி  மத்திய கிழக்கில் ஒட்டகங்களின் வருகை கிறிஸ்து காலத்திற்கு  9 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான்  என இவர்கள் கூறுகிறார்கள்.

இவற்றின் இணைப்புகள் இங்கே ஒன்றுஇரண்டு

 நியாயப்பிரமாணங்கள் பொ.மு.300- 200 இடையே  கிரேக்க காலத்தில், அடிமைப்பட்டு இருந்த காலத்தில், மக்களை நாம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், இந்நாட்டு ஆட்சி உரிமை நமக்கு இஸ்ரேலின் எல்லை தெய்வம் தந்தது எனப் புனையப் பட்டவையே.


No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி