Saturday, June 4, 2022

கிறிஸ்துவ மதமாற்றம் எனும் வியாபாரம் அதிகமாகிறதா?

மாணவர்களை மதமாற்ற முயற்சி; மதபோதகர் மீது வழக்குப் பதிவு
 ஜூன் 04, 2022  பந்தலுார் : மதமாற்ற முயற்சியில் ஈடுபட்ட மதபோதகர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3045287
நீலகிரி மாவட்டம், பந்தலுார் கொளப்பள்ளியில், 'பெந்தேகோஸ்தே' சபை செயல்பட்டு வருகிறது. குன்னுார் பகுதியை சேர்ந்த விக்ரம் ஜோயல் என்பவர், 13 ஆண்டுகளாக தங்கி மதபோதகராக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களாக, 40க்கும் மேற்பட்ட சிறு வயது மாணவர்களை வரவழைத்து, இவர் மதமாற்றம் செய்து வருகிறார் என, வி.எச்.பி., மாவட்ட செயலாளர் ரமேஷ் டி.எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார்.

மேலப்பாளையத்தில் உள்ள மேலகருங்குளம் பகுதியில் கிறிஸ்தவ மிஷினரிகள் குழந்தைகளை கட்டாய மதமாற்றம் செய்வதாக பெற்றோர் தரப்பில் இருந்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்
தென்மாவட்டங்கள் கிறிஸ்துவ மிஷனரிகளின் கூடாரமாக செயல்படுவது இதிலிருந்து தெரிகிறது.

இதை தொடர்ந்து, சேரம்பாடி இன்ஸ்பெக்டர் அமுதா, சப்--இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர் மற்றும் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, 40 மாணவர்களுக்கு, மதபோதகர் பைபிள் வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மதபோதகர் விக்ரம்ஜோயல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.







 

 

No comments:

Post a Comment