Friday, June 17, 2022

உலக மக்கள் அனைவரும் திடீரென சைவத்திற்கு மாறினால்

உலக மக்கள் அனைவரும் திடீரென சைவத்திற்கு மாறினால் என்ன ஆகும்...?

உணவு

உணவு

உலகம் முழுவதும் சைவ உணவிற்கு மாறினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப்தை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அவ்வாறு மக்கள் சைவ உணவிற்கு மாறுவதால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதையும் சில ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...

ஃபோநூற்றாண்டு காலமாகவே சைவம் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் இடையே பெரும் விவாதம் இருந்து வருகிறது. சைவ உணவு சாப்பிடுவர்கள் அனைவரும், அசைவ பிரியர்களைப் பார்த்து கேட்கும் ஒற்றைக் கேள்வி, உங்களால் தான் நிறைய விலங்குகள் கொல்லப்படுகின்றன? என்பது தான்.

ஆனால் அதற்கான பொதுவான பதில், இறைச்சி உண்பவர்களால் தான் உண்பது உணவுச் சங்கிலியையும் சுற்றுச்சூழலையும் சமநிலையில் இருக்கிறது என்பது தான். இருப்பினும், இறைச்சியை விட்டுவிட்டு சைவ உணவு உண்பதால் ஏதேனும் சாதகமான விளைவு உண்டா? பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இறைச்சி உண்பதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

சரி, திடீரென உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களும் அசைவ உணவுகளை வெறுத்து சைவத்திற்கு மாறிவிட்டார்கள் என்றால் என்ன நடக்கும் தெரியுமா?. இறைச்சி சாப்பிடுவதால் சுற்றுச்சூழலில் அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடப்படுகிறது. Scientific America இணையதளத்தின் அறிக்கையின்படி, 226 கிராம் எடையுள்ள உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் கார்பன் டை ஆக்சைடைக் கொண்டு, ஒரு சிறிய காரை 0.2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்ட முடியும் எனக்குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், 226 கிராம் எடையுள்ள மாட்டிறைச்சி மூலம் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடை வைத்து, அதே காரை 12.7 கிமீ தூரத்திற்கு ஓட்ட முடியுமாம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, உலகின் பெரும்பாலான மக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உள்ளடக்கிய இத்தகைய உணவை பின்பற்றினால், பூமியில் பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி மிகவும் குறைக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.



காற்றுக்கு அடுத்த படியாக பூமியில் நீர் சேமிப்பிலும் குறிப்பிட்ட அளவு மாற்றம் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இறைச்சி உற்பத்திக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது, ஆனால் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்ய குறைந்த நீர் பயன்படுத்தப்படுகிறது. கரும்பு உற்பத்திக்கு 1-2 கன மீட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும் அதே வேளையில், காய்கறி உற்பத்திக்கும் கிட்டத்தட்ட அதே அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 15,000 கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் : மூன்று வேளையும் சாப்பிட டிப்ஸ்..!

உலகம் முழுவதும் சைவ உணவிற்கு மாறினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப்தை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அவ்வாறு மக்கள் சைவ உணவிற்கு மாறுவதால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதையும் சில ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை இறைச்சி மற்றும் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பொருட்களை சார்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.



இந்தியா போன்ற வளரும் நாடுகளின் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் தங்கள் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு இறைச்சியை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது, ஏனெனில் உடல் உழைப்பை நம்பியிருக்கும் அந்த மக்களுக்கு இறைச்சி நிகரான சக்தி கொண்ட சைவ பொருட்களை வாங்குவது என்பது அவர்களது பொருளாதார சக்தி அப்பாற்றப்பட்ட காரியம் ஆகும். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளைப் பொருட்படுத்தாமல், வளரும் நாடுகள் தற்போது இறைச்சி உட்கொள்ளலை கைவிடுவது சாத்தியமில்லை.

 https://tamil.news18.com/news/lifestyle/food-what-would-happen-if-the-entire-world-turned-vegetarian-esr-ghta-759542.html

