Wednesday, June 29, 2022

நடராஜர் வழிபாட்டின் தொன்மையும், இந்தியாவின் பழமையான நடராஜர் திருமேனிகளும்.

அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள நடராசரின் கல்வெட்டு சமசுகிருத மொழியில், பிந்தைய பிராமி அல்லது சத்ருபஞ்சாவின் ஆரம்பகால கலிங்க எழுத்துகளுடன், வெற்றியாளர் எனவும் ஆன்மீக மனிதராக இவர் செய்த சாதனைகள் பற்றியும் விரிவான விவரங்களை வழங்குகிறது. பதின்மூன்று வரிகளைக் கொண்ட கல்வெட்டு பகுதி வசனமாகவும், பகுதி உரைநடையாகவும் எழுதப்பட்டுள்ளது. https://en.wikipedia.org/wiki/Satrubhanjaஒடிசாவின் அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள சத்ருபஞ்சாவின் பதின்மூன்று வரிக் கல்வெட்டு

ஒடிசாவில் நாகர் அரசன் சத்ருபஞ்சா (Satrubhanja) பொஆ 261 முதல் 340 வரை 

இப்போது ஒடிசா மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அசன்பத் கல்வெட்டு, சத்ருபஞ்சாவை ஆட்சியாளர் எனவும் போர்வீரன் எனவும் விரிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது. இவர் நாக குலத்தில் அரசர்களிடையே சந்திரனைப் போலப் பிறந்தவர் என்றும், மகாபாரதத்தில் பீஷ்மருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயரான இரனஸ்லாகின் (போரில் பெருமை கொண்டவர்) என்றும் விவரிக்கப்படுகிறார்.

 

ஜெனிவாவில் உள்ள CERN (European Center for Research in Particle Physics) 

"Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics."

அதாவது, "நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்திய கலைஞர்கள் சிவபெருமானின் நடன கோலத்தை வெண்கலத்தில் வடித்துள்ளனர். நம்முடைய காலத்தில், இயற்பியல் வல்லுனர்கள் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரபஞ்ச நடனத்தினை வருணித்துள்ளோம். இந்த பிரபஞ்ச நடனத்தின் உருவணி மெய்ஞானத்தையும், அறிவியலையும் ஒன்றிணைக்கிறது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் "TAO OF PHYSICS" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்து மதத்திற்கும், இயற்பியலுக்கும் உண்டான தொடர்புகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.


இனித்தமுடன் எடுத்த பொற்பாதம்.எடுத்த பொற்பாதத்திற்கு என் இவ்வளவு பெருமை? ரிக்வேதம் இதற்கான பதிலளித் தருகிறது. 
देवानां युगे प्रथमे असतः सदजायत | 
तदाशा अन्वजायन्त तदुत्तानपदस परि || 
भूर्जज्ञ उत्तानपदो भुव आशा अजायन्त |
தேவர்களின் முதல் ஊழியில் பரம்பொருளில் இருந்து உயிர்கள் தோன்றின. திசைகள் தோன்றின. மேலே எடுத்த பாதத்திலிருந்து பூமியும் ஆகாயமும் தோன்றின.
இங்கே உத்தான பாதம் என்று கூறுவது இனித்தமுடன் எடுத்த பாதமல்லால் வேறென்ன


சிவபெருமான் ஆடலுக்கும் இசைக்கும் மூலமாக அமைவதைப் புராணங்கள் கூறுகின்றன. இதற்கு மூலமாக அமைவது ரிக்வேதம் கூறும் இந்த மந்த்ரம்
கா³த²பதிம்ʼ மேத⁴பதிம்ʼ ருத்³ரம்ʼ ஜலாஷபே⁴ஷஜம் ।
தச்ச²ம்ʼயோ꞉ ஸும்னமீமஹே ॥4॥
ருத்ரர் காதபதியாக அதாவது இசைக்கும் ஆடலுக்கும் தலைவனாகவும் மேதபதியாக அறிவுக்கும் தலைவனாக இலங்கும் பெற்றியைக் காட்டுகிறது. வீணாதர தக்ஷிணாமூர்த்தியின் வடிவம் இதன் சரியான வளர்ச்சி எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஹரப்பாவில் கிடைத்த தலையற்ற உடைந்த ஆடும் வடிவமும் சிவபெருமானின் ஆடல்வல்லானின் வடிவமாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.


நடராஜர் 1500 ஆண்டு தொன்மை திருமேனி மத்தியப்பிரதேசத்தில பிரம்மாண்டமானது கிடைத்துள்ளது

 

ஆகமங்கள் போற்றும் நடராஜர் வடிவம் 1500 வருடம் முந்தையது.

A 1500-year-old dancing Shiva statue has been found in Vidisha district from Madhya Pradesh, which is being claimed to be the world's largest Nataraja statue.

 மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷாவில் 9   × 4 மீட்டர் அளவிலான 1500 வருட பழமையான  ஒரே கல்லில் செதுக்கிய நடராஜர் சிலை கிடைத்தது. 

AVvXsEiXDc3yuJXMIjxhe3IHSMGPXk4LfeMWQKQW

A huge statue of Lord Shiva's Nataraja form, about 1500 years old, has been found in Vidisha district of Madhya Pradesh. The statue is 9 meters long and 4 meters wide. Due to its large size, it was left in the ground as a pillar, but recently the state coordinator of INTECH Madan Mohan Upadhyay has revealed the mysterious pillar to be the largest statue of Nataraja.

Claiming to be the world's largest Nataraja statue, state coordinator of INTECH Upadhyay told that this huge statue has been constructed from a single rock. The statue is 9 meters long and 4 meters wide. The statue is so big in size that it was not easy to capture it in a frame, after inspecting it with a drone, it was found that it is a statue of Nataraja form of Lord Shiva.
AVvXsEgcJdkJG7RZ_3_nzXOAIsiWJdQihlryAuGU
Since last few years Intake is working at the site of Udaipur in Vidisha district. The idol of Nataraja is said to be before the Parmar period. Giving information, Madan Mohan Upadhyay said that Udaipur area is known for Neelkantheshwar Mahadev Temple, which is an ASI-protected monument. This temple attracts tourists. The story of the construction of this place has been written in the inscriptions including the Neelkantheshwar temple of Lord Shiva, which is now preserved in the Gwalior Museum.

The treasure of ancient heritage is hidden in the ruins

Madan Mohan Upadhyay said that there is a lot of potential to convert the ruins into a national and international tourist destination. The Indian National Trust for Art and Cultural Heritage (INTECH) has completed the work of documenting the ancient sites, the report of which will be submitted soon. This locality is 15 km from Ganjbasoda and 140 km from Bhopal. Vidisha District Administration, Madhya Pradesh Tourism Department and State Archaeological Department are working for the protection of this place.

Many secrets are buried in ancient remains

Spread over a thousand hectares, these ruins open many layers of history. Madan Mohan Upadhyay said that the structures surrounded by palaces, villages, fort walls, reservoirs, temples and innumerable buildings tell untold tales of the bygone times, showing the domination of different dynasties including the Parmars, Gonds and Marathas during different times. shows. He said that why the world's largest Nataraja statue was not installed at that time, it is a matter of research.



https://commons.wikimedia.org/wiki/File:Badami,_cave_1,_Nataraja,_dancing_Shiva_%289841987336%29.jpg

https://en.wikipedia.org/wiki/Badami_cave_temples 


Avanibhajana Pallaveshwaram Temple

https://en.wikipedia.org/wiki/Avanibhajana_Pallaveshwaram_Temple

Avanibhajana Pallaveshwaram temple also called Stambeswarar Temple is a Hindu temple dedicated to Shiva, located in the town of Seeyamangalam, Tiruvannamalai district in Tamil Nadu, India. The temple is constructed in Rock-cut architecture by the Pallava king Mahendravarman I (600-630 CE) during the 7th century. The cave temple had later additions from the Chola and Vijayanagar Empire.

One of the pillars has a sculpture of Nataraja, believed to be the earliest representation of the deity in South India. The temple has a small three-tiered rajagopuram, the entrance tower. The temple is declared as a heritage monument and administered by the Archaeological Survey of India as a protected monument. The other side of the hillock houses the Jain beds established in the 9th century during the reign of Ganga King Rajamalla II.

Stambeswarar temple was built during the reign of Pallava king Mahendravarman I (600-630 CE) during the 8th century. It is one of the earliest representations of Rock-cut architecture. The place is called Avanibhajana Pallaveshwaram temple as Avani is one of the titles of King Mahendravarman. Though the image of the lions in the pillars lead to an assumption that the temple might have been possibly been initiated by Simhavishnu, the father of Mahendravarman, the view is not accepted. The inscriptions, accounted in Epigrahia Indica, is written in Sanskrit with Grantha-Pallava alphabet. The inscriptions indicate that it was dug out by Lalitankura, which is similar to that of cave temple in Tiruchirapalli Rock Fort indicating Mahendravarman. The temple had later additions from the Chola and Vijayanagar Empire. The gopuram, the gateway tower is believed to be an addition by the Vijayanagar kings.[1] The other side of the hillock houses the Jain beds established in the 9th century during the reign of Ganga King Rajamalla II. 

