மருதமலை மேல் ரூ.110 கோடி செலவில் 184 அடி உயர முருகன் சிலை வைக்க தடை
வழக்கு போட்ட இயற்கை - விலங்குகள் நல ஆர்வலர் திரு.முரளி அனுப்பிய செய்தி.
https://www.dinamalar.com/news/tamil-nadu-news/will-there-be-a-184-foot-murugan-statue-in-maruthamala-or-not-we-will-know-on-october-10th/4043028
சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த மனு:
யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக, முக்கியமான பகுதியாகும். நீலகிரி வனப்பகுதியில் இருந்து, பிற வனப்பகுதிகளுக்கு செல்ல, யானைகள் இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்த பகுதியில், 184 அடி உயரத்துக்கு, முருகன் சிலை அமைக்க வேண்டுமானால், வனங்களை அழிக்க வேண்டி உள்ளது. இது யானைகளின் போக்குவரத்தை துண்டிக்கும். அதுமட்டுமின்றி, விலங்குகள்-, மனித மோதல்கள் அதிகரிக்கும்.
கோவில் காசில் வைக்க TNHRCE சட்டப்படி உரிமை இல்லை
No comments:
Post a Comment