Sunday, March 6, 2022

நெல்லிக்குப்பம் தலைவர் பதவி பொது - எஸ்சிக்கு தர முடியாது 1கோடி காணொளி -திமுக திராவிடியாம்

"முதல்வரின் உத்தரவை ஏற்று ராஜினாமா செய்வீர்களா?" - நிருபர்.

"நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம். தி.மு.க-வின் வாக்குகளால் மட்டும் நாங்கள் வெற்றிபெற்றுவிடவில்லை! சேர்மன் பதவி உங்களுக்குத்தான் என்று அமைச்சர் சி.வெ.கணேசன் வாக்குறுதி கொடுத்ததால்தான் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தோம். கட்சி பணமே கொடுக்காத நிலையில் சேர்மன் வேட்பாளர் என்ற முறையில் மற்ற வேட்பாளர்களின் செலவையும் நான்தான் செய்தேன்.


அப்படி இருக்கும்போது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
கடந்த 4 தேர்தல்களிலும் சேர்மன் பதவி தனிப்பிரிவினரிடம் இருந்ததால்தான் இந்தமுறை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது! அப்படி இருக்கும்போது கூட்டணி என்ற பெயரில் மீண்டும் தனிப்பிரிவினருக்கே ஒதுக்குவதை ஏற்க முடியாது.


பட்டியல் சமூக மக்களை சென்னைக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் வரலாறு! 

https://pagadhu.blogspot.com/2022/03/blog-post_5.html
முன்பே இதனை சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் இவ்வளவு செலவு செய்திருக்கப் போகிறோம்? எங்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்கள். கட்சி இனி எங்களுக்கு தேவையில்லை!" - நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் ஜெயந்தியின் கணவர் இராதாகிருஷ்ணன்! (செய்தி ..: ஆனந்த விகடன்)...



No comments:

Post a Comment

ஆம்பூர் ரயில்வே நிலத்தில் சட்ட விரோத் ஜூஸ் கடை கோர்ட் ஆணைப்படி அகற்றம் - வீடியோ

  Nisar Mohammed illegally occupied railway land in #Ambur , #TN running his 'Al-Taj Juice Park' for 10 years despite a court evict...