சென்னை: திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்தை கூறி, திமுக கட்சி, திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும் , துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணையையும் வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிளுக்கு மாற்றி, வருமான வரித் துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து திமுக அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை யை மத்திய சர்கிளுக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின் போது திமுக அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “கட்சியின் பொதுச் செயலாளர் வருமான வரி கணக்கு வேறு, திமுகவின் வருமான வரி கணக்கு வேறு. இரண்டையும் வருமான வரித் துறையின் மத்திய சர்க்கிள் விசாரிக்க கூடாது” என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி திமுக அறக்கட்டளைக் கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அதுவரை திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
2019ம் ஆண்டு மார்ச் மாதம் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யபட்ட கதிர் ஆனந்த்தின் தந்தை துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளர் அல்ல, திமுகவின் நிரந்தரப் பொருளாளரும் அல்ல என்று திமுக சார்பில் ஜனவரி 28, 2021-ல் உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த துரைமுருகன் வேறு; எங்கள் துரைமுருகன் வேறு..! கோர்ட்டில் திமுக சர்ச்சை மனு
வேலூரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டி.துரைமுருகன் மற்றும் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த்தின் தந்தை துரைமுருகன், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அல்ல, அவர் திமுகவின் நிரந்தர பொருளாளர் அல்ல என்று திமுக ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாலரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் வேலூரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டி.துரைமுருகன் மற்றும் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த்தின் தந்தை துரைமுருகன், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அல்ல, அவர் திமுகவின் நிரந்தர பொருளாளர் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டி துரைமுருகனை திமுக தனது கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அல்ல என்று ஏன் கூறியது என்று தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-writ-petition-duraimurugan-is-not-same-dmk-general-secretary-duraimurugan-251642/

No comments:
Post a Comment