Tuesday, March 1, 2022

கருணாநிதி டாக்டர் பட்டமும் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் உதயகுமார் படுகொலையும்

Justice-K-Chandru
 

“ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தில்

போலீஸ் வன்முறையில் செத்துப்போன கல்லூரி மாணவன் உதயகுமாரின் அப்பாவின் ஞாபகம் – கருணாநிதிக்கு வராவிட்டாலும் நமக்கு வரவேண்டும். உதயகுமார் செய்த ஒரே குற்றம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை எதிர்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதுதான்.              

இறந்து கிடக்கும் உதயகுமாரின் உடலைப் பார்த்து, ” இது என் மகன் இல்லை ” என்று சொல்லும்படி கருணாநிதியின் போலீசாரால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையின் மனநிலையை நாம் மறக்கமுடியுமா? ” https://www.facebook.com/watch/?v=216938543557086

 


இது குறித்து பொதுவாக வெளிவந்த செய்திகளின் சாராம்சம் –சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சார்பாக முதலமைச்சர்கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான விழா 1971 ஜூலை மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 



அறிவிப்பு வெளியானதும் மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு
தெரிவிக்கத் தொடங்கினர்.. கல்லூரிப் படிப்பைக்கூடத் தொடாத க
ருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் என்பதுதான் அந்தக் குறிப்பிட்ட
மாணவர்கள் எழுப்பிய சர்ச்சை.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் காங்கிரஸ்,
இந்திய மாணவர் காங்கிரஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பட்டம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு கருணாநிதியைக் கேலி செய்தனர். கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைக் கட்டித் தொங்கவிட்டதாகச் செய்திகள் பரவின.
எனினும், காவல்துறையினரின் பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழா காலையில் நடந்துமுடிந்தது.

முதலமைச்சர் கருணாநிதி புறப்பட்டுவிட்டார். அதன்பிறகுதான் அடுத்த சர்ச்சை வெடித்தது. திடீரென மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் அறைகளில் தங்கியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர்.
லத்தி கொண்டு தாக்கியதால் மாணவர்கள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அடிபட்டு, உதைப்பட்டு, ரத்தமும் ரணமுமாகக் கிடந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலையில் முதல்வருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே மாலையில் மாணவர்கள் காவலர்களால் தாக்கப்பட்டனர் என்ற செய்தி மாணவர்கள் மத்தியில் பரவிக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் குளத்தில்
உதயகுமார் என்ற மாணவரின் பிணம் மிதந்துகொண்டிருக்கும் தகவல்
மாணவர்களை எட்டியது.




ஏராளமான மாணவர்கள் குளத்தைச் சுற்றித் திரண்டனர்.
காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த உதயகுமார்
குளத்தில் வீசப்பட்டாரா அல்லது தாக்குதலில் இருந்து தப்பிக்கக்
குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாரா என்ற சர்ச்சை பலமாக எழுந்தது.

காவல்துறை தரப்போ, இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று
திட்டவட்டமாகச் சொன்னது. குளத்தில் விழுந்ததால் முகம் உப்பிப்போய் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்ததால் உடலை – உதயகுமாரின் பெற்றோராலேயே அடையாளம் காணமுடியவில்லை.

காவல்துறையினரின் மிரட்டல் காரணமாகவே பெற்ற மகனை இல்லை என்று பெற்றோர்கள் சொல்லிவிட்டார்கள்;என்ற பேச்சு பரவலாக எழுந்தது. இதை உறுதிப்படுத்தினார் உதயகுமாரின் தம்பி.

இதனைத் தொடர்ந்து – இந்த நிகழ்வின் முழு பின்னணியையும்

ஆதாரபூர்வமாக சேகரிக்க முயன்றேன். பெரும் முயற்சிக்குப் பிறகு,
பதவி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களின்
பேட்டி ஒன்று காணக் கிடைத்தது.

