Sunday, September 21, 2025

சசிகலா 450 கோடி சர்க்கரை ஆலை - பண மதிப்பீடு காலத்தில் ரொக்கமாக வாங்கினார் = அமலாக்கத்துறை ரூ.2000 கோடி சொத்து முடக்க்ம்..

 

பண ம​திப்​பிழப்பு காலத்​தில் காஞ்​சிபுரத்​தில் பத்​மாதேவி சுகர்ஸ் லிமிட்​டெட் சர்க்​கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்​கி​யிருந்​த​தாக சிபிஐ பதிவு செய்​துள்ள எப்​ஐஆரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பழைய சீவரத்​தில் உள்ள பத்​மாதேவி சுகர்ஸ் லிமிட்​டெட் என்ற சர்க்​கரை ஆலை, இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யில் ரூ.120 கோடி ரூபா​யும், மற்ற வங்​கி​கள், நிதி நிறு​வனங்​களில் கோடிக்​கணக்​கான ரூபாயை கடனாகப் பெற்​றுள்​ளது. இந்த கடன்​களுக்கு அடமான​மாக வைக்​கப்​பட்​டிருந்த ஆலை இயந்​திரங்​களை, கடன் கொடுத்த வங்​கி​களுக்கு தெரி​யாமல் விற்​று, தனி​யார் சர்க்​கரை ஆலை மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக நிதி நிறு​வனம் ஒன்று சிபிஐ​யில் புகார் அளித்​தது.

உயர் நீதி​மன்​றம் உத்​தர​வின்​பேரில் பத்​மாதேவி சுகர்ஸ் லிமிட்​டெட் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​து, இந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை திரட்​டும் வகை​யில், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்​னை, திருச்​சி, தென்​காசிஉள்​ளிட்ட 6 இடங்​களில் சோதனைநடத்​தி​யது. இந்​நிலை​யில், சிபிஐ-​யின் முதல் தகவல் அறிக்கை தற்​போது வெளி​யாகி உள்​ளது.

அதில், ஜெயலலி​தா​வின் நெருங்​கிய தோழி​யான வி.கே.சசிகலா பணம​திப்​பிழப்பு காலத்​தில் ரூ.450 கோடி பழைய ரூ.500, ரூ.1000 ரொக்​கம் கொடுத்து அந்த சர்க்​கரை ஆலையை வாங்​கி​யிருப்​ப​தாக​வும், அது பினாமி பெயரில் இருப்​ப​தாக​வும் தெரிய​வந்​துள்​ள​தாக கூறி​யுள்​ளது. பத்​மாவதி சுகர்ஸ் நிறு​வனத்​தின் நிதி மேலாண்​மை​யில் இருந்த ஹிதேஷ் ஷிவ்​கன் படேல்,சர்க்​கரை ஆலையை விற்​பனை செய்​வதற்​காக ரூ.450 கோடிபெற்​ற​தாக​வும், அதற்​காக ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​ட​தாக​வும் சிபிஐ எப்​ஐஆரில் கூறப்​பட்​டுள்​ளது.

புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யிலும், அந்த சர்க்​கரை ஆலையை சசிகலா பினாமி பெயரிலேயே வைத்​திருந்​தது தெரிய​வந்​துள்​ள​தாக 2020-ம் ஆண்டு வரு​மான வரித்​துறை எப்​ஐஆரை மேற்​கொள் காட்டி சிபிஐ குறிப்​பிட்​டுள்​ளது. இதனால், வரு​மானவரித் துறை அந்த ஆலையை பினாமி சொத்து என்று அறி​வித்​து, சசிகலாவை அதன் உண்​மை​யான உரிமை​யாள​ராகக் குறிப்​பிட்​ட​தாக​வும் இதனிடையே, இந்​தி​யன் ஓவர்​சிஸ் வங்​கி​யும், பத்​மாவதி சுகர்ஸ் நிறு​வனத்​தின் கடன் கணக்​கு​களை மோசடி என்று அறி​வித்​த​தாக​வும் சிபிஐ தெரி​வித்​துள்​ளது.

இதையடுத்​து, ஹிதேஷ் ஷிவ்​கன் படேல், தினேஷ் படேல், தம்​பூ​ராஜ் ராஜேந்​திரன், பாண்​டிய ராஜ், நிதி அதி​காரி வெங்கட பெரு​மாள் முரளி ஆகியோர் மீது மோசடி உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக சிபிஐ குறிப்​பிட்​டுள்​ளது.

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/2628603

சசிகலா, சுதாகரன், இளவரசியின் ரூ.2,000 கோடி சொத்து முடக்கம் ADDED : அக் 08, 2020  

சென்னை:சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்களில் உள்ள, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, சிறுதாவூர் மற்றும் கோடநாடு எஸ்டேட் சொத்துகளை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கி உள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. அவரது அக்கா மகன் சுதாகரன். இவரை, ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகனாக ஏற்றார்; பின், அந்த உறவை துண்டித்தார். சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி. ஜெ., மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், இம்மூவரும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர்.

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பின், ஜெ., உட்பட, இந்த நால்வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஜெ., மறைந்ததை தொடர்ந்து, சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும், சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, 187 இடங்களில், 2017ல், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப் பட்டது.மேலும், சில ஆயிரம்கோடி ரூபாய்க்கு, சொத்துகளில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.


தொடர்ந்து, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, 2019 நவம்பரில், வருமான வரித் துறை முடக்கியது. இதே போல, இந்தாண்டு ஆகஸ்டில், 'அரிசந்தனா எஸ்டேட்' நிறுவனத்தின் பெயரில் இருந்த, 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 65 சொத்துகள் முடக்கப்பட்டன.தற்போது, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.

இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சசிகலா மற்றும் அவருக்கு தொடர்பு உடையவர்களின் வீடுகளில், 2017ல் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது, ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களின் அடிப்படையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன.


தற்போது, சிறுதாவூர் நிலம், 150 ஏக்கர் மற்றும் கோடநாடு எஸ்டேட், 955 ஏக்கர் என, மொத்தம் 1,100 ஏக்கர் நிலங்கள், பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப் படுத்தப் பட்டுள்ளன.இதில், கோடநாடு எஸ்டேட்டின் மதிப்பு, 1,500 கோடி ரூபாய்; சிறுதாவூர் நிலத்தின் மதிப்பு, 500 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சொத்துகளை கையகப்படுத்தியதற்கான நோட்டீஸ், எஸ்டேட் மற்றும் பங்களா வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சிறையில் உள்ள மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

ED Unearths Massive Evangelical International Debit Card Racket

  https://www.youtube.com/watch?v=8VtEYAOFvpY ED Unearths Massive Evangelical International Debit Card Racket: How a US-Based Group Smuggled...