Tuesday, May 10, 2022

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.              -குறள் 259  புலான்மறுத்தல்  ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும்.
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. 
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்  -உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
தொல்காப்பிய நூற்பா குறிப்பது - உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. 
வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.




உலகின் நாகரீகத் தொட்டில் - சிந்து சரஸ்வதி நாகரீகம் அதன் உச்சத்தில் 2 லட்சம் சதுர மைல்கள் பரவி இருந்தது, தொன்மை ஹரியானாவின் குருக்ஷேத்திரம் ஆருகிலுள்ள பிர்ரானாவில் கிடைத்த தொல்லியல் பொருட்களின்படி பொமு 7500 வரை செல்கிறது.

சிந்து சமவெளி நாகரீகம் 9,500 ஆண்டு பழமையானது
பொமு 4000 வாக்கிலேயே வேள்வி குண்டங்கள் என பலவும் தொல்லியல் அகழ்வில் கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மொஹஞதாரோ ஹரப்பா என நம் பாடங்களில் கிடைத்தவை தாண்டி பல இடங்களில் மிகத் தெளிவான தரவுகள் கிடைத்துள்ளன.
 
                                                         காளிபங்கன் (ராஜஸ்தன்)  யூப சாலை
 ஹரியானாவில் பிர்ரானா,  ராஹிகார்ஹி, மெஹெர்கர்   தோலாவிரா லோத்தல்( முக்கிய துறைமுகம்-குஜராத்) 
மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)
செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? – கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்).
சங்க இலக்கியத்தில்  நால் வேதங்கள்படியான வேள்வி பற்றிய பாடல்.  
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல்     (புறம்:15)

ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)

இன்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலே நடைபெறுகிறது, தாய் மொழியில் பயின்றாலும் உலகின் ஒரு முக்கிய இணைப்பு மொழியாய் ஆங்கிலம் உள்ளது போலே பண்டை பாரத நாட்டில் வடமொழி இருந்துள்ளது. வடமொழியின் பேச்சு மொழியை ப்ராகிருதம், பாலி எனவும், செய்யுள் மொழியை சம்ஸ்கிருதம் எனவும் அழைக்கப் படுகிறது.

அசோகரின் 24 கல்வெட்டு இந்தியா முழுமையும் உளது, அதில் மைசூர் கல்வெட்டு மட்டுமே தமிழில் மீதம் அனைத்தும் வடமொழி தான்.  அசோகர் கல்வெட்டு பிராமி எனும் எழுத்துரு கொண்டுள்ளது, முதலில் வடமொழிக்கு உருவாக்கப்பட்டது, பின் தமிழிற்கு பயன்படும்போது "ழ", 
"ள", "ற" &  " போன்ற தமிழின் தனி சிறப்பு ஒலி எழுத்துக்களுக்கு உரு தர தமிழ் பிராமி உருவானது, அது பின் வட்டெழுத்து ஆகி, பின் நகரி என மாறியது, இன்று அனைத்து வட இந்திய மொழிகளும் நகரியோடு நின்றது, தமிழ் மேலும் சில மாற்றம் பெற்று இன்றைய வடிவம் பெற்றது.

தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள்.  தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள். 
அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.    தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.   வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும் .
பார்ப்பான்- வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
 செந்நிறம் புரிந்தோன் செல்லல்  நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
 காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து                 சிலப்பதிகாரம் வரந்தரு காதை

5000 வருட சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் சம்ஸ்கிருதப் பங்கு உள்ளது என பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேட்டி 
தமிழர் சமயத்தில் இறை வழிபாட்டின் முக்கிய வழிகாட்டிகள் அந்தணர்
அந்தம் + அணவுபவர் - இறைவனை அடைய  உலகின் இறுதிப் பொருளான  வேதங்களை அணவுபவர் எனப் பொருள்படும்

 தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
 வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை.  அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்   குறுந்தொகை 156. 5-6
  3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

திருவள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி உரைப்பார்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள் - அறநூல்களை மறப்பர்


பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24 பதிற்றுப் பத்து
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்         பாட்டு – 74 
பல போலி தமிழ் பற்றாளர்கள் - பார்ப்பனர் வேறு அந்தணர் வேறு என அருவருப்பாய் பொய் கூறுவர், அவர்கள் கிறிஸ்துவ சர்ச் வழி திராவிடம் எனும்  தமிழ் பகைவர்கள் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்ற கயவர் வழி கூட்ட வழிமுறையினர்.  


பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் - 2:50-63
வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு.

அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.
5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.
 "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."

மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.

வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?  வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !


