Monday, May 30, 2022

சங்க இலக்கியப் புலவர்களை சிறுமை செய்யும் நவீன டமில் புலவர்கள்

 ஸம்ஸ்க்ருத எதிர்ப்பு என்ற பெயரில் நடக்கும் கோமாளித்தனங்கள்!

ஒரு சங்கப்புலவரின் பெயர் தாமோதரனார்... இது தெளிவாக கண்ணனின் பெயர்... ஆண்டாள் திருப்பாவையில் பயன்படுத்துகிறார்! வடமொழிப் பெயரோடு ஒரு சங்கப் புலவர் இருப்பதா என்று வெகுண்டவர்கள் அப்பெயரை தாம் + ஓது + அரனார் என்று பிரித்து விரித்து விசித்திர வியாக்கியானம் செய்துள்ளனர்... ஆனால் அங்கேயும் பாருங்கள் அரன் என்ற சொல் ஹர என்ற வடமொழி சொல்லின் தமிழாக்கம் தான் என்பதை ஆய்வாளர் மறந்துவிட்டார்! நன்றி திரு.விஷ்ணு சர்மா முகநூல் பதிவு
எளிதாக புரிந்து கொள்ள கீழடி தொல்லியல் களத்தில் பொமு.150 காலத்தின் பானை ஒட்டில்
"திஸன் " என்ற பெயர், இதில் 'ஸ' தமிழில் இல்லை; 'ன' வடமொழியில் கிடையாது
சம்ஸ்கிருத மொழி என்பது இந்தியா முழுவதும் அறிவு சார் இணைப்பு மொழி, மிகத் தொன்மையான அனைத்து இலக்கியங்கள் அதில் மட்டுமே இயற்றப்பட்டு வந்த நிலையில்; வட இந்தியாவில் எழுந்த சமணம் வெகு ஜன பேச்சு மொழியான ப்ராகிருத மொழியிலும், ஆரிய அஷ்டாங்க மார்க்கம் எனும் பௌத்தம் பாலி மொழியிலும் இலக்கிய்ம் தோன்ற பிறகு, தமிழ் போன்ற மொழிகளிலும் சங்க இலக்கியம் போன்றவை தோன்றின. பிராமி எழுத்துக்கள் - சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கப்பட்டதை, தமிழ் தழுவி செம்மை செய்து தமிழ் பிராமி உருவானது.
சம்ஸ்கிருத மொழியில் உள்ள வர்க்க எழுத்துக்களுக்கு எழுத்துரு உள்ள நிலையில் உயிர் எழுத்துக்களில் குறில் "எ,ஓ" இல்லாதமையால் பிராமி, பின்னர் வட்டெழுத்து பின்பு தமிழ் எழுத்து, தொல்காப்பிய சூத்திரம் எல்லாமே இப்படிதான், 17ம் நூற்றாண்டில் தான் மாற்றம்
வந்தது. மேலும் படிக்க‌

தொல்காப்பியத்தின் காலம் 







பிறமொழிச் சொற்களை எடுத்து உடைத்து, வேர்ச்சொல்படி அவற்றை தமிழ் சொல் என்பது பன்னாட்டு பல்கலைக் கழக பேராசிரியர்கள் நிராகரித்தது என்பதை நாம் பேராசிரியர் V.S.Rajam கட்டுரை மூலம் புரிந்து கொள்ளலாம்

வேர்ச்சொல் ஆய்வு - பித்தலாட்டங்கள் - பேராசிரியர் V.S.Rajam

சங்க இலக்கியம் தொட்டு தமிழன் மெய்யியல் வேர் வேதங்களே சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே

மேலும் படிக்க‌

தமிழர்-திராவிடர், ஆரியர் என தனியே மரபணு அமைப்பு இல்லவே இல்லை. அறிவியல் சொல்லும் ரகசியம்

ஆரியர் வெளியிலிருந்து வந்தனர் - வரலாற்று ஆதாரங்களோடு நிரூபித்தால் இரண்டு கோடி பரிசு

No comments:

Post a Comment