 
800px-Seeyamangalam_Natarajar.jpg
 

Nataraja is the cosmic representation of Shiva's different dance forms. The temple has the earliest representation of Nataraja in sculpture. As per Hindu mythology, Shiva is a violent dancer and while he dances, a snake named Karkodaka winds in his legs, leading to Shiva performing the Bhujamgatrasa, the snake fight posture. The sculpture of Nataraja in the temple depicts the posture. Shiva is sported with four hands, with his one of the left hands showing dola hasta posture, parasu in the second left, Abhaya mudra (protecting posture) in the first right hand and fire in the second right hand. Archeologist Dr.R.Nagaswamy believes that the hooded snake at the foot of Nataraja is the proof of Bhujamgatrasa. It is believed that all forms of dance are derived from Natya Sastra by sage Bharatha and Mahendravarma's knowledge of delicate postures are exemplified in the sculpture. He also affirms that by the image Mahendra shows the connection between bhujaṅga trāsita and that the dance of Nataraja, the cosmic form of Shiva leads to the Ananda.

Worship and religious practices

The temple is declared as a heritage monument and administered by the Archaeological Survey of India as a protected monument.[9] Though it is an archaeological monument, the temple is active in worship practices, where the temple priests perform the puja (rituals) during festivals and on a daily basis. The temple rituals are similar to that of other Shiva temples.


135px-Seeyamangalam_dvarapala1.jpg800px-Seeyamangalam_dvarapala2.jpg
Architecture
The temple has a three-tiered rajagopuram a set of scattered shrines. The shrine of Stambeswarar is housed in the circular sanctum in a rock cut cave. There is a large pillared hall and narrow pillared Ardhmandapam leading to the cave sanctum. The shrine for Nadi is located outside the pillared hall axial to the central shrine. The sanctum is guarded by two Dvarapalas, the guardian deities. The sanctum houses the image of Shiva in the form of lingam. In the pillars, lotus is carved on the upper portion, while images of lion is seen in the lower half.[5] The presiding deity is called Thoonandavar or Stambeswarar on account of the presence of two pillars in front of the temple.[4] One of the pillars in the temple has one of the earliest representations of Nataraja (the dancing form of Shiva) in Ananda Thandava posture. There are two attendants of Shiva ganas of Nataraja, with one of them playing Miruthangam (a percussion instrument) and other in praying posture. The pillared hall has images of yalis, the mythical creatures representative of Vijayanagar Art.[1] The images of other attendant deities of Shiva are housed in smaller shrines around the sanctum.


கூத்தன்
கூத்தன் என்றால், கூத்து எனும் ஆடல் கலையில் வல்லவன் என்று பொருள். மேலும் ஞான கூத்தன் என்றும் சிவபெருமான் என்றும் வழங்கப்படுகிறார்.

சபேசன்
சிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு "சபைகளில் ஆடும் ஈசன்" என்று பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை (ரஜித சபை), தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.

அம்பலத்தான்
அம்பலம் என்ற சொல்லிற்கு திறந்தவெளி சபை என்று பொருளாகும். இந்த வகையான அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன் என்றும் அழைக்கப்படுகிறார்.

தோற்றம்
சைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன. ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது.

மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன.

தோற்ற விளக்கம்
நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.

ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.

பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தி ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!

அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன.

பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.

வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.

தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.

அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது.

நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!

பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!


பரத நாட்டியத்தில் ஒற்றைக் காலில் நின்ற நிலையிலான நடனத் தோற்றம் (நடராசரை குறிக்கிறது)
ஐந்தொழில்கள்
சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயனார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு.

நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு[1]:

ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றல் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்
இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்
இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்
தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.



300 வருடம் முன் வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி எழுதிய நடராஜ பத்து

பாடல் : 1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 2
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 3
கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 4
வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
என்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் 5:
நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 6:
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 7
அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ
இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 8
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லை யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 9 :
தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 10 :
இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன்செய்கைதானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள்
தொழும்பனாக்கி சிறுமணவை முனுசாமி பாடியவை
இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
நடராஜ பத்து பாடல்களைப் பாடி, நடராஜரைப் பணிந்து நற்கதி அடைவோம்.

No comments:

Post a Comment