Monday, March 21, 2022

மாணவிகள் அப்பாவி பெண்களை நாடகக் காதல் செய்து ப்ளாக் மெயில் பாலியல் கொடுமை- லவ் ஜிஹாத் & ஐஎஸ் தீவிரவாதி ஆக்குதல்

20 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வலை... சென்னையில் மாடல் ஆணழகன் முகமது சையத். கைது

சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் 26 வயதான முகமது சையத். இவன் மீது மூன்று இளம் பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தனர். ஒரே நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்திக் கொண்ட முகமது சையது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மூன்று பெண்களும் போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர். காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் வேப்பேரி மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  

பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் செல்போனிலிருந்து முகமது சையதுக்கு குறுஞ்செய்திகள் பறந்தன. போலீசார் அனுப்பிய குறுஞ்செய்தி என அறியாத முகமது 'ஐ லவ் யூ'  என குறுஞ்செய்தி அனுப்பியதோடு மூன்று பேரிடமும் வெவ்வேறு இடங்களில் சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளான்.


இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முகமதுடன் பழகிக்கொண்டிருந்த காலத்தில் மூன்று பெண்களில் ஒரு பெண் எதேச்சையாக முகமதின் மொபைல்போனை எடுத்துப் பார்த்தபோது வாட்ஸப்பில் நிறையப் பெண்களுக்கு காதல் வலை வீசும் வகையில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்துள்ளார். 

அதில் இருந்த மற்ற பெண்களின் செல்போன் எண்களை எடுத்து விசாரித்தபோது ஒரே நேரத்தில் பல பெண்களிடம் முகமது  காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் முதலில் இதனை மறுத்த முகமது சையத் போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் காதலிப்பதாக கூறி இவ்வாறு பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி கொண்டதை ஒப்புக்கொண்டான். முகமது சையது செல்போனில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்டெடுக்க சைபர்கிரைமுக்கு அவனது செல்போன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவன் பயன்படுத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


https://www.vikatan.com/news/crime/20-women-sexually-abused-model-trapped-by-girlfriend 
https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/model-male-arrested-chennaiகைதான சையத்
இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்களைத் தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை கீழ்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் 27 வயதான சையத். இவர் சின்னதிரையில் துணை நடிகராகவும், மாடலாகவும் இருந்துவருகிறார். இவர் மாடல் மற்றும் நடிகர் என்பதால் பல பெண்கள் இவரை இன்ஸ்டாகிராலமில் தொடர்புகொண்டு பேசி பழகி வந்துள்ளனர். அவர்களில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 3 வருடங்களாக இவருடைய ஆசை வார்த்தைகளை நம்பி காதலில் விழுந்து பழகி வந்துள்ளார். 

இந்த சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அப்பெண்ணிடம் நெருங்கி பழகி வந்துள்ளான் சையத். சமீபத்தில் சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் அறை எடுத்து இருவரும் ஒன்றாக இருந்த போது சையத் செல்போனை அந்த பெண் யதார்த்தமாகப் பார்த்துள்ளார். அப்போது தான் தன்னை போல இன்னும் பல பெண்களிடம் இப்படி ஆசை வார்த்தைகள் கூறி அவர்களையும் பயன்படுத்திக்கொண்டது தெரியவந்துள்ளது.

சையத்-யிடம் இது எதையும் வெளிக்காட்டாமல் அந்த பெண்களைத் தனியாக இன்ஸ்டாகிராலமில் தொடர்புகொண்டு பேசிய போது அவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து அந்த மூன்று பெண்களும் தன்னை காதலிப்பதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தங்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளதாகவும் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். 

அதைத் தொடர்ந்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறை சையதுவை கைது செய்து, அவனது காரையும் பறிமுதல் செய்தது. மேலும் அவனிடம் விசாரித்த போது, ``நான் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. அனைவரும் சொந்த விருப்பத்துடன்தான் என்னிடம் நெருங்கிப் பழகினார்கள்" எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சையது இதுவரை 20 -க்கும் மேற்பட்ட பெண்களைத் தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வெளியாகும் தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கைது செய்யப்பட்ட சையத்தை காவல்துறை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், சையத்தை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

 

No comments:

Post a Comment