Friday, September 6, 2024

தமிழக TNPSC தேர்வில் மதமூட நம்பிக்கை கதை பரப்பும் - கேள்விகள் - தவறான பதில்கள் வேறு,

 தமிழக மாநில TNPSC தேர்வில் மதமூட நம்பிக்கை கதைகள் பரப்பும் - கேள்விகள் - தவறான பதில்கள் வேறு














தமிழக அரசு நடத்தும் TNPSC தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் திருமுறைகள், திவ்ய ப்ரபந்தங்கள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை அந்தந்த இலக்கியங்களை புரட்டிப் பார்த்து கண்டு பிடிக்கலாம். ஆனால் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் தோமையாரால் இந்தியாவிற்கு கிறிஸ்தவ மதம் கொண்டுவரப்பட்டது என்ற கூற்றை எந்த நூலை புரட்டி பார்த்து கண்டுபிடிக்க வேண்டும்?
ஒன்றாம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அது ஆதாரம் ஆகிவிடுமா? தோமா கிபி 1 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தார் என்று பதிவு செய்யும் முதல் நூல் எந்த காலத்தில் எழுதப்பட்டது? இந்த கேள்விக்கான பதிலை எந்த நூலைப் படித்து எழுத வேண்டும்? இந்த கேள்விக்கான மூல நூல் எது?
!.இங்கே கல்வியாளர்கள் யாராவது இருந்தால் இதற்கான பதிலை தாருங்கள்.!

TNPSC Group - 4 தமிழ் தேர்வுத் தாள்

https://www.adda247.com/jobs/wp-content/uploads/sites/8/2024/06/09152848/GROUP-IV-2024-QUESTION-PAPER-F.pdf
தமிழக திமுக அரசு தமிழர் மரபைச் சிதைக்கவே பணி செய்கிறது, ஈவெராமாசாமியார் கூறிய /தமிழ் சனியன் தமிழை அழிக்கவே திராவிடம்// கொள்கையோடு; சர்ச் கொத்தடிமைகளே என திமுக என நிரூபிக்கிறது.

குருப் 4 தேர்விலே 6000 பணியிடங்களுக்கு 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். முதல் 2 கேளிவிகளே கிறிஸ்துவம் பற்றியது ஏன் இந்த மதவெறி - மதத் திணிப்பு?

தமிழக பாடநூலில் திருக்குறள், ஔவையாரின் கொன்றை வேந்தன், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எனப் பாடல்கள் வைக்கும்போதும் தமிழர் மரபான இறைவன் வணக்கம் போதிப்பவை நீக்கி கீழ்த்தரமாக பாடத் திட்டம் அமைக்கின்றனர்.
அவ்வாறு உள்ள நிலையில் முழுவதும் கறபனை கட்டுககதை எனும் கிரேக்க பைபிள் புராணத்தின் சுவிசேஷக் கதை நாயகன் பற்றி முதல் கேள்வி; அடுத்தது தேம்பாவணியில் இருந்து.
முதல் கேள்வியின் பதிலில் பல குழப்பம்- விவிலியக் கதாபாத்திரஙகளின் பெயரை தன்னிச்சையாக கத்தோலிக்கம் மாற்றும் - உதாரணம் பவுல்- சின்னப்பர்; சீடர் யோவான் - அருளப்பர்; இந்தக் கேள்வியிக்கு பதில் ஞானஸ்தான யோவான் என்பதே சரி; ஆனால் அருளப்பர் & யோவான் இரண்டுமே சீடர்களைக் குறிப்பது.
தேம்பாவணி என்பது - ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனி பெயரில் இருந்தாலும் அதை இயற்றியது சுப்பிரதீபக் கவிராயர் என்பது அறிஞர் முடிபு; மேலும் அது அப்படியே கம்ப ராமாயணத் தழுவல்; அயோத்தி படலத்தை எடுத்து அதை பாலைவன ஜெருச்லேம் மீது திணித்து இருப்பார். இக்கதையின் நாயகன் ஏசு தந்தை ஜோசப், அதை கத்தோலிக்கர் சூசையப்ப்பர் என்பர், ஆனால் இக்கதையில் வளன் எனத் தமிழ் செய்து இருப்ப்பார்; எனவே இதன் பதிலும் குழப்பமே.
பாடத் திட்டத்திற்குள் ஜெசுயிட் கருத்து திணித்து விட்டேன் என லயோலா கல்லூரி ஆசிரியர் கூறியதையும், தமிழர் மரபை சிதைப்பதே கிறிஸ்துவ திராவிடக் கூட்டணி என்பதன் இன்னொரு ஆதாரம் 


 

 https://www.youtube.com/watch?v=RyQ6OnEC5NE

No comments:

Post a Comment

Christians grab SC Reserved seats with Hindu Caste Certficates - Supreme courts helps!

Kerala CPM Devikulam MLA - A.RAJA  a practicing CSI Christian had won Kerala assembly elections in 2021 an was disqualified in 2022 - but Su...