Wednesday, April 27, 2022

கேந்திரிய வித்யாலயாவில் MPகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது மத்திய அரசு. ஹிந்தி பாடமொழியாக

கேந்திரிய வித்யாலயாவில் வழங்கப்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது மத்திய அரசு.

ஒவ்வொரு சீட்டையும் லட்சக்கணக் கில் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்து வந்தது முடிவுக்கு வந்தது.




ஹிந்தி பாடமொழியாக கற்பிக்கும் கேவி பள்ளிக்கு கனிமொழி

 ஹிந்தி பாடமொழியாக கற்பிக்கும் கேவி பள்ளிக்கு   தயாநிதி மாறன்

ஹிந்தி பாடமொழியாக கற்பிக்கும் கேவி பள்ளிக்கு   டி.ஆர்.பாலு

 ஹிந்தி பாடமொழியாக கற்பிக்கும் கேவி பள்ளிக்கு அ.ராசா


கொரோனா தொற்றில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயாவில் இலவசக் கல்வி வழங்கப்படும்.

கே.வி பள்ளிகளில் எம்.பி கோட்டா சீட் அவசியமா?

இது கல்வியின் தரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது

2010ல் இரண்டாவது முறையாக ஒதுக்கீட்டை மீட்டெடுத்த பிறகு, 2011ல் ஒரு எம்.பி., சேர்க்கைக்கு பரிந்துரைக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டது. (சி ஆர் சசிகுமாரின் விளக்கப்படம்)

கேந்திரிய வித்யாலயாக்களில் (KVs) சேர்க்கைக்கான சிறப்பு சலுகைத் திட்டமானது, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையின் சில சிக்கல்களால் பல ஆண்டுகளாக தடுமாற்றத்தில் உள்ளது. 1975 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், கேந்திரிய வித்யாலயா ஆளுநர்கள் குழு, அதன் கூட்டு நடவடிக்கைக் குழுக்கள், சட்ட அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களின் விளைவாக தொடர்ந்து வருகிறது. சிறப்பு சலுகைத் திட்டம் மூன்று முறை ரத்து செய்யப்பட்டது, ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருப்பமான ஏற்பாடு -பல மாற்றங்களைக் கண்டுள்ளது – 2016-17 ஆம் ஆண்டின் சமீபத்திய திருத்தம் அதன் உள்ளார்ந்த குறைபாடுள்ள தன்மையைப் பற்றி பேசுகிறது.

தற்போது, ஒவ்வொரு எம்.பி.யும் கேந்திரிய வித்யாலயாக்களில் 10 மாணவர்களை சேர்க்கைக்கு பரிந்துரைக்க இத்திட்டம் அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் 1997 இல் திரும்பப் பெறப்பட்ட பிறகு 1998 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1998 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு டெல்லி உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மேலும் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டது. 2010ல் இரண்டாவது முறையாக மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு மீட்டெடுக்கப்பட்ட பிறகு, ஒரு எம்பிக்கான மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு என்பது இரண்டு என்பதில் இருந்து 2011ம் ஆண்டு ஐந்தாக உயர்த்தப்பட்டது. இது 2012ல் ஆறாகவும், பின்னர் 2016ல் ஒரு எம்.பி 10 மாணவர்கள் வரை பரிந்துரைக்கலாம் என்றும் அதிகரிக்கப்பட்டது.

மக்களவையில் 543 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 245 எம்.பி.க்களும் இருப்பதால், ஒவ்வொரு கல்வியாண்டிலும் இந்த ஒதுக்கீட்டின் மூலம் மொத்தம் 7,880 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இத்திட்டமானது வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதால், கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதத்தை சிதைக்கிறது. குறிப்பாக கீழ் மட்ட அளவில், விரும்பிய கற்றல் நோக்கங்களை உறுதிசெய்ய ஆரோக்கியமான மாணவர்-ஆசிரியர் விகிதத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. இது புதிய கல்விக் கொள்கை 2020 இல் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது, புதிய கல்விக் கொள்கையானது மாணவர்-ஆசிரியர் விகிதத்தை 30:1க்குக் கீழே பரிந்துரைக்கிறது.

சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பகுதிகளில் 25:1 என்ற அளவில் மாணவர்-ஆசிரியர் விகிதத்திற்குக் குறைவான இலக்கை புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. கேந்திர வித்தியாலாயாவில் கல்வித் தரம் நீர்த்துப்போகச் செய்யப்படுவதால், MPகளின் ஒதுக்கீடு இந்த நோக்கங்களைத் தடுக்கிறது.
எம்.பி. ஒதுக்கீடு என்பது இந்தியாவின் தற்காலத்துக்கு ஏற்ற ஒன்றல்ல. இந்த முறை விரைவில் அகற்றப்பட வேண்டும். எம்.பி.க்களுக்கு விருப்பமானவர்களை சேர்ப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக ஆரம்பத்தில் இந்த முறை கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. சேர்க்கை நடைமுறைகளில் இத்தகைய விருப்பமான ஏற்பாடு தரத்தை புறக்கணிப்பதாக இருக்கிறது. இந்த முறையானது வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் தகுதிக்கு எதிரானதாகவும் இருக்கிறது. .

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் வழங்கப்படும் மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு இடங்களை அரசியல்வாதியானவர், அதன் சிறந்த பயன்பாட்டை உறுதிசெய்ய வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட நம்பகத்தன்மைதான் மக்களிடம் அடிப்படையான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு எம்.பி-க்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமான மக்கள் அவரை அணுகுகின்றனர். இடம் கேட்டு வரும் விண்ணப்பங்களில் இருந்து ஏற்ற மாணவர்களை மிகவும் தகுதியானவர்களை மதிப்பீடு செய்து தீர்மானிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. எனவே, இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது தன்னிச்சையான செயலாக மாறிவிடுகிறது. எம்.பி. ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 7,880 இடங்கள் வெளிப்படைத் தன்மையின்படி தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் சிறந்த நோக்கத்தை நிறைவேற்றியிருக்கலாம்.

ஒரு எம்பி 10 மாணவர்களை தேர்வு செய்த பிறகு, தனக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு நியாயமின்றி நிராகரிக்கப்படுவதால் தொகுதியில் எம்பி மீதான பொதுமக்களின் அதிருப்தி எனும் கோபம் அதிகரிக்கிறது. பல சக பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுபவங்களில் இது நிரூபிக்கப்பட்டிருப்பதால், இந்த ஒதுக்கீடு எம்.பி.க்களிடம் செல்வாக்கற்ற சக்தியாக மாறியுள்ளது, இது அதன் வரவேற்பை இழந்துள்ளது.

நாட்டின் பிற மத்திய கல்வி நிறுவனங்களின் நடைமுறையைக் காணும்போது கேந்திரிய வித்யாலயாவில் எம்.பி. ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை ஒதுக்குவது சீரற்ற நடைமுறையாகவே இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் அல்லது நாட்டிலுள்ள பிற மத்திய கல்வி நிறுவனங்களில் இத்தகைய விருப்ப ஒதுக்கீடு வழங்கப் படுவதில்லை. குறிப்பாக மற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு பரிந்துரைக்கும் எந்த அதிகாரமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத சூழலில் கேந்திரிய வித்யாலயாக்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக இத்தகைய ஏற்பாடு இருப்பது காரணத்திற்கு எதிரானது.
இடஒதுக்கீடு வரம்புகளை அப்பட்டமாக புறக்கணிப்பதன் மூலம், இந்த ஒதுக்கீடு அரசியலமைப்பு விதியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும் இது அரசியலமைப்புச் சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அளவுகோல்களின் நம்பகத்தன்மையை பராமரிக்கவும் தவறிவிட்டது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டின் உரிமையை பறிக்கிறது, மாற்றுத்திறனாளி மாணவர்களின் 3 சதவீத இடஒதுக்கீட்டின் உரிமையையும் புறக்கணிக்கிறது.

நாட்டில் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீடு கொள்கைகளுக்கு மாறாக இந்த ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் 3,940 மாணவர்களுக்கான அரசியலமைப்பு வழங்கிய உரிமையை பறிக்கிறது. இதன் விளைவாக,கேந்திரவித்தியாலயா பள்ளிகளை நிறுவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றான விளிம்புநிலை சமூகங்கள் மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குதல் என்பதை இது குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது:
எனவே எம்பிக்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்வது, அரசியலமைப்பு விதிகளுக்கு மதிப்பளித்து, கேந்திரவித்