விருப்பு வெறுப்பில்லாமல், முழு விவரங்களையும்
சொல்கிறது இந்தப் பேட்டி….. ( மிகவும் நீண்ட இந்த பேட்டியிலிருந்து
இந்த நிகழ்வுக்கு தொடர்பான விஷயங்களை மட்டும் தந்துள்ளேன். )


ஜஸ்டிஸ் சந்துரு அவர்களின் வார்த்தையில் –
இந்தச் சமயத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கருணாநிதிக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை மாணவர் அமைப்பினர் ஒருங்கிணைத்திருந்தனர்.

ஆனால் போலீசார் உதவியுடன் இந்தப் போராட்டம் ஒடுக்கப் பட்டுவிட்டது. இந்தப் பட்டமளிப்பு விழாவுக்குப் பெற்றோருக்கும் அனுமதி உண்டு. எனவே அவர்களும் வந்திருந்தனர்.

பெற்றோருக்கென வைக்கப்பட்டிருந்த உணவைப் போலீசார் உண்டதால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் பல்வேறு இடங்களுக்கும்
கலைந்து ஓடினர். இதில் நெல்லிக்குப்பம் பெருமாள்சாமி என்னும்
ஆசிரியரின் மகனான உதயகுமார் என்ற மாணவரின் சடலம்
ஏரியில் மிதந்தது.


போலீஸ் தடியடி மூலம் அவர் கொல்லப்பட்ட செய்தி நாளிதழ்
ஒன்றின் மூலம் தெரியவந்தது.

எனவே உண்மை அறியும் குழுவை ஏற்படுத்தி நீதி விசாரணை 
கோரினோம்.
கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில்
தன்னைக் கொல்ல மாணவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும்
இறந்தது உதயகுமார் இல்லை என்றும் சட்ட மன்றத்தில் கூறி
இந்தப் பிரச்சினையைத் திசை திருப்ப முயன்றார் கருணாநிதி.

ஆனால் மாணவர் அமைப்புகள் இதை விடவில்லை. எனவே வேறுவழியின்றி என்.எஸ். ராமசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

கடலூரில் விசாரணை நடைபெற்றது. எனக்குக் கடலூரில் எந்த லாட்ஜிலும் இடம்தரக் கூடாது; என அரசு எச்சரித்திருந்ததால் நான் பாண்டிச்சேரியிலிருந்து வந்து சென்றேன்.

திமுகவிலிருந்து யாரும் சாட்சியாக வரவில்லை. நாங்கள் 21 பேரை சாட்சியாக விசாரித்தோம். எங்களுக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை என நாங்கள் கேட்டுக்கொண்டதால் இறுதி விசாரணைக்கு சிதம்பரம் வந்தார். 3 மணி நேரம் சிறப்பாக வாதாடினார்.

தனது தீர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தடியடி
நடத்தப்பட்டது என்று தெரிவித்த நீதிபதி இறந்தது உதயகுமார் தான்
என்று குறிப்பிட்டுவிட்டார்.

அதுவரை இறந்தது உதயகுமாரே இல்லை என்று கருணாநிதி கூறிவந்தார். ஆனால் இந்தத் தீர்ப்பின் மூலம் இறந்தது உதயகுமார்தான் என்பது உறுதியாகிவிட்டது.

…….

தொடர்ந்து நடைபெற்ற பல போராட்டங்களில் நான் பங்குபெற்றதால்
(கருணாநிதி) அரசுக்கு என்மீது கோபம் ஏற்பட்டது. அண்ணாமலைப்
பல்கலைக்கழகக் கலவரத்திற்கு தீவிரவாத மாணவர்களின் சதியே 
காரணம் எனக் கூறி அரசு என்மீது எஃப்ஐஆர் பதிவுசெய்தது.