குறள் பால்: அறத்துப்பால்.  துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259 புலான்மறுத்தல்
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை:அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் – தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று – ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).
மணக்குடவர் உரை:நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
Translation: Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Explanation: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்வதைவிட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்லது. இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
(எளிமையாகப் புரிய - இரண்டு பொருட்களைப் பொருத்தி பார்க்கையில் இலக்கண நெறிப்படி சமமான அல்லது உயர்ந்த பொருளோடு பொருத்திக் காட்ட வேண்டும்.
 உ-ம் கிரிக்கெட் விளையாட்டில் விராட் கோலியின் திறமையைக் கூற கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கரை விட நன்றாக விளையாடுகிறார் என்றும். நடிகர் விக்ரம் நடிப்பு சிவாஜி கணேசனை விட நன்றாக உள்ளது என்றாலும்- நாம் பின்னவரின் மேன்மை காட்ட மிகவும் திறமை வாய்ந்த உயர்ந்தவர்களைக் காட்டினோம் )
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.
 குறள் 413: கேள்வி
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
கேள்வி என சத்சங்கங்கள் செய்வது தேவர்கள் உண்ணும் அவி உணவிற்கு ஈடானது
வள்ளுவர் வேள்விகளை மிகவும் உயர்வாகவே கருதியதைக் கண்டோம்.
வேத முறைப்படி மூன்று அக்னிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி என்பவை. இவை ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளன.  முத்தீ பண்டைத் தமிழர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் பெருநற்கிள்ளியும் ஒற்றுமையாக இருப்பதை காண்கிறார் புறநானூற்று ஔவையார். பாடுகிறார்:

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
தொல்காப்பிய நூற்பா குறிப்பது -
உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. கரிய நிறத்திற்கு உவமையாக ஓர் பூவினையோ, மேகத்தினையோ, யானையையோ காட்டலாம்; ஆனால் கரிய கழிவுநீரைக் காட்டலாகாது.
உயர்ந்த பொருளையே ஒப்புமைப்படுத்த வேண்டும் -
அரிமா அன்ன அணங்குடைத் துப்பு – வினை உவமம் (வலிமையில் அரிமா உயர்ந்தது)
மாரி அம்பின் மழைத்தோல் சோழர் – பயன் உவமம் (மாரி அம்பினும் உயர்ந்தது)
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பு – வடிவு (கடல்பரப்பு உயர்ந்தது)
பொன்மேனி – வண்ணம் (பொன்னின் வண்ணம் மேனி வண்ணத்தினும் உயர்ந்தது)
உயர்ந்தவற்றின் மதிப்பைச் சொல்கையில் மிக உயர்வானவற்றை இணைத்துப்பேசுவது வள்ளுவம் பேணும் மரபும்கூட; இழிவான செயல்களைக் கூறுகையில் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தையும் அதில் காண்கிறோம்.
ஆ காத்து ஓம்புதல் பேரறம் என்பதால் அதைச் சொல்கிறார்-
ஆவிற்கு நீர்என் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்.
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு,
அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
(ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு நீரளித்தல்' என்று உவமை காட்டினார்)
வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.
வள்ளுவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உவமைகள் .
நுட்பமான உண்மைகளை விளக்கப் பொருத்தமான உவமை , எ. கா -
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"
"ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று"
உயர்வானவற்றுக்கு , ஏற்கத்தக்கனவற்றுக்கு உயர்ந்த உவமை; தாழ்ந்தவற்றைக் குறிக்க மிகவும் தாழ்ந்த பொருள்களோடு உவமை. இதுவே வள்ளுவம் பின்பற்றும் முறை. கைம்மாறு கருதாமல் உதவும் பண்பாளர்களுக்கு மழை உவமையாகிறது.
காமத்துப்பாலில் இன்பத்துக்கு மாலவனின் உலகு தரும் பேரின்பம் உவமையாகிறது.
சில பாக்களில் மலர் கண்களுக்கு உவமையாகிறது.
(குறள் 112,119,1231, 1142)
பொருட்பெண்டிருக்குப் பிணமும், மக்கட் பண்பற்றவருக்கு மரமும், உலோபியின் செல்வத்துக்கு நச்சு மரமும் உவமைகளாயின -
"பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று"
"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்."
"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று"
உயிர்க்கொலை மறுக்கும் பேரறத்துக்கு உயர்ந்ததான வேள்வி எடுத்துக்காட்டப்படுகிறது 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்பதுபோல -
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
'எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ' எனக் கம்ப ராமாயணம் பரதாழ்வானின் உயர் தகைமைகளைக் கோடி காட்டுவதற்குக் காப்பிய நாயகனான இராமபிரானையே எடுத்துக் கழிக்கிறது.
"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."
மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.
வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?
வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !

No comments:

Post a Comment