Thursday, June 16, 2022

குயின்ஸ்லேண்ட் தீம் பார்க்-சோனியா காங்கிரஸ் கிறிஸ்தவ எம்எல்ஏ அமிர்தராஜ் & பாஸ்டர். நளினி செல்வராஜ் காலி செய்ய HRCE நோட்டீஸ் ரத்து


ஸ்ரீவைகுண்டம்  சோனியா காங்கிரஸ் கிறிஸ்துவ MLA ஊர்வசி.அமிர்தராஜ்  மற்றும் தாயார் பாஸ்டர். நளினி செல்வராஜ் ஆக்கிரமித்து வாடகை செலுத்தாமல் திராவிட ஆட்சியாளர்கள் உடன் சேர்ந்து கொண்டு அனுபவித்து வருகிறார் பல பக்தர்கள் போட்ட வழக்கின் பயனாக இவ்வாறு தீர்ப்பு வந்துள்ளது 

குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 07 Oct 2021

குயின்ஸ்லேண்டு பூங்காவை காலி செய்ய அறநிலைத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து

குயின்ஸ்லேண்டு அமைந்துள்ள நிலம், வருவாய் துறைக்கு சொந்தமானதா, அறநிலைய துறைக்கு சொந்தமானதா என்பது தொடர்பான விவகாரம், நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. NEWS18 TAMIL: JUNE 16, 2022, Vijay R

குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் அமைந்துள்ள குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா, அருள்மிகு காசி விஷ்வநாதர்  திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணு கோபாலேஷ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, பூங்கவை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இதனை எதிர்த்து குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கும் நிலம், கோவில்களுக்கு சொந்தமான நிலம் அல்ல  என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிலம், வருவாய் துறைக்கு சொந்தமானதா, அறநிலைய துறைக்கு சொந்தமானதா என்பது தொடர்பான விவகாரம், நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி வேலுமணி, நில உரிமை தொடர்பான விவகாரம்நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகக் கூறி,குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கோவில் நிலத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சோனியா காங்கிரஸ் ஊர்வசி.அமிர்தராஜ் குயின்ஸ் லேண்ட் பொழுதுப்போக்கு பூங்கா

 ஆர்.பாலசரவணக்குமார்

Published : 07 Oct 2021 18:34 pm

Updated : 07 Oct 2021 18:35 pm

 

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சோனியா காங்கிரஸ் ஊர்வசி.அமிர்தராஜ் என்ற கிறிஸ்தவர் ஆக்கிரமித்து வாடகை செலுத்தாமல் திராவிட ஆட்சியாளர்கள் உடன் சேர்ந்து கொண்டு அனுபவித்து வருகிறார் பல பக்தர்கள் போட்ட வழக்கின் பயனாக இவ்வாறு தீர்ப்பு வந்துள்ளது 

குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுந்தது.


No comments:

Post a Comment