Tuesday, December 1, 2020

இந்தியக் கல்வியை அழித்த கிறிஸ்துவம் - அழகிய மரம்

 கிறிஸ்துவ ஆங்கிலேயர் இந்தியாவைக் கொள்ளை அடித்தது 9000 லட்சம் கோடிகள் தான், மோசமான ஆட்சியால் செயற்கை பஞ்சத்தால் கொன்றது 10 கோடி மக்களை தான்.

 அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி


 1931 ஆம் ஆண்டு வட்ட மேஜை மகாநாட்டில் மஹாத்மா காந்தி சொன்னது “பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது , இங்கு நிலவிய அமைப்புகளை (கல்வி அமைப்புகளை) புரிந்துகொண்டு அதை வளர்தெடுப்பதற்க்கு பதிலாக அவற்றை அப்புறபடுத்த தொடங்கினார்கள் . மண்ணை தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள் . அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டுவிட்டார்கள் .அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது”.

மஹாத்மா காந்தி  அப்படி சொல்வதற்கு ஓராண்டு முன் அமெரிக்கவை சேர்ந்த பாதிரி மறைதிரு. ஜேபஸ் P சுண்டர்லேண்ட் என்பவர் எழுதிய India in Bondage(PDF Here) நூலில் இங்கிலாந்து ஆட்சியின் அரசு ஆவணங்கள் கொண்டே இந்தியா உலகின்  கல்வி, தொழில் நுட்பத்தில், தொழிலில் உச்சத்தில் இருந்தது, கிறிஸ்துவ ஆங்கிலேயரால் சூரையாடப் பட்டதை சொன்ன நூல் இந்தியாவில் தடை செய்யப் பட்டது.

 உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் வில் டுரான்டு - The Case for India அவரும் உலக நாகரீகத்தின் தாய் இந்தியா என்பதை எழுதி உள்ளார்
   
ஸ்ரீ தரம்பால் (1922 – 2006) ஒரு காந்திய செயல்பாட்டாளர். அவர் பல ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்தார். 1960 ஆம் ஆண்டு வாக்கில் அவர் சில ஆய்வுகளுக்காக லண்டனில் உள்ள ‘இந்தியா ஹௌசிலும் ‘ ( INDIA HOUSE ) அங்குள்ள பல அருங்காட்சியக நூல்நிலையங்களிலும் 18 – 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் – இந்தியா தொடர்புகள் பற்றி ஆவணங்களை ஆராய்ந்தார் .
முதல் பாகம் 18ம் நூற்றாண்டில் இந்தியாவில் பல துறைகளில் நிலவிய உன்னத விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியை விளக்குகிறது. இதை   கிறிஸ்துவ ஆங்கிலேயர்கள் எப்படி திட்டமிட்டு அழித்தார்கள் 
இரண்டாவது பகுதி, 18ம் நூற்றாண்டுவரை, இந்தியர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை போன்ற கிறிஸ்துவ அரசினர் எதிர்ப்பு முயற்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் விளக்குகிறது,
மூன்றாவது பாகம்.  “அழகிய மரம்”
நான்காவது பாகம் இந்திய சமுதாய அமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளின் நிலையை விவரிக்கிறது.சுயேச்சையாக, சர்வ பொருளாதார, அரசியல் சுதந்திரங்களுடன் விளங்கிய நமது கிராம சமுதாயங்கள் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. 
ஐந்தாம் பாகத்தில், நமது இந்திய அரசியல்-சமுதாய பாரம்பர்யத்தின் தனித்தன்மை என்ன, அவற்றின் முக்கிய அம்சங்கள் எவை. அவற்றை எவ்வாறு காலத்திகேற்றவகையிலும், நமது தற்கால லட்சியங்களுக்கு இசைந்தவாறும் மாற்றிக் கொள்வது போன்ற பல விஷயங்களை அலசியிருக்கிறார்.

  1822 ஆம் ஆண்டு மதராஸ் ப்ர்சடேன்சி (Madras Presidency) ஆளுனர்  சர். தாமஸ் மன்றோ (Sir Thomas Manroe) இந்தியக் கல்வி பற்றிய ஓர் அளவீடு ( Survey ) எடுக்கும்படி வருவாய்த் துறைக்கு (Revenue Board) ஓர் ஆணைப் பிறபித்தார் . வருவாய்தத்துறையின் செயலர் (Revenue Board Secertary) இந்த ஆணையை அவர்கீழ் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் (District Collector) அனுப்பினார் . அன்றைய மதராஸ் ப்ர்சடேன்சி என்பது ஒரிசாவின் சில பகுதிகள், ஆந்திரா , தெலங்கான பகுதிகள் , தமிழ்நாடு , கேரளாவின் சில பகுதிகள் என பரந்து விரிந்த பகுதி சுமார் 25 மாவட்ட ஆட்சியர்கள் கீழ் உள்ள பகுதி . இதேபோன்ற உத்தரவு கொல்கத்தா மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கும் சென்றது. எப்படி தகவல்கள் ஒரே மாதிரியாக சேகரித்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு போலி மாதிரிப் படிவம் கூட அனுப்பப் பட்டது (Template – Filled in Format). இந்த அளவீடு செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனுப்பிய அந்த ஆய்வு அறிக்கையை முழுமையான கோணத்தில் ஆங்கிலேய அரசு பரிசீலனை செய்து பார்த்ததில் ஆட்சியாளர்களே வியந்து போனார்கள் . இந்த ஆய்வு அறிக்கையை படித்த ஸ்ரீ தரம் பாலும் , ஆச்சரியத்தில் உறைந்து போனார் !
 மேலே குறிப்பிட்ட ஸ்ரீ தரம்பாலின் நூலில் அந்த ஆய்வு அறிக்கையில் ஏராளமான தகவல்கள் இருப்பினும் , இந்தப் பதிவுக்கு சம்பந்தமாக முக்கியமான சில விஷயங்களை கிழே பார்க்கலாம் :

– அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான கல்லூரிகள் இருந்தன
– சரசரியாக அடிப்படைக் கல்வி புகட்டும் பள்ளிகள் கிராமம் தோறும் இருந்தன
– அடிப்படைக் கல்வி சராசரியாக 1௦ ஆண்டுகள்
– இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை .
– இந்தக் கல்வி முறை ‘ எண்ணும் எழுத்தும்கண்எனத்தகும் ‘ என்றும் , ‘ ஆச்சாரிய தேவோ பவ ‘ என்றும் , நமது நீண்ட பாரம்பரியமான அணுகுமுறையில் தான் , கல்வியை – ஒரு வழிபாட்டு மனோ நிலையில்தான் உருவகித்து , மொத்த சமூகமும் இயங்கியது .

மிக முக்கியமான இந்த ஆய்வு அறிக்கையில் ஒரு தகவல் , அது கல்வி கற்கும் மாணவர்களின் சாதி பற்றிய விவரங்கள். மாணவர்களின் சாதி – பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர், பிற சாதியினர் (பட்டியல் சாதி). 

ஆம், ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம்.

 உலகில் எல்லா நாடுகளிலுமே, 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கான கல்வி என்ற லட்சியம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் புரட்சிக்குப் பிறகு. உலகில் பொதுவாக, கல்வியானது மத நிறுவனங்களின் பொறுப்பிலேயே விடப்பட்டிருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட இந்தியாவில் அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. தொழில்கல்வி, எல்லா நாடுகளையும்போலவே தொழில் குழுமங்களுக்குள்ளாகவே கைமாற்றித் தரப்பட்டு வந்திருக்கிறது. ஆசிரியர்கள், மன்னர்கள், வணிகர்கள், நில உடமையாளர்கள், எளிய மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்து, பாரம்பரியக் கல்வி மரத்தை நீரூற்றி, உரமிட்டு, வேலியிட்டுப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். 

பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்ததும், வரி வசூலை அதிகரிக்க என்ன வழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த நிலங்களில் கணிசமான பங்கு இந்துப் பள்ளிகள், மதரஸாக்கள் போன்றவற்றின் பராமரிப்புக்காக மானியமாகத் தரப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அந்த நிலத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரி கிடைக்க என்ன வழி என்று பார்த்து, அதற்கான சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அப்படியாக, அரசுக்கு வரி தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும், அதுவரை பள்ளிக்குச் செலவிடப்பட்ட தொகை குறைந்தது. கூடவே பிரிட்டிஷார் பெரிய கட்டடங்கள், முறையான அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், திறமையான ஆசிரியர்கள், தேர்வுகள் என நவீன கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள். (பிரிட்டனிலும் அது அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது). அவையெல்லாம் இல்லாத பள்ளிகளை, தயவு தாட்சணியமின்றி மூடினார்கள். அதற்கு முன்பு வரை, பெரிதும் இலவசமாகத் தரப்பட்ட கல்வியானது, பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கட்டணம் கட்டிப் படிக்கவேண்டி ஒன்றாக ஆனது. இதனால், கடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள், கல்வியில் இருந்து அந்நியப்படவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அம்பேத்கர் போன்ற பல கடைநிலைச் சாதியினர், உயர் கல்வி பெறக் காரணமாக இருந்த அதே பிரிட்டிஷ் நிர்வாகம்தான், பெரும்பாலான எளிய கடைநிலைச் சாதியினர் கல்வியில் இருந்து அந்நியப்படவும் காரணமாக இருந்தது, வரலாற்றின் முரண்நகையே. 
அழகிய மரம் – 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
ஆசிரியர்:  தரம்பால், தமிழில்: B.R.மகாதேவன்
வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600014
பக்கங்கள் – 520, விலை 450/- அல்லது writermahadevan@gmail.com 

தமிழ் ஹிந்து மற்றும் தினமணி கட்டுரைகளை மாற்றியே இவ்வலைப் பக்கம் எழுதப் பட்டது ந்னறி.
 Dharampal Published works
1. Dharampal, Panchayat Raj as the Basis of Indian Polity: An Exploration into the Proceedings of the Constituent Assembly (with a foreword by Jayaprakash Narayan), AVARD, New Delhi, 1962.
2. Dharampal, Indian Science and Technology in the Eighteenth Century: Some Contemporary European Accounts (with a foreword by Dr. D.S..Kothari and Introduction by Dr. William A.Blanpeid), Impex India, Delhi, 1971; reprinted by Academy of Gandhian Studies, Hyderabad 1983.
3. Dharampal, Civil Disobedience and Indian Tradition: with Some Early Nineteenth Century Documents (with a foreword by Sri Jayaprakash Narayan), Sarva Seva Sangh Prakashan, Varanasi, 1971.
4. Dharampal, The Madras Panchayat System, Vol II: A General Assessment, Impex India, Delhi 1972.
5. Dharampal, The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century, Biblia Impex Private Limited, New Delhi 1983; reprinted by Keerthi Publishing House Pvt Ltd., Coimbatore 1995.
6. Dharampal, Some Aspects of Early Indian Society and Polity and their Relevance to the Present, Indian Association for Cultural Freedom, Pune 1988; Hindi translation published as Angrazon se Pehale ka Bharat Shatabdi Prakashan, Vidisha 1988; Tamil Translation, by K.Ramasubramanian, published as Mundeya India Samudayam, Arasamaippu, Sila Amsanga: Avattrin Inreya Poruttam, Cre-A, Chennai 1992.
7. Dharampal, Bharatiya Chitta, Manas va Kala (Hindi), Pushpa Prakashan, Patna and Centre for Policy Studies, Chennai 1991; English translation (with a Preface and Glossary) by Jitendra Bajaj, published as Bharatiya Chitta, Manas and Kala, Centre for Policy Studies, Madras 1993; Kannada translation, by S. R. Ramaswamy, published as Bharatiya Chitta, Manasikate, Kala, Rashtrotthana Sahitya, Bangalore 1996.
8. Dharampal, Bharat ka Svadharma (Hindi), Vagdevi Prakashan, Bikaner 1994.
9. Dharampal, Despoliation and Defaming of India: The Early Nineteenth Century British Crusade, Bharat Peetham, Wardha, 1999.
10. Dharampal and T.M.Mukundan, The British Origin of Cow-Slaughter in India: with some British Documents on the Anti-Kine-Killing movement 1880–1894, Society for Integrated Development of Himalayas, Mussoorie 2002.
11. Dharampal, Understanding Gandhi, Other India Press, Mapusa 2003; Tamil translation, by Janakipriyan, published as Gandhiyai aridal, Kalachuvadu Pathippagam, Nagercoil 2010.
12. Dharampal, Rediscovering India: Collection of Essays and Speeches (1956–1998), Society for Integrated Development of Himalayas, Mussoorie 2003.
13. Dharampal, India Before British Rule and the Basis for India's Resurgence: An Introduction: Some Explorations and Writings , Gandhi Seva Sangh, 1998.

No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி