Saturday, June 4, 2022

மோசடி பெண்பாதிரி மரியா செல்வம் கொலை மிரட்டல்- பிஷப்.காட்ப்ரே நோபில் கதறல்

மோசடி பெண்பாதிரி கொலை

மிரட்டல்: பாதிரியார் போலீசாரிடம் 

கதறல்









சென்னை: 'கொலை மிரட்டல் விடுக்கும் மோசடி பெண் மற்றும் இவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் காட்ப்ரே வாஷிங்டன் நோபில்; பாதிரியார். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:சென்னை அண்ணா நகர் கிழக்கு, குமரன் நகர் பகுதியில் வசிப்பவர் மரிய செல்வம். இவர், மதபோதகர் போல நடித்து வருகிறார். என் மகன் உள்ளிட்டோருக்கு வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து, ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். மரிய செல்வம் மீது, பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனால் ஆத்திரமடைந்த மரிய செல்வத்திற்கு, நான் பாலியல் தொல்லை கொடுத்தாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது பொய் புகார் என்பதை நிரூபிப்பேன்.

 இந்நிலையில், மரிய செல்வம் மிரட்டல் விடுத்து, 'சிடி' ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், 'என்னை சீண்டி பாக்குறீங்க; நான் சொன்னா திருநெல்வேலி, ஈரோடு, நாமக்கல்லில் இருந்து ஆட்கள் வருவர். சும்மா போகிற பாம்ப நீங்க சீண்டினால் பாம்பு கொத்தும்; விஷம் ஏறும். அவ்வளவு தான்...' என, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இவரால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதிப்பு உள்ளது. தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். மரிய செல்வம் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





பெண் பாதிரி மரியம் செல்வம் மோசடி மீது புகாரளித்த  பிஷப் காட்ப்ரே நோபல் (ருவருப்பாய் பேசும் புரோக்கர் பாதிரி மோகன் சி லாசரஸ் உறவினர்)  மீது  பாலியல் வன் கொடுமை புகார்   https://www.dinamalar.com/news_detail.asp?id=3035675

சென்னை : சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாதிரியார் காட்ப்ரே நோபல். இவர், சென்னை மத்திய குற்றப் பிரிவு மற்றும் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.அதில், அண்ணாநகரில் வசிக்கும் மரியம் செல்வம் என்ற பெண், படித்த கிறிஸ்தவ இளைஞர்களை குறி வைத்து, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: கிறிஸ்தவ பெண் பாதிரி Rev.மரியா சிஸ்டர் மீது பிஷப்.காட்ப்ரே நோபில் (அருவருப்பாய் பேசும் புரோக்கர் பாதிரி மோகன் சி லாச்ரஸ் நெருங்கிய உறவினர்)  போலீசில் புகார் 

இந்த புகாரில், ஐந்து பிரிவின் கீழ், மரியம் செல்வம் மீது பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

புகாருக்கு உள்ளான மரியாசெல்வத்தால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் ரூ.18.5 லட்சம் இழந்ததாகவும், இதனால் அவர் அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு தீக்குளித்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். 

 

https://www.dailythanthi.com/News/Districts/2019/02/15030930/Theni-Collector-officeFire-With-that-kept-Worker-Death.vpf
 

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மரியம் செல்வம் நேற்று புகார் அளித்தார்.இதுகுறித்து, மரியம் செல்வம் கூறுகையில், ''பாதிரியார் காட்ப்ரே நோபல் என்பவரின் மகனுக்கும், எனக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல், வாங்கல் பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக பேச அழைத்து, பிஷப் காட்ப்ரே நோபல் பாலியல் தொல்லை கொடுத்தார்,'' என்றார்.

'இதுகுறித்து முன்கூட்டியே ஏன் புகார் அளிக்கவில்லை' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மழுப்பலான பதிலை கூறிவிட்டுச் சென்றார்.

சதுரங்க வேட்டையர்கள் விதவிதமாக சீட்டிங் செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம், அந்த அயோக்கியர்கள் பாணியில் ஒரு பெண் மத போதகரும் சீட்டிங் செய்வதாக வரும் செய்தி, ரொம்ப புதுசு.

ஓ மரியா... மரியா...

மரியா என்கிற மரிய செல்வம் என்ற 42 வயது பெண், இலங்கையைச் சேர்ந்தவர், கிறிஸ்தவ மத போதகர். தமிழகத்தில் செட்டிலாகிவிட்ட இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, அங்குள்ள பாதிரியார்கள் மற்றும் சர்ச்சுக்கு வரும் விஐபிகளை சந்தித்து உதவி செய்வதாகப் பேசி, காரியம் சாதித்துக்கொள்வாராம்.

மரியாவிடம் ஏமாந்தவர்களில் ஒருவரான பேராயர் காட்ப்ரே வாஷிங்டன் நோபுள், “சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மரியா என்பவர், கடந்த மார்ச் மாதம் என்னை செல்போனில் தொடர்புகொண்டார். உங்கள் மகன் வெளிநாட்டில் படித்துள்ளதை ஃபோஸ்யுக் மூலம் தெரித்துகொண்டேன். நீங்களும் பேராயர். நானும் மத போதகர். உங்கள் மகன் சுப்ரீம் பிளாசன் நோபுளுக்கு கிரீஸ் நாட்டில், ஷிப்பிங் கம்பெனியில் ஒரு வேலை இருக்கிறது. நல்ல சம்பளம் என்றார்.

