Tuesday, June 14, 2022

ஜனாதிபதியாக ஒரு கிறிஸ்தவ வேட்பாளர். பி.ஏ.சங்மாவைத் தோற்கடித்த திருமா கும்பல்

ஜனாதிபதியாக ஒரு கிறிஸ்தவ வேட்பாளர். பி.ஏ.சங்மாவைத் தோற்கடித்த திருமா கும்பல்

!
குடியரசுத் தலைவர் வேட்பாளராக கிறிஸ்தவரை நிறுத்துங்கள் - கிருஸ்துவத்திற்கு விசுவாசம் காட்டும் திருமாவளவன்
ஜனாதிபதியாக ஒரு கிறித்தவரை எதிர்க்கட்சிகள் போட்டியிட வைக்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள இவ்வளவு பெரிய சமூகம் இப்படி புறக்கணிப்படுவது ஜனநாயகத்துக்கு பெருமை சேர்ப்பதாகாது : தொல்.திருமாவளவன் அவர்கள்.
ஒரு மதத்தை சார்ந்தவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறுவதன் மூலம், தான் ஒரு மதவாதி என்பதை திருமாவளவன் நிரூபித்து விட்டார். இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு கிறிஸ்தவர் இதுவரை இல்லை என்று மதரீதியாகப் பிரித்து பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படி பார்ப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்றால், நம் மக்களின் உரிமையை பறித்து 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தியவர்கள் அதே கிறித்தவ மதத்தை சேர்ந்தவர்கள்தான் என்ற உண்மையை மக்கள் மறந்து விட மாட்டார்கள் என்பதை திருமாவளவன் உணர வேண்டும். மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் மதவாத சக்திகளை அடையாளம் கண்டு அடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 2012ல் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன் சங்மாவுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? ஆதரவு தர மறுத்தது ஏன்? அப்போது ஒரு கிறிஸ்தவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று உருகவில்லையே, ஏன்? இப்போது கிறிஸ்தவர்கள் மீது வந்துள்ள பாசம் அப்போது இல்லாமல் போனது ஏன்? அரசியலில் மதத்தை கலக்கும் திருமாவளவனின் அறிக்கை கிறித்தவ மதத்தின் மீதான அவரின் போலி பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசியலில் மதத்தை கலக்கும் அநாகரீக அரசியலை திருமாவளவன் கைவிட வேண்டும். திருமாவளவன் 2012ல் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்காதது ஏன்?” என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். நாராயணன் திருப்பதி.


உங்கள் கிறிஸ்தவ மிஷநரி விசுவாசம் புரிகிறது சார். கிறிஸ்தவரை நிறுத்துவதோ உட்கார வைப்பதோ பெரிதல்ல. மொட்டையாக கிறிஸ்தவர் என்றால் என்ன அர்த்தம்.
அந்த கிறிஸ்தவர் ஆர்.சி பிரிவா, சிஎஸ்ஐ பிரிவா, லண்டன் மிசினா, பெந்தகோஸ்தா, சிரியனா, பாப்டிஸ்ட்டா, ஏழாம் நாள் அட்வெந்தா, திறப்பின் வாசலா, அல்லது நம்ம லாசரஸ் அண்ணாச்சி கடையா.
அது போக தலித் கிறிஸ்தவரை நிறுத்த வேண்டுமா, உயர் ஜாதி கிறிஸ்தவரை நிறுத்த வேண்டுமா.
புதுசா மதம் மாறியவரை நிறுத்த வேண்டுமா, அல்லது ஆரம்ப காலத்தில் மாறிய பழம் பெரும் கிறிஸ்தவரை நிறுத்த வேண்டுமா. கொஞ்சம் விலாவாரியாக விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.
அது போகட்டும். பி ஏ சங்மா என்று ஒரு கிறிஸ்தவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் போது, அவருக்கு நீங்க ஓட்டு போடல என்பது மறந்து போச்சா.
நீங்க பிஎச்டி படிக்கும் போது தீசிஸ் எழுதி தந்த ஆளையாவது நியாயம் இருக்கா.

No comments:

Post a Comment