திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி
இந்திய ஞான மரபில் லக்ஷ்மி தேவி (திருமகள்) தங்கை எனவும் அவருடைய அக்காள் மூத்தவர் தவ்வை எனும் மூதேவி எனும் மரபை திருவள்ளுவர் உறுதி செய்துள்ளார்
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். குறள் 167: அழுக்காறாமை.
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனை திருமகள்வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

.jpg)
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை என்ற ஒளவையார் பாடலும்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். குறள் 617: ஆள்வினையுடைமை. மூதேவியின் பழமையைக் கூறுகின்றன.
சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.
அழுக்கு, நாற்றம், துன்பம்,புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும்.
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். குறள் 936: சூது.
சூதாட்டம் என்னும் மூதேவியால் விழுங்கப் பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
No comments:
Post a Comment