Wednesday, May 25, 2022

சிகரெட் வியாபாரத் தந்திரம்


 
 சிகரெட் தயாரித்து அனுப்பி சில வாரம் கழித்து கம்பெனி நிர்வாகிகள் கூட்டம்- எதிர்பார்த்த விற்பனை இல்லை, எப்படி மக்களை சிகரெட் பிடிக்க வைத்து சந்தை வளர்ப்பது என ஆலோசனை கூட்டம்.

பலரும் விற்பனை அதிகரிக்க-  கமிஷன் அதிகம் தரலாம்; இலவசம் தரலாம் என்பது போல கூறியவை ஏற்கப் படவில்லை.
காலையில் தொடங்கிய மீட்டிங் மாலை வரை தொடர்ந்தது.
அப்பொழுது அங்கே சர்ச் ஊர்வலம் ஒன்று நடந்தது எல்லோரும் எழுந்து பால்கனி வழியாக பார்த்தனர்
 
பார்த்துவிட்டு வந்த தலைமை நிர்வாகி எனக்குத் யுக்தி தோன்றி விட்டது. இவற்றை விளம்பரப் படுத்துங்கள் என கொடுத்த ஐடியா இவையே.
சிகரெட் குடித்தால் 
1. உங்கள் வீட்டிற்கு திருடன் வரமாட்டான்
2. வயோதிக மூப்பு வராது. 
3.  உங்களுக்கு பெண் குழந்தை பிறக்காது
 
சிகரெட் விற்பனை சூடு பிடித்தது, நிர்வாகியின் பெண் காரியதரிசி இப்படி  கேட்டாள்
1. நீங்கள் சொன்னது உண்மை இல்லையே தானே?
2. இந்த விளம்பர யுக்தி தோன்றக் காரணம் எவ்வாறு?
3. யாராவது வழக்கு போட்டால் என்ன பதில் தருவது?
நிர்வாகியின் பதில்
1. நான் சொன்னது உண்மை, அடுத்த பதில்களில் புரியும்.
2. எனக்கு ந்த விளம்பர ஐடியா சர்ச் ஊர்வலம் பார்த்து வந்தது. பைபிள் கதை கொண்டு மரணதண்டனையால் இறந்த மனிதன் கதை வைத்து  இரட்சிப்பு - மீட்பர் என 2000 ஆண்டுகளாய் கப்சா வியாபாரம் நடந்து கொண்டு தானே உள்ளது.
3. நம் விளம்பரம் எதிர்த்து வழக்கு வந்தால்
1. திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்.
“ஆமாம் வரமாட்டான்..!” காரணம்? எப்பொழுது சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்களோ, அப்பொழுதே இருமல் வந்து விடும்..!
இருமிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரவேமாட்டான்…!
2 வது என்ன சொன்னேன்?
“முதுமையே வராது..” ஆமா எப்படி வரும்…?
சிகரட் குடித்தால் இளமையிலேயே செத்து விடுவான். எப்படி முதுமை வரும்…?
3 வது என்னசொன்னேன்?
“பெண் குழந்தை பிறக்காது…”
ஆமா எப்படி பிறக்கும்…? சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும். பிள்ளை பேறே இருக்காது ..!
இதில் ஆண் என்ன? பெண் என்ன..? பிள்ளையே பிறக்காது….!“ என்று சொல்லி முடித்தார்.

கிறிஸ்துவத்தை எப்படி ஐயா பொறுத்தி இந்த விளம்பர ஐடியா தந்தீர்கள் என்றாள்.
சுவிசேஷக் கதைப்படி, ஏசு ஒரு மனிதன், மரண தண்டனையில் அம்மணமாக தூக்கு மரத்தில் தொங்கி இறந்தார், இந்தக் கதையை நம்பி சர்ச் கேட்கும் பணத்தை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள், பூமியில் மனிதன் மரணம் ஆதாம் செய்த பாவம் அது  இயேசு மரணத்தில் போய்விட்டது என்றால் அப்புறம்  யாரும் பூமியில் இறக்கவே கூடாது.
காரியதரிசி: ஐயா பூமியில் பிறந்தவர்கள் சாகாமல் எப்படி முடியும்?
நிர்வாகி: என்னம்மா-கதையையே மாத்திறீக. இயேசு சொன்னதாக 
யோவான் 6:49 நமது முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் பூமியில் இறந்தனர்.
50 உண்பவரை பூமியில் இறவாமல் இருக்கச் செய்யும் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவே நான்.
51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த பூமியில் என்றுமே  வாழும்படி  உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே பூமியில் வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "// 
மன்னாவை உண்டவர்கள் இறந்து போனது பூமியில் தானே. நான் தரும் என் சதையை உண்டால் மன்னாவை சாப்பிட்டவர்கள் போல மரணம் வராது எனறால் என்னம்மா??
காரியதரிசி: ---
நி: கேட்டால் பரகலோகம், ஆத்துமா என நிரூபிக்க இயலாத கப்சா தானே கிறிஸ்துவம் என்றார்.  காரியதரிசி ஆமாம் கிறிஸ்துவம் முழுவதும்  கப்சா தான் என ஏற்றாள்
பாதிரி.வைகோ விளக்கம்

No comments:

Post a Comment