Friday, June 3, 2022

பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன், ஷவர்மா -இளைஞர்கள் உயிரைக் கொல்லும் முறையற்ற ஓட்டல்கள்

மட்டன்,சிக்கன் உணவுகளில் அளவுக்கு அதிகமான எண்ணெய், மசாலா சேர்க்கப் படுவதால் அவை 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உண்ணலாம் என்பது மருத்துவர்கள் கூறும் அறிவுரை. தனியார் ஓட்டல்கள் லாபநோக்கில் தயாரிப்பில், பழைய, கெட்டுப்போன பொருட்களைப் பயன்படுத்துவதை சாப்பிடுவது விஷத்தை உண்பதற்கு சமம்

ஆரணி | தந்தூரி சிக்கன் சாப்பிட உயிரிழந்த மாணவர்  போலீஸில் புகார் 

திருமுருகன் ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி தாளாளர் கணேஷ் (எ) ஆப்பிள் கணேஷ். இவருக்கு திருமுருகன் மற்றும் கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமுருகன் 12-ம் வகுப்பு தேர்வு முடித்த நிலையில் கடந்த 24-ம் தேதி நண்பர்களுடன் ஆரணி காந்தி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டார். அவரது நண்பர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட நிலையில் திருமுருகன் மட்டும் தந்தூரி சிக்கனையும் சேர்த்து சாப்பிட்டுள்ளார்.

முன்பு ஷவர்மா, இப்போது தந்தூரி சிக்கன்.. பலியான பள்ளி மாணவர்!

மிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்த விவகாரத்தில், குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் திருமுருகன். இவர் கடந்த 24ஆம் திகதி தேர்வு எழுதி முடித்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் ஒன்றில் சிக்கன் தந்தூரி மற்றும் பிரைடு ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

 

அதன் பின்னர் வீட்டிற்கு வந்த அவருக்கு இரவு முழுவதும் வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு திருமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு Food poison ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

மறுநாள் மாணவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், இந்த விடயம் பூதாகரமாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து குறித்த ஓட்டலை மூடக் கூறி கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தற்காலிகமாக ஓட்டலை மூட உத்தரவிட்டுள்ளார். 

 
ஆரணியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எனக்கே பணம் கொடுத்து சரி கட்டிட்டதாக, ஓட்டல் உரிமையாளர் சொல்றாரு - தந்தூரி சாப்பிட்ட மகனை பறிகொடுத்த தந்தை வேதனை
https://news.lankasri.com/article/youth-dies-after-eating-chicken-biriyani-telangana-1632205100
 
https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/chennai-man-dead-by-eating-chicken/tamil-nadu20220124153928299

https://www.tamilspark.com/tamilnadu/pregnant-women-dead-after-eating-parotta
https://tamil.oneindia.com/news/chennai/a-college-student-was-died-due-to-eating-parota-in-chennai/articlecontent-pf605593-435924.html
 
https://tamil.oneindia.com/news/2013/07/29/india-mbbs-student-dies-after-eating-biriyani-in-kerala-180056.html

https://www.facebook.com/watch/?v=1214493352652902&extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing

No comments:

Post a Comment