Thursday, April 28, 2022

வலுவான பன்னாட்டு ஒரு லாபி - ஃபாத்திமா சபரிமாலா வைத்து காய் நகர்த்துகிறது

 அளவில் ஒரு மிகப்பெரும் கும்பல் அந்தப் பெண்மணியை 
சபரிமாலா என்பவர் மூலம் நிகழும் அனைத்து நாடகங்களுக்குப் பின்னரும் வலுவான ஒரு லாபி இருக்கிறது. மக்காவின் புற நகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கிஸ்வா தயாரிப்பு மையம் மற்றும் மியூசியம் உள்ளடக்கிய வளாகத்திற்கு நானும் பலமுறை சென்றிருக்கிறேன். இவற்றை பார்வையிட மட்டுமே புனிதப் பயணிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால் சபரிமாலாவோ ஒரு நாட்டின் கண்ணியமிகு பிரதிநிதிக்கு அளிக்கப் படும் உயரிய மரியாதையோடு அணுகப்படுகிறார்.வழமையான புனித பயணிகளைப் போல அல்லாமல் தனிப்பட்ட உயர் ரக வாகனத்தில் அம்மிணி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவற்றை வீடியோ எடுத்து புளகாங்கிதத்துடன் ஒரு குழு பரப்பிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் கேட்பவை சமதர்மம் சார்ந்த எளிய கேள்விகள்.
அதற்கே அவரைப் போற்றிப்பாடும் எவரிடமும் பதில்கள் இல்லை. வெறும் பக்த கும்பல் மனநிலையை மட்டுமே பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது தமிழ் இஸ்லாமிய சமூகம்.
சபரிமாலா தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் தொடர்படியாக உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு அந்தப்பெண்மணியை நோக்கி வெளிச்சம் குவிக்கப்படுவதன் அரசியல் புலப்படும். இன்னும் காலம் இருக்கிறது, எல்லா உண்மைகளும் ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.
மீள்-நிஷா மன்சூர்
=====================
இதனை சொல்லி இருப்பவர் ஒரு முன்னாள் முஸ்லிம் அல்ல, ஒரு முஸ்லிம் தொழிலதிபர், கவிஞர்.
சொந்தமாக லப்டப் வாங்கக் கூட பணமில்லாமல் முஸ்லிம்களிடம் பணம் கேட்ட சபரிமாலாவிடம் கையில் பத்தாயிரம் ரூபாய் கூட இல்லை என்று அவரது இணைப்பாளராகச் செயற்படும் பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் மெளலவி அல் ஹாபிழ் செய்யத் அவர்கள் சொல்லுவதை முன்னைய பதிவின் வீடியோவில் இணைத்து இருந்தேன். கையில் பத்தாயிரம் ரூபாய் கூட இல்லாமல் பேஸ்புக்கில் மற்றவர்களிடம் உதவி கேட்டுக்கொண்டு இருந்த சபரிமாலா மக்காவுக்கு (அரேபியாவுக்கு) VIP விஜயம் செய்கின்றார் என்றால் 'சபரிமாலா என்பவர் மூலம் நிகழும் அனைத்து நாடகங்களுக்குப் பின்னரும் வலுவான ஒரு லாபி இருக்கிறது' என்று நிஷா மன்சூர் சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்க முடியாதல்லவா?
மதரஸாக்களில் சிறார்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், வசைபாடல்கள், பாலியல் சீண்டல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகம் பகிரங்கமாகப் பேசப் படாவிட்டாலும், அவை டக்கின்றன என்பது ரகசியம் அல்ல.

கேரளாவின் கண்ணூரில் பத்து வயதிற்கு உட்பட்ட 22 மதரஸா மாணவ, மாணவிகளை உஸ்தாதுகளான மௌலவி அப்துல் ரஹ்மான், மௌலவி அப்துல் நாசர் ஆகியோர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக கைது செய்யப் பட்டுள்ளனர்.
10 வயதிற்குக் கீழ்பட்ட குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் அளவுக்கு மனவிகாரம் உள்ளவர்களாக இவர்கள் மாறக் காரணம் என்னவாக இருக்கலாம்?
'தலைவன் எவ்வழியோ, அடிமைகளும் அவ்வழி' என்பது காரணமாக இருக்கலாமா?

இவ்வளவு நாளும் முற்போக்குவாதி, நீட் தேர்வுக்காக போராடிய ஒரு போராளி, சமூக செயற்பாட்டாளர், பெண்ணுரிமைப் போராளி என்று தூக்கிபிடிச்சீங்க! இப்ப மட்டும் லாபத்திற்காக நடிப்பவர் என்று உருட்டுறீங்க! நல்ல ஆட்கள்டா நீங்கெல்லாம்!
😁🤦‍♂️
சபரிமாலா இஸ்லாத்துக்கு வந்ததால இங்க ஒன்றுமே கூடப்போறதில்ல. அவரால் முஸ்லிம்களுக்கோ இஸ்லாத்திற்கோ எந்த சிறப்புமில்லை. அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேற நினைத்தாலும் அவ்வாறே! எதுவும் கூடவோ குறையவோ போவதில்லை!.
https://twitter.com/nach1keta/status/1061553348820828160?lang=bn

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...