கருணாநிதி டாக்டர் கருணாநிதி ஆனது எப்படி?

http://www.tamilinfo.co.in/2018/08/karunanithi-doctor-karunanithi.html
1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது!
காரணம் அவர் அப்போதைய முதல்வர்.
இதற்கான அறிவிப்பு வெளியானதும் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.
ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட எட்டாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்?
என்பது மாணவர் அமைப்பின் கோஷம்.
இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் கருணாநிதியை ஆத்திரம் மூட்டியது.
கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு பல்கலைகழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள்.
இது மட்டுமின்றி பல்கலை கழக சுவற்றிலும் கழுதை படம் வரைந்து கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள் இது கருணாநிதி கவனத்திற்கும் வந்தது. கண்டு கொள்ளாத கருணாநிதி அவ்வளவு மாணவர்களின் எதிர்ப்பினையும் மீறி பெரும் போலீஸ் படையின் பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு டாக்டர் பட்டத்தை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி.
சாதாரண கருணாநிதி அண்ணாமலை பல்கலை கழகத்தின் தயவால் ,
"டாக்டர் கருணாநிதி"யாகி காட்சி அருளினார்.
அத்துடன்
காவல் துறை அதிகாரிகளிடம் தன்னை கழுதையாக்கிய மாணவர்களை கவனித்து அனுப்புங்கள் என்ற உத்தரவைப் பிறப்பித்து அங்கிருந்து கிளம்பி போனார்.
அன்று மாலை மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் மாணவர்களை ஓட ஓட விரட்டி அடித்து நொறுக்கினார்கள்.
மாணவர்களுக்கு மண்டை, கை, கால்கள் உடைந்தது!
"பரதேசி பயலுகளா.... முதல்வரையே கழுதை என்று எழுதுவீர்களா? என்று சொல்லிச் சொல்லி அடித்தார்கள்.
கருணாநிதியின் கைமாறுதனை புரிந்து கொண்ட மாணவர்களலஅடுத்த பேரதிர்ச்சி தாக்கியது .
பல்கலைகழக குளத்தில் பிணமாகி மிதந்து கிடந்தார் சக மாணவன் உதயகுமார்.
"உதயகுமாரை அடித்து கொன்று குளத்தில் போட்டது போலீஸ் தான்" என்ற மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தார்கள்.
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் கொல்லப்பட்ட உதயகுமாரின் அப்பா பெருமாள்சாமி
"இது என் மகனே இல்லை" என்று கூறி விட்டார்!
பெற்ற பிள்ளையையே ஒரு தகப்பன் "இவன் என் மகனே அல்ல" என்று கூறுகிறார் என்றால் ஆட்சியாளர்கள் எத்தனை தூரத்திற்கு அந்த தந்தையை துன்புறுத்தி இருப்பார்கள் என்பதை சாமான்யனும் உணர்ந்து கொள்ள முடியும்.
வெகுண்டெழுந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள்.
பத்திரிகைகளோ போட்டி போட்டுக்கொண்டு இச்செய்தியை பலவாறாக தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு படங்களுடன் வெளியிட்டு விற்பனை செய்தன.
காவல்துறையோ, இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று பிடிவாதம் பண்ணியது.
இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் அந்த உடல் யாருடையது?
உதயகுமார் என்கின்ற மாணவர் எங்கே போனார்?
"பட்டமளிப்பு விழா மதியம் முடிந்தபிறகும் கருணாநிதியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் படை மாலை வரை பல்கலைகழக வளாகத்தில் தங்கியது எதற்காக? மாணவர்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த காரணம் என்ன? என்பதான கேள்விகளை மாணவர்கள் எழுப்பினார்கள்.
உதயகுமார் படுகொலை குறித்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட
பிரச்சனையில், "கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில் மாணவர்கள் தன்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும் இறந்தது உதயகுமாரே இல்லை என்றும் சட்ட மன்றத்தில் பொய்யை மெய் படுத்திய கருணாநிதி, நியாயத் தராசை கையில் ஏந்தியபடி
