Friday, June 10, 2022

இந்தியக் கல்வி, செல்வத்தை கைப்பற்றி கொள்ளையடித்த கிறிஸ்துவம்

 உலகின் முக்கியமான தொழில் எனில் உழவு & நெசவு மேலும் உற்பத்தி செய்த பொருட்களை வியாபாரத்திற்கு கொண்டு செல்ல கப்பல்கள், நாட்டில் மக்களுக்கு தேவையான வேலை தர உயர் கட்டுமானங்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர் ஆங்கஸ் மேடிசன்.  உலகின் மொத்த வருமானத்தில் இந்தியாவும் சீனாவும் 2000 ஆண்டுகளுக்கும் அதிகமாக 55% வரை கொண்டு இருந்தது. 

இந்தியாவை ஆக்கிரமித்த மிஷநரி வழிகாட்ட ஆண்ட கிறிஸ்துவ ஆங்கிலேயர்கள் கொள்ளை அடித்தது இன்றைய மதிப்பில் $45 டிரில்லியன் - 3500 லட்சம் கோடிகள் என ஜேஎன்யூ பொருளாதாரப் பேராசிரியர். உத்சா பட்நாயக் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் வெளியிட்ட நூலில் காட்டி உள்ளார்.




 உலகில் இயந்திரப் புரட்சி வரும் முன்பு கல்வி என்பது மிகவும் குறைவான மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே அவசியம் என்பதே உலகம் முழுவதும் நிலை. 17ம் நூற்றாண்டின் இயந்திரப் புரட்சி இவற்றை மாற்றியது, கல்வி மெதுவாக அனைவருக்கும் தேவை என்ற நிலை வந்தது.











மனித நாகரீகத்தின் உச்ச அறிவு என்றால் அது இத்தொழில்களை காட்டும் நல்ல இலக்கியம், மற்றும் மிகச் செம்மையான இலக்கணம்.  



தீ மிதித்தல் தமிழ் மண்ணுக்கே உரிய தனிப்பண்பாடல்ல. அது வேறு பல நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளது. பிற தொன்மைச் சமூகங்களிலும் உண்டு. அது இரும்பு யுகத்தில் தொடங்கியது // fire walking, religious ceremony practiced in many parts of the world, including the Indian subcontinent, Malaya, Japan, China, Fiji Islands, Tahiti, Society Islands, New Zealand, Mauritius, Bulgaria, and Spain. It was also practiced in classical Greece and in ancient India and China. -Encyclopedia Britannica//https://www.britannica.com/topic/fire-walking

