Tuesday, October 21, 2025

விஞ்ஞான ஊழல் - ராஜாத்தி அம்மாள் ராஜா அண்ணாமலைபுரம் வீடு - காணொளி

 

 யார் இந்த கனிமொழி? கருணாநிதியின் மகளா ?👎👎👎👎👎👎👎👎👎👎👎

இல்லை கனிமொழி என் மகளல்ல,
கனிமொழி எனக்கு பிறந்தவளல்ல -முதல்வர் கருணாநிதி .

சரி, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வாருங்கள்.

1968களில் கருணாநிதி வாழ்வில்நடந்த உண்மை சம்பவம்..
இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.

பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் அது.
அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்துக் கொண்டிருந்தது! அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல. ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி
மேடையேறி பேச உழைத்துக் கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்தான்.

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், ஜனவரி 5,1968 அன்று சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில், இந்த நேரத்திற்கு #ராசாத்தி என்கிற #தர்மாம்பாளுக்கு ஒரு பெண்
குழந்தை பிறந்தது.
மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் #மு.#கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
#யார்_அந்த_கருணாநிதி..? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.

அந்த செய்தி அமைச்சராகவும் அடுத்த முதல்வராக கனவுடன் இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.
முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.
அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்த அப்படியே எடுத்துக் கொண்டவரல்லவா..?

‘’#ராசாத்தி.. #தர்மாம்பாள்_யார் #என்றே_எனக்கு_தெரியாது.
#எனக்கு_அப்படி_எந்த_பெண் #குழந்தையும்_இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.
இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?
விட்டுவிடக்கூடாது… என்று நீதிமன்றத்துக்கும் போனார்…

பெண் குழந்தை ..மகள் என்று யாருமே எனக்கு தெரியாது.
#கனிமொழி_என்ற_பெயரில் #பிறந்திருக்கும்_குழந்தை_எனக்கு #பிறந்ததல்ல என்றார்..
பிறகு நடந்தது என்ன என்பது அன்றைய மூத்த தி.மு.கவினருக்கே தெரியும்.

செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளான அநியாயமும் நடந்தேறியது..
இந்த பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான #திருச்சி_வேலுசாமி.

தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன
கனிமொழிக்காக சமீப காலம் முன்பு வரை அழுது துடித்தார்.
'ஒரு பூவை வைத்தாலும்கூட வாடிவிடும், அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள்' என கண்ணீர் வடித்தார்.

திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க குடும்பத்துடன் சோனியா காந்தி வீட்டு வாசலில் போய் நின்றார்.

கனிமொழி கருணாநிதியின் மகள்தான் என சொன்ன பத்திரிக்கையாளருக்கு அப்போது #ஆறு_மாதஜெயில்_தண்டனை. பொய் சொல்லி பத்திரிக்கையாளருக்கு சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த கருணாநிதிக்கு தற்போது வரை எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

சர்ச் இருப்பதால் காளி கோவில் திருவிழாவிற்கு தேர் செல்லக்கூடாது என கிறித்தவர்கள்

 திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியில் உள்ள காளி கோவில் திருவிழாவிற்கு தேர் செல்லும் பாதையில் சர்ச் இருப்பதால் அவ்வழியாக தேர் செல்லக்கூடாது ...