தமிழ்நாடு அரசு சார்பில் N.S.ராமசாமி என்கிற நீதிபதி தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
விசாரணை என்ன சொன்னது?
குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமார் தான் , ஆனால் அவர் மரணத்துக்கும் போலீஸ் தாக்குதலுக்கும் துளியும் தொடர்பில்லை என்றும் கூறி கருணாநிதிக்கு
மகுடம் சூட்டி மகிழ்ந்தது.
காலச்சக்கரம் சுழர்கின்றது. ஏழு வருடங்கள் கடந்தன கருணாநிதி ஆட்சி இழக்கிறார்.தமிழக முதல்வராக திரு எம் ஜி ராமச்சந்திரன் பதவியேற்கிறார்.
அக்காலகட்டத்தில்
பத்திரிக்கைகளில் ஒரு கொட்டைசெய்தி .
முந்தைய கருணாநிதி ஆட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட உதயகுமாரின் தம்பியானவர், தற்போதைய
முதல்வர் MGR அவர்களிடம் நீதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தாக அந்தச் செய்தி கூறியது.
அனைத்து பத்திரிக்கைகளிலும் பிரசுரமான அந்தக் கடிதத்தை படிக்காதவர்கள் யாரும் அக்காலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றால் மிகையாகாது.
கடிதத்தின் சாராம்சம் இதோ:
"ஐயா,
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கொலையுண்ட உதயகுமாரின் தம்பியாகிய கே.பி.மனோகரன் எழுதிக்கொள்வது,
"எங்கள் குடும்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டு, சீரழிக்கப்பட்டது.
பெற்ற மகனையே இல்லை என தகப்பன் வாயால் சொல்லச் செய்த தீராத பழியை ஏற்ற எங்கள் குடும்பம் தாங்கள் அறிந்ததே.
இந்த சம்பவம் தொடர்பாக சில உண்மைகளை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
என் தமையன் கொலை செய்யப்பட்ட
அன்றைய காலகட்டத்தில், எங்களின்
வீட்டிலேயே கோர்ட் சீன் ஒன்றை உருவாக்கி,
ஜட்ஜ் கேள்வி கேட்டால்
என்ன பதில் சொல்ல வேண்டுமெனச் என் தந்தையை மிரட்டி பயமுறுத்தி சொல்லச் செய்தார்கள். இது ஒன்று.
அடுத்து,
எனக்கு அரசாங்க உத்தியோகம் கொடுப்பதாகவும்
எட்டு ஏக்கர் நிலம் மற்றும் வீடு போன்ற பல வசதிகளை
செய்து தருவதாகவும் கூறி இருந்தார்கள்.
எனக்கு அரசாங்க உத்தியோகம் கொடுப்பதாகக் கூறினார்கள். மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாக கூறி இருந்தார்கள்.
ஆனால் நாங்கள் இதுவரை எந்தவித உதவியும் பெறவில்லை என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ அநாதை பிணம் என்ற சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது தேவைப்பட்டால் ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல் என்று அதிகார தோரணையில் கூறியது இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை,நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன்.
எனக்கு அரசாங்கத்தில் உத்தியோகமோ அல்லது பிரைவேட் கம்பெனியில் உத்தியோகமோ வாங்கித்தரும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத்திற்காகவும் என்றென்றும் கடமை ஆற்ற காத்திருக்கின்றோம்.
தாங்களே எங்கள் இதய தெய்வமாக இருந்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
இப்படிக்கு.
கே.பி.மனோகரன்.
மனோகரன் குடும்பம் மாதிரி எத்தனையோ பேர், கருணாநிதியாலும் திமுகவாலும் அழிந்து போய் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் கருணாநிதியை எப்படி பழித்தார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் கருணாநிதி சாவதற்கு முன் பலநாட்கள் படுத்த படுக்கையாக, சுயநினைவு இல்லாமல் படுக்கையிலேயே மலஜலம் கழித்துக்கொண்டு புழுப்பூத்து இறந்து போனார்.
பாதி தமிழ் நாட்டையே ஆட்டைபோட்டு இருந்தாலும் கருணாநிதிக்காக மெரினாவில் ஆறு அடி நிலத்திற்கு எடப்பாடி காலில் விழுந்து கெஞ்சினார் ஸ்டாலின் இதெல்லாம் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறு,
பொன்னி ரவி

No comments:

Post a Comment