Thursday, March 31, 2022

திமுக அராஜகம்- மருத்துவர் சுப்பையா(ABVP) சஸ்பெண்ட் ரத்து -உயர்நீதிமன்றம்

அரியலூர் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் 10ம் வகுப்பில் பள்ளி மதல் மாணவியான லாவண்யா கன்னியாஸ்திரி வார்டன் கொடுமையால் தற்கொலை மரணத்தை முறையாக விசாரணை தேவை என்ற அறப் போராட்டம் ஒடுக்க திராவிடியார் அராஜகம்
 
தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த மாணவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.
அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவின் பேரில் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை நீதிபதி கிருஷ்ணகுமார் ரத்து செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Thiruma on GST