கோயில்களில் திருவிழாவின் போது கொடி ஏற்றும் வழக்கமும் ;தமிழ் மண்'ன்னுக்கு மாத்திரம் உரியதல்ல. பூரி ஜகநாதர் கோயிலில் 800 ஆண்டுகளாக கொடியேற்றுதல் வழக்கத்தில் இருக்கிறது திருச்சூர் பூரம் திருவிழாவில் கொடியேற்றுவது ஓரு முக்கிய நிகழ்வு. வட இந்தியாவில் எல்லா நாட்களிலும் இந்துக் கோவில்களின் உச்சியில் கொடிகள் பறந்து கொண்டிருப்பதால் தனி நிகழ்வாக அது நடைபெறுவதில்லை. இவையெல்லாம் இந்தியா கலாசாரத்தால் ஒன்று என்பதற்கான அடையாளங்கள். இன்னொரு கோணத்தில் இவை பொதுவான இந்துக் கோயில் வழக்கங்கள். பிற மதங்கள் இங்கு வந்தபோது அந்த வழக்கங்களை சுவீகரித்துக் கொண்டன. வட இந்திய இஸ்லாமியர்களுக்கும் தமிழக இஸ்லாமியர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அங்குள்ள முஸ்லீம்களில் சிலர் மொகலாயர் வழி வந்தவர்கள். தமிழ்நாட்டு முஸ்லீம்களில் பெரும்பாலானோர் இந்துவாக இருந்து மதம் மாறியவர்கள். அவர்கள் தங்களுக்குப் பழக்கமான சடங்குகளை அவர்கள் மாறிய மதத்திற்கும் எடுத்துச் சென்றதில் ஆச்சரியமொன்றும் இல்லை.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தருகிறார் என்றதுமே அவருக்கு முக்கிய நிகழ்வின் போது என்ன புத்தகத்தை பரிசாகத் தருவது என்று நிறைய சிந்தித்தேன். அதிகம் பேசப்பட்ட நிறைய புத்தகங்களை அவருக்கு பலர் கொடுத்திருப்பார்கள் எனத் தெரியும். இந்த நூல் என் மனதிலேயே இருந்தது. அதற்கு முதல் காரணம் என் தோழி நிவி இந்த நூலுக்காக தமிழ்நாடு முழுக்க ஒரு வருடத்துக்கும் மேலாக தேடித் திரிந்து கள ஆய்வு செய்து எழுதிய புத்தகம் இது. இந்த புத்தகம் தமிழ்நாட்டின் பல சமயங்களுக்குள் இருக்கும் நல்லிணக்கம் ஒற்றுமை ஆகியவற்றை பேசுகிறது.
தமிழ் மண்ணுக்கென தனி அடையாளம் உண்டு. அதன் பண்பாட்டை கூர்ந்து கவனித்தால், அதன் தனித்தன்மை விளங்கும். தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு மதங்களை கடைபிடித்தாலும், அடிநாதமாக இவர்களின் பண்பாட்டில், பழக்க வழக்கங்களில் எவ்வித பெரும் மாற்றமும் இல்லை. இஸ்லாமியர் தீமிதிப்பதும், கிறித்தவர் கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழா கொண்டாடுவதும், இந்துக்கள் தர்காக்களில் சென்று ஓதி வருவதும் இயல்பு, இங்கு அன்றாடம்.
தமிழ்நாட்டில் கிறித்தவம் பரவிய விதம், அதன் வரலாறு, அம்மதத்தின் சின்னங்கள், பண்டைய ஆலயங்கள், கத்தோலிக்கம், சீர்திருத்த கிறித்தவம் என பல பிரிவுகள், அவற்றைப் பரப்ப வந்த மிஷனரிகள், அவர்கள் செய்த கல்வி, மருத்துவப் பணிகள் என பலவற்றை இந்நூல் விரிவாக விவரிக்கிறது. அதே சமயம், இம்மண்ணின் தமிழ்ப் பண்பாட்டை கிறித்தவம் தனக்குள் ஈர்த்துக் கொண்டது; கிறித்தவத்தை நம் பண்பாடு செழுமையாக்கியது.
அடித்தட்டு மக்களுக்கு சாதிய வேறுபாடு இன்றி கல்வி புகட்டியதும், மருத்துவ வசதி ஏற்படுத்தியதும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்கிய முக்கிய காரணங்கள்.
எல்லிஸ், போப், கால்டுவெல், தேவநேயப் பாவாணர், மாயூரம் வேதநாயகம் என இம்மண்ணில் திராவிடம், சமூக நீதியை முன்னெடுத்துச் சென்ற கிறித்தவ சான்றோர் பலர். அவர்களது பங்களிப்பை இந்த நூல் சொல்கிறது. கிறித்தவ ஆலயத் தேரை இந்துக்கள் முதலில் தொட்டு இழுத்த பின்னரே தேரோட்டம் நடக்கும் ஊர்கள் இங்கு உண்டு. இந்துக் கோயில் திருவிழாவில் ஏறும் கொடியின் கயிறை கிறித்தவ மக்கள் திரித்து மேளதாளம் முழங்கக் கொண்டு செல்வதுண்டு. ஜல்லிக்கட்டு, பொங்கல், மொட்டை போடுதல், மடிப்பிச்சை, அங்கப்பிரதட்சணம், பஜனை என இங்கே எல்லாமும் கிறித்தவத்தில் உண்டு என்பதை இந்த நூல் சொல்கிறது. மக்கள் மதத்தால் வேறுபட்டாலும் பண்பாடு போற்றுவதால், சமூக நீதி காத்து நிற்பதால் தலை நிமிர்ந்து தமிழ்நாடு நிற்பதை இந்த நூல் பதிவு செய்கிறது.
ஒற்றுமைக்கும் சமய நல்லிணக்கத்துக்கும் நாட்டுக்கே வழிகாட்டியாக விளங்கும் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு, மதவாத, அடிப்படைவாத பாசிச சக்திகளுக்கு எப்போதுமே இடமளித்தது இல்லை. இன்றளவும் ஒற்றுமையாக இணக்கமாக வாழும் பண்பட்ட சமூகம் நாம். தமிழ்நாட்டின் சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நம் தமிழ்நாடு அரசு.
எனவே கிறித்தவம் பற்றியும் மத நல்லிணக்கம் குறித்தும் பேசும் இந்த நூல் மிக முக்கியமானதாகிறது. சிறுபான்மை இன மக்களுக்கு உரிய இடத்தை உறுதிசெய்து, சமயங்களுக்குள் நட்புறவு பேணும் நம் முன்னோடி மாநிலத்தில் இவ்வாறான நூல்கள் வெளிவருவதும் மதங்களைத் தாண்டி மக்களின் கவனம் பெறுவதும் அவசியம் என நான் நினைக்கிறேன். எனவேதான் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு இந்த நூலைப் பரிசளித்தேன்.
அறியப்படாத கிறிஸ்தவம் - நிவேதிதா லூயிஸ்
Ariyappadatha Christhavam - Nivedita Louis

No comments:

Post a Comment