Sunday, June 12, 2022

மதுரை ஆதீனத்தை மிரட்டும் திமுக

மதுரை ஆதீனத்தை தோற்றுவித்தது திருநாவுக்கரசர் அல்ல திருஞானசம்பந்தர் என்கிற அடிப்படை இல்லாதவர்கள்தான் முரசொலியான் என துவக்கத்திலேயே நிரூபித்துவிட்டார்கள்.

துறவிக்கு வேந்தனே துரும்புதான்..காலம் காலமாக துன்புறுத்தலுக்கு மத்தியிலேயே எழுந்து வந்தவர்கள் நாங்கள்..பிற சமய தாக்கத்தால் சைவம் வீழ்ந்து போயிருந்த போது,நோயால் வாடிய கூன்பாண்டியனை மீட்டு,வாதில் வென்று மடத்தை ஸ்தாபிதம் செய்தார் சம்பந்த பெருமான்..

முதலில் தன் நிலையறிந்து ஆள்கிற அரசு பேச வேண்டும்..மக்கள் வாக்களித்து உங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளான் அதுவும் 3% வித்தியாஸத்தில்..மீண்டும் மீண்டும் மடாதிபதிகளை,ஹிந்து சந்யாசிகள்,கோவில்களை மிரட்டும் வேலையை நிறுத்த வேண்டும்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில்,காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நடந்தது உங்களுக்கும் நடந்துவிடும் என்றால் பூச்சாண்டியா?

இன்று மத்தியில் சோனியாவோ,மாநிலத்தில் ஜெயலலிதாவோ இல்லை என்பதை முதலில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.இந்த மிரட்டலை எல்லாம் நிறுத்திவிட்டு அனைவரையும் உள்ளடக்கி ஆட்சி செய்வது எப்படி என்று பாருங்கள்..அதைவிடுத்து மக்களின் வயிற்றெரிச்சலையும்,பெரியோர்களின் சாபத்தையும் வாங்காதீர்கள்.

இதில் கொடுமை,இந்து மதத்துக்கு கருணாநிதியை விட ஸ்டாலினால் அதிக ஆபத்து என்று ஹெச்.ராஜா சொன்னதையே மேற்கோள் காட்டுகிறார்கள்..அப்படியானால் திமுக இந்து விரோதி என முரசொலியே ஏற்றுக்கொள்கிறதா? 😂🤦‍♂️

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு தரமான சாலைகளை அமைத்து தருகிறது திமுக வாழ்த்துகள்


 

No comments:

Post a Comment