அந்த வேலையில் எங்களுக்கு விருப்பமில்லை. என்று கூறியும் தொடர்ந்து வற்புறுத்தியதால் எனது மகன் தொடர்பான ஆவணங்களை மரியாவின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி வைத்தேள்,

இதற்காக என்னிடம் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட மரியா, 'மே 2ம் தேதி உங்கள் மகன் வேலைக்குச் சேர வேண்டும் என்றார். அவர்மீது நம்பிக்கை ஏற்பட்டதால், எல் நண்பர் மகல் கிருஷ்ணமூர்த்திக்கும் வேலை வாங்கித் து வேண்டும் என்று கூறி மேலும் 4.25 லட்சம் ரூபாயை மரியாவிடம் கொடுத்தேன்.

என் பணத்தை தருவியா?
பணம் கொடுத்து பல நாட்களாகியும் இன்டர்வியூ லெட்டர் விசா எதுவும் வரவில்லை. மரியாவிடம் து தொடர்பாக பலமுறை கேட்டு நச்சரித்தேன், இதையடுத்து, ஒரு விசா கம்பெனி மூலம் ஜெர்மன் விசா அப்பாயின்ட்மென்ட் வெட்டர் மெயிலில் வந்தது. அப்போது அடுத்த 42 மணி நேரத்தில் கூரியர் மூலம் விசா ஓரிஜினல் வந்துவிடும்' என்று மரியா கூறினார். சொன்னது போலவே ஓரிஜிளல் அப்பாயின்ட்மென்ட் வெட்டரையும் அவர் எங்களிடம் கொடுத்தார்.

தொடர்ந்து 11.4.2022 அன்று மும்டையில் உள்ள தூதாகத்திற்கு இருவரும் இன்டர்வியூவுக்கு வரவேண்டும் என்று மெயில் வர்த்து ஆனால், விரா மட்டும் வரவே இல்லை. எனவே இவர் தெரிவித்த கம்பெனியின் இணையதளப் பக்கத்துக்குச் சென்று பார்த்தேன். அதில், 'வேலை வாங்கித் தருவதாக எங்கள் கம்பெனியின் பெயரைச் சொல்லி யாரும் பணம் கேட்டால் தரவேண்டாம்' என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த நான் அதன் பிரரே மரியா கொடுத்த ஆவணங்களைச் சோதித்து பார்த்தபோது அவை அனைத்தும். போலி என்று தெரியவந்தது. ரப்பர் ஸ்டாம்ப் லெட்டர் பேடு உட்பட அனைத்தையும் மரியாவே தயாரித்து கையெழுத்தும் போட்டுள்ளார். அவரைப் பற்றி விசாரித்ததும் அவர் மோசடிப் பேர்வழி என்பதும் தெரியவந்தது. 

தேனி மாவட்டக்கில் முனியாண்டி என்பவரின் மகன் உள்பட சிலருக்கு வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக மரியா ல லட்சம் ரூபாயை ஏமாற்றி இருக்கிறார். இதனால் விரக்தி அடைந்த முனியாண்டி தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்துவிட்டார். தொடர்ந்து மரியாவைப் பற்றி திருச்சபைகளில் விசாரித்தபோது, என்னைப் போலவே சில பாதிரியார்களும். பொதுமக்களும் அவரிடம் பல கோடி ரூபாய் ஏமாந்திருப்பது தெரியவந்தது.
ஆனால், அவரிடம் விசாரணை நடத்தப் படவில்லை. கைது நடவடிக்கையும் இல்லை. இது பற்றி கேட்டால் அவர் தலைமறைவாகிவிட்டார்; தேடி வருகிறோம்' என்கிறார்கள் ஆனால், மரியசெல்வம் தலைமறைவாக இவ்வை. அவர் என்மீதே கமிஷனர் அலுவலகத்தில் பொய்ப்புகார் அளித்துள்ளார். தேடப்படும் குற்றவாளி கமிஷனர் அலுவலகத்திற்கு எப்படி வருகிறார்? இது தொடர்பாக முதல்வர் அலுவலகம், உள்துறை செயலாளர் பலரை சந்தித்து மனு அளித்தும் பலன் இல்லை.

ன் அனைத்திந்திய ஜவதாயக பாதுகாப்பு கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்தேன் எனக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களுக்கு எப்படி தியாயம் கிடைக்கும்? மரியாவை கைது செய்தால்தான். இனி அவரிடம் யாரும் ஏமாற மாட்டார்கள்" என்றார் கொதிப்புடன்.

பெண் மதபோதகர் தில்லு

மரியாவ தொடர்புகொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டோம். "நான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமக் பிசினஸ் செய்துவருகிறேன். காட்ப்ரே வாஷிங்டன் நோபுல் மகன் என்னுடன் சேர்ந்து பிசினஸ் செய்வதற்காக 4.25 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தார். மற்றபடி வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதற்காக நாள் பணம் பெறவில்லை. அதிலும் 850 வட்ச ரூபாய் பெற்றேன் என்று அவர் சொல்வது அபாண்டமான பொய் சட்டரீதியாக அவரை நான் சந்திப்பேன்"

எனது பணத்தை மரியாவிடம் திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக ஜி2 பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை தொடர்ந்து டிஜிபி சைலேந்திர என்றார். பாபு: சென்னை மாநசா கமிஷனர் சங்கர் ஜினைல் ஆகியோரிடம் புகார் அளித்த பிறகே மரியா மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்

ஜி 2 பெரியம்பபடு நாவல் நிலைய இன்ஸ்பெக்டர் பர்கத்துல்லாவிடம் கேட்டதும், பாதிரியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை

குமுதம் ரிப்போர்ட்டர் 03.06.2022

No comments:

Post a Comment

பெங்களூரு கோரி பாளையா மினி பாகிஸ்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை பயப்படுகிறது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி

 முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் குற்றவாளிகளை பிடிக்க செல்ல பெங்களூரு காவல்துறை பயப்படுகிறது. கோரிபாலயா‌ என்ற இடம் மினி பாகிஸ்தான் ...