Monday, May 2, 2022

கிறிஸ்துவ மதத்திற்கு மாறாதவர்களை தடுக்க SC மக்கள் பொது பாதையை அடைத்த பாதிரி

மதம் மாற கிராம மக்கள் மறுப்பு; வழியை மறித்தது சர்ச் நிர்வாகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மருத்துவாம்பாடி கிராம மக்கள், மதம் மாற மறுத்ததால், வழியை மறித்து கிறிஸ்தவ சர்ச் நிர்வாகம் சுவர் எழுப்பியதை கண்டித்து, கிராம மக்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவாம்பாடி கிராமத்தில், ஹிந்து ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது.அந்த நிர்வாகத்தின் சார்பில், புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி நடத்தப்படுகிறது. அதன் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள, யேசுபாதம், 45, என்ற பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் அங்குள்ள ஒரு பிரிவு மக்களை, மதம் மாற வலியுறுத்தி வந்துள்ளார்; அவர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பொதுவழியாக பயன்படுத்தி வந்த இடத்தில் திடீரென சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.இது குறித்து கிராம மக்கள், பஞ்., தலைவர் சிவக்குமார் ஆகியோர் சர்ச் நிர்வாகத்திடம் கேட்டபோது, 'அது எங்களுக்கு சொந்தமான இடம். அதனால் சுவர் எழுப்பியுள்ளோம்' என, கூறியுள்ளனர்.
அந்த சர்ச் நிர்வாகம் மற்றும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள், கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
 சேத்துப்பட் & வேலூர் கத்தோலிக்க விவிலிய மாவட்டம் கீழ் வரும் -திருவண்ணாமலை மருத்துவம்பாடி  புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி நிர்வாகி ஆக வந்துள்ள பாதிரி.ஏசுபாதம் அராஜகம்,
பாதிரி புரோக்கர்.ஏசுபாதம்  ஊர் பொதுவழியை சர்ச் சொந்தம் என கிறிஸ்துவராக மதம் மாறினால் மட்டுமே ப்யன்ப்டுத்தலாம், என இரவோடு இரவாக அடைத்து விட்டாராம்.   
புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் கிறிஸ்துவராக மதம் மாறினால் மட்டுமே படிக்கலாம், பைபிள் கதையை ஏற்காமல் தமிழராக உலகைப் படைத்த கடவுளை ஏற்று இந்துவாக வாழ்வோர் ஏன் கிறிஸ்துவ பள்ளி என பாதிரி புரோக்கர்.ஏசுபாதம்  கேட்கிறாராம்
 அங்கே வாழும் 3000க்கும் அதிகமான எஸ்சி எஸ்டி மக்களை மதம் மாற கட்டாயப் படுத்துகிறார் பாதிரி புரோக்கர்.
திருவண்ணாமலையில் மதம் மாறினால் தான் பொது வழியை திறந்து விடுவேன் .. இந்து மத பிள்ளைகள் பள்ளியை விட்டு போயிடுங்க ..
மதம் மாற மறுத்த பட்டியல் இன மக்களிடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிரி ஆட்டம் ..    கத்தோலிக்க திருவண்ணாமலை

No comments:

Post a Comment