Published by:Sivaranjani E 
Mu Ramkumar added a new photo.
மாமிசம் தின்னு, திங்காதே,  தின்னா, என்ன தப்பு,
திங்கலே என்றால் என்ன கொறைஞ்சு போயிடும்,
தின்னா தாமஸபுத்தி, ஆன்மீகத்துல முன்னேற முடியாது,
என் தட்டு, என் உரிமை மாதிரி, நான் என்ன திங்கறேங்குறது என் உரிமை, எவன் என்ன சொல்றது,
ஆன்மிகம் என்பது மனசு சம்பந்தப்பட்டது, கடவுளை காண மாமிசம் தான் தடை என்றால், உங்க கடவுளே எனக்கு வேணாம்,
என்ன, மாமிசம் தின்னா நான் ஹிந்து இல்லையா, அப்படிப்பட்ட மதமே எனக்கு வேணாம்.
என்று ஆயிரம் பதிவுகள்,
எதிர் பதிவுகள்,
எதிர் பதிவுக்கு பின்னூட்டங்கள்,
கருத்து சொன்னவனை பிளாக் பண்றது,
நீ என்ன வெண்ணை என்னை பிளாக் பண்றது,
நான் உன்னை எனது நட்பு பட்டியலில் இருந்து நீக்குறேன்,
இன்பாக்ஸுல அவனையெல்லாம் உனது நட்பு பட்டியல்ல இருந்து நீக்கு,
அவனது பதிவுக்கு லைக்கு போடாதே, அவனது பதிவுகளை சேர் பண்ணாதே,
என்றெல்லாம் முகநூல் அரசியல் சித்து விளையாட்டுகள்.
இதில், மாமிசம் சாப்பிட்டதால்தான், மனிதனது பரிணாம வளர்ச்சியில் மூளை கொள்ளளவு அதிகரித்தது என்று அறிவியல் அரசியல் வேறு.
தொல்லுயிர் எச்சங்கள் என்பவை பாசில்ஸ் (fossils) எனப்படும். இவை பழங்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள். இவற்றை வைத்து, அவற்றின் வாழிடங்கள், உணவு முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வது புவியியலில் ஒரு பிரிவு ஆய்வு படிப்பு. அதில் ஒரு ஆய்வுமுறை என்னவென்றால், பழங்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் தடை, பல் அமைப்பை கொண்டு அவற்றின் உணவு பொருட்களை அறிவது.
உதாரணமாக, யானை, குதிரை (பார்க்க படம்) ஆகியவற்றின் பல் வரிசைகளை கொண்டு, அவை தாவர உணவுகளை உட்கொண்டன என்றும், தாவரங்களிலேயே, குதிரை புல்வெளிகளில் உள்ள புல்லை பெரும்பாலான உணவாக கொண்டது என்றும், யானை புல், இலை, தழை, மரப்பட்டைகளை உணவாகக்கொண்டது என்றும், டீ-ரெக்ஸ் மாமிசபட்சிணி என்றும், சரோபோட் என்ற டினோசார் தாவர உண்ணி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், புலி, சிங்கம், கழுதைப்புலி போன்றவற்றின் மூதாதையரின் பல் அமைப்பைக்கொண்டு, வேட்டையாடி தின்பவை, பொறுக்கி தின்பவை என்றும் வகைப்படுத்த முடிந்தது. வேட்டையாட கூரான நகங்களும், கூரிய கோரைப்பல்லும் அவசியம், வேட்டையாடியபின், மாமிசத்தை கடித்து கிழிக்க வெட்டுப்பற்கள் அவசியம், அதை மென்று தின்ன கடைவாய் தட்டை பற்கள் அவசியம். இந்த கூரிய பல் சற்று சிறியதாகவும், வெட்டுப்பற்கள் அதே உயரத்திற்கும், தட்டையான கடைவாய் பற்கள் பல எண்ணிக்கையிலும், அகலமாகவும் இருந்தால் அனைத்துண்ணிகள், பொறுக்கிதின்னிகள் என்றும் பொதுவாக வகைப்படுத்துவது தொல்லுயிர் எச்சங்களின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வுகள் நடப்பது வழக்கம்.
இப்ப மனுஷ பற்களின் அமைப்புக்கு வருவோம்.
நமக்கு மாமிசத்தை கிழிக்க உதவும் கோரை பற்கள் நாலு உண்டு, வெட்டி திங்க வசதியா இன்சிஸ்ஸர் எனப்படும் வெட்டுப்பற்கள் எட்டு உண்டு, மொத்தம் 32 பற்களில் அரைத்து, மென்று திங்க இருவது பற்கள் உண்டு. கோரை பற்கள் வெட்டுப்பற்களின் அளவே உயரம். அரைத்து சாப்பிடும் பற்கள் மாமிசபட்சிணிகளில் உள்ளவாறு (உதாரணம் பார்க்க படம்) ப்ரீமோலார் எனப்படும் இடைப்பட்ட பற்களாக இல்லாமல், அரைத்து சாப்பிட ஏதுவான கடைவாய் பற்களாக தட்டையாகவே உள்ளன.
இதை எப்படி தொல்லியல் ஆய்வு அடிப்படையில் எப்படி எடுத்துக்கொள்வது?
முதல் பாராவில் சொன்னதன் அடிப்படையில் அனைத்துண்ணியாக கருதவாய்ப்பு உள்ளது. கோரைபற்கள் ரொம்ப கூராகவும் இல்லை (பபூன் வகை குரங்குகள், ஏன், ரீசஸ் வகை குரங்குகளுக்கு கூட, இவை மிக கூராக, வெட்டு, கடைவாய் பற்களை விட பெரியதாக இருப்பதை காணலாம்).
மற்றெல்லா உயிரினங்களைவிட, மனித இனம் பரிணாம வளர்ச்சி அதிகம் பெற்றது என்றும், ஆறாம் அறிவு உண்டு என்பதும் தெரிந்ததே. இப்போது, இந்த அனைத்துண்ணி என்பதையும், ஆன்மிக வளர்ச்சியையும் ஒருசேர பார்த்தால், மற்றெல்லா உயரினங்களைவிட, மனித இனத்துக்கு நாகரீக, ஆன்மிக கடமைகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகியுள்ளன. மனிதன் கடவுளைப்போல, ஆனால் அளவில், சக்தியில் குறைவாக படைக்கப் பட்டுள்ளான் (அதாவது, கடல் முழுதும் கடவுளாக கொண்டால், ஒருதுளி கடல் நீரை மனிதனாக உருவாக்கப்படுத்துவதும் உண்டு; அதாவது, குணத்தில் ஒன்று, உருவில் சிறிது என்று), அல்லது, பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளான் என்றுதான் பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன.
அதேபோல் என்றும் ஆத்மாவின் தனிப்பட்ட சுதந்திரம் (Free will) என்றும் பெரும்பாலான மதங்கள் கூறுவதையும் நாம் அறிந்திருக்கலாம். அதாவது, மனிதனுக்கு, தனது உணவை, ஆத்ம சுதந்திரத்தை, ஆன்மீகப்பாதையை தானே முடிவெடுத்து செயல்படுத்தும் சுதந்திரம் உள்ளது. அதில் ஒன்றுதான், தான் எந்த உணவை தேர்ந்தெடுப்பது என்று. தேர்வு என்பது தனிமனித சுதந்திரம் தான். ஆனால், எந்தவித தேர்வும் ஒரே முடிவுக்கு கொண்டு செல்லாது. அதாவது, பட்டுக்கோட்டை பஸ்ஸில் ஏறினால் பயணத்தின் முடிவில் இறங்கும் இடம் பட்டுகோட்டையாக தான் இருக்கும், மதுரை அல்ல. இந்த இடத்தில்தான் முகநூல் ஆன்மீக உணவு சுதந்திர போராளிகள் எல்லாரும் வழுக்குகிறார்கள். ஆனானப்பட்ட கண்ணனே, எனக்கு ஒரு பூவோ, பழமோ, இலையோ, ஒரு துளி நீரோ கொடு, அதை பக்தியுடன் கொடுத்தால் முழுமனதுடன் ஏற்று திருப்தி அடைகிறேன் என்றுதானே சொன்னாரே தவிர, எனக்கு வஞ்சிரம் மீன் வறுவல் கொடு, காடை பொரியல் படையல் போடு, என்று கேட்கவில்லையே.
அதாவது, நமது பல் அமைப்பு எதைவேண்டுமானாலும் தின்பதற்கு வசதியாக உள்ளது. அதுதான் மனிதப்பிறவியின் சுதந்திர அமைப்பின் ஒரு வசதி. தாவரம் திங்கலாம், மாமிசம் திங்கலாம். ரெண்டும் திங்கலாம். வேட்டையாடி திங்கலாம், பச்சையாக வவ்வாலில் இருந்து வெட்டுக்கிளி, காடை, கவுதாரி வரை திங்கலாம். புல், பூண்டு, இலை, தழை, பழங்களும் திங்கலாம், எல்லாம் நமது சாய்ஸ் தான். ஆனா, வவ்வால் தின்னா என்ன தப்பு, பழம் திங்க சொல்றது எனது உரிமையில் தலையிடுவது, எனது குலவழக்கம் என்று சொல்லிக்கொண்டு, நான் பட்டுக்கோட்டை பஸ்ஸில் ஏறுவேன், ஆனால், பயணம் முடிந்து இறுதியாக பஸ் நிக்கும் இடம் மதுரையாகத்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது, நமக்கு கொடுக்கப்பட்ட ஆத்ம சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது.
டாட்.

No comments:

Post a Comment