Saturday, December 12, 2020

உலகின் முதல் சர்ச்- 4ம் நூற்றாண்டு ஆர்மீனியாவில் உள்ள எச்மியாட்சின்

கிறிஸ்துவ மதம் என்பதன் வளர்ச்சி தற்போது பல பன்னாட்டு பல்கலைக் கழக ஆய்வுகள் வெளிப்படுத்து உள்ளது.

சுவிசேஷக் கதை யூத மனிதன் ஏசு மரணம் ஏப்ரல் 30, எனக் கொண்டால், 40 வாக்கில் 1000 மக்களும் பொஆ 100 வாக்கில் 5000 மக்கள் கூட கிறிஸ்துவம் ஏற்கவில்லை, 4ம் நூற்றாண்டில் ரோமன் வாள் பலமே கிறிஸ்துவம் பெருமதமாக உருவாகக் காரணம்

உலகின் முகத் தொன்மையான ஆர்மீனியாவில் உள்ள எச்மியாட்சின் கிறிஸ்துவ ஜெபக்கூடமே உலகின் முதல் சர்ச் 4ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கட்டப் பட்டது

According to scholars it was the first cathedral built in ancient Armenia,[E] and is considered the oldest cathedral in the world

கிறிஸ்துவம் மிகக் குறைவாக ஒவ்வொரு ஊரிலும் சிறு கூட்டம் மட்டுமே, ஒரு மத நம்பிக்கையாளர் வீட்டிலேயே  ஜெபக்கூட்டம் நடத்தினர்;  சிரியாவில் உள்ள சர்ச் தான் முடதலில் ஒருவர் வீட்டை சர்ச் என ஜெபக்கூடமாய் மாற்றியதாம்

கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை - ஏசு காரணமில்லை

பைபிள் நாயகர் ஏசு மரணம் பொகா-30ல் என்கின்றனர், அவர் மரணத்திற்கு பின்னர் தொடங்கிய சர்ச் இன்று உலகின் 3 பெரும் மதங்களுள் ஒன்று, ஆனால்  அதன் வளர்ச்சி வேகம் என்ன என்பதை அறிவது அவசியம். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பக வெளியீடான உலக கிறிஸ்துவ கலைகளஞ்சியம்[i] முதல் நூற்றாண்டு இறுதியில் 10 லட்சம் எனக் கட்டுகதை விடுவதை நிராகரித்து, பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க பதிவுகள் & புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள்  கிறிஸ்துவ  மத வளர்ச்சி பற்றிய நூல்களை நாம் பார்க்குமுன் விவிலியத்தில் உள்ள குறிப்புகளைப் பார்ப்போம்.

புதிய ஏற்பாடு சொல்லும் கதை
சர்ச் ஆரம்பம் பற்றிய கதைகள் அப்போஸ்தலர் நடபடிகள் (பணிகள்) நூலில் உள்ளது. ஏசு மரணத்திற்கு 40நாள் பின்பாக ஏசு சீடர்கள் கூடிய போது 120 பேர்[ii] என ஒரு செய்தி உள்ளது. அதற்குப் பின் ஏசு இறந்த 50ம் நாள் யூத பெந்தகோஸ்தே பண்டிகை அன்று பெரும் அதிசயம் நடந்ததாம், படிப்பறிவில்லா ஏசு சீடர்கள் எபிரேய மொழியில் பேசியதை அங்கு கூடி இருந்க மக்கள் அரெபி, கிரேக்கம், பாரசீக என அவரவர் மொழிகளில் கேடனராம், அதன் பின்பு அன்றே 3000[iii] மக்கள் சர்ச்சில் இணைந்கனராம். சில நாட்கள் பின்னராக 5000[iv] மக்கள் எனவும் சொல்கிறது. ஏசுவின் மரணத்திற்கு 15 - 18  வருடம் பின்பு ஜெருசலேமில் மட்டும்[v] ஆயிரக் கணக்கான யூதர்கள் கிறிஸ்துவர்களாக உள்ளனர் எனவும் ஒரு சம்பவத்தில் சொல்லப் படுகிறது.
ஏசு சீடர்கள் யூதர்களிடம் மட்டுமே பரப்பினர், ஆனால் பவுல் என்பவர் ஏசு போதனைகளை யூதர் அல்லாதவர்களுக்கு பரப்பி பல ஊர் சர்ச்சுகளுக்கு எழுதிய கடிதங்கள் என 14 உண்டு,  இவரால் ஒரு கிறிஸ்து கூட்டம் இருக்க வேண்டும்.
சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.

கிறிஸ்துவ மத ஆர்ம்பக் கால பரப்பும் கூட்டங்கள் பற்றிய அறிஞரின்[vi] குறிப்பு
ஆரம்ப கால கிறிஸ்துவ கூடுதல் என்பது ஒழுங்கு கண்ணியம் இல்லாத பிதற்றுகிற  கூச்சல் ஆரவாரம் நிறைந்தது, அவர்கள் தாங்கள் ஆதாரமற்ற புனிதன் என ஒரு மோசடியாய் ரோம் ஆட்சியால் கொல்லப்பட்ட ஒரு கிளர்ச்சியாளரை செத்தபின் உயிர்த்தார் என மோசடியாய் கூறி காட்டும்படி கேட்டால் அவர் வானத்தில் உள்ளார், உலக முடிவின் போது வருவர் என்றனர்.

வரலாற்று சமூகவியல் ஆய்வுகள்

  பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள் நூல்கள்                        

 1] Rodney Stark,  The Rise of Christianity (1996) [vii])
2]  W.V. Harris, ed., [viii] The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).
3] Ramsey MacMullen, Christianizing the Roman Empire [ix]
ராட்னி ஸ்டார்க் அவருடைய முனைவர் பட்ட ஆய்வினை நூலாகவும் ஆக்கியதில், பல்வேறு தற்கால தரவுகள் போன்றவற்றை ஆராய்ந்து ஏசுவின் மரணம் பின்பு 10 ஆண்டு பின்பு பொ.ஆ.40ல் 1000கிறிஸ்துவர் என ஆரம்பித்து 4ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 30 லட்சம் தொட்டது என்றார். ராட்னி ஸ்டார்க் ஆய்வில் அமெரிக்காவில் அரசு ஆதர்வு இன்றி வளர்ந்த மோர்மன் சர்ச் மற்றும் ஹரே கிறுஷ்ணா இயக்கம் பற்றிய செய்தி பரவும் வேகம் இவற்றை ஆரம்ப அளவிற்கும் வளர்ச்சிக்கும் எடுத்துக் கொண்டார்.

பைபிள் அறிஞர்களையும் வரலாற்று ரீதியிலும் கண்டோம். கிறிஸ்துவ சர்ச் சார்ந்தோர் கூறுவதை- வாடிகன் சர்ச்சின் வரலாற்று ஆய்வாளர் ப்ரூஸ் மெலினா[x] ஆய்வு விமர்சனப்படி, ஸ்டார்க் வளர்ச்சி வேகம் மிக அதிகம், ரோம் சர்ச் குறிப்புகள்படி 325ல் 8 லட்சம் கிறிஸ்துவரே என்கையில் வளர்ச்சி வேகம் 2.5% என்றார். 
வாடிகன் சர்ச் அறிஞர் கூறும் வளர்ச்சி

வருடம்
கிறிஸ்துவர்கள்
40
1000
50
1250
100
3815
150
11642
200
35527
250
108420
300
330872
325
581611

ஏசு மரணத்திற்கு 100 ஆண்டு பின் தான் 10000 மக்கள் அதாவது, மொத்தமான 5.5கோடியில் எனில் பத்தாயிரம் மக்களிற்கு இருவர் கூட இதை ஏற்கவில்லை, ஏசு கதைகளோ, அதிசயங்களால் சர்ச் வளரவில்லை.

பவுல் கடிதங்களில் சர்ச்சிலிருந்து வெளியேறியவர்களையும் காண்கிறோம். யோவான், யூதா கடிதங்களில் – கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறியவர்கள் கடைசி காலக் கிறிஸ்து எனவும் சொல்லப் படுகிறது. சேர்ந்தவர்களில் சில- பலர் மனம் திருந்தி வெளியேறியதும் புதிய ஏற்பாடே காட்டும்.

முதல் நூற்றாண்டில் ரோம் ஆட்சிக்குக் கீழான மக்கள் தொகை 5.5 கோடி என அறிஞர்கள் ஆய்வு கணக்குகள் கூறுகின்றன. இது 4ம் நூற்றாண்டில் 6 கோடி என ஆனதாம்.  ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்கள் தொகை 6 கோடி, பெரும் மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை மதம் என இருந்தது. 250 வாக்கில் பாதிரி ஓரிகன் எழுதுகையில் நாங்கள் எண்ணிக்கையில் பெறும் கூட்டமல்ல எனவும் தெளிவாய் சொல்லி உள்ளார். பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்  ரீதியாக கணக்கிட்டு 1 -7%மக்கள் கிறிஸ்துவர்கள் என விவாதிக்கின்றனர்.5% எனக் கொண்டால் அதாவது 30 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு.  அடுத்த 50-60 ஆண்டுகளில் இது 5.5 கோடியைத் தொட்டது. 

ரோம் ஆட்சிக் கத்தியும் அதிவேக வளர்ச்சியும்
பொ.ஆ.300 வாக்கில் 4 லட்சம் என்றது 400 வாக்கில் 5.5கோடியையும் தாண்டியது, ரோம் ஆட்சியின் மதமாய் மாற, அரசு பதவிகள், சலுகைகள் கிறிஸ்துவருக்கு எனவும் மாறோதோர் துன்புறுத்தலுமே காரணம் என அனைத்து ஆய்வாளரும்[xi] ஏற்கின்ற்னர்.

அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை. 
[i] World Christian Encyclopedia 1982 David B. Barrett,
[ii] அப்போஸ்தலர்1:15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது 
[iii] அப்போஸ்தலர்2:41
[iv] அப்போஸ்தலர்4:4
[v] அப்போஸ்தலர்21:20
[vi] “Early Christian meetings involved anarchic and undignified shoutings and raving.  They worshipped a Jewish Healer who had been executed as a rebel against Rome and absurdly claimed that their dubious Holy man had come back to life again, had risen in to the Sky and would return at any momnent trailing celestical clouds of glory to found a Heavenly Kingdom on earth.   -page-17 The great religions – Richard Cavendish
[vii] The Rise of Christianity
[viii] The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation
[ix] https://www.amazon.com/Christianizing-Roman-Empire-D-100-400/dp/0300036426
[x] Bruce Malina, who has argued that Stark’s estimated growth rate is too high: 220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, “scientifically” speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. –— Bruce Malina, Book Review of Rodney Stark’s The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.  http://infidels.org/library/modern/richard_carrier/improbable/luck.html#10
[xi] In 313, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian.  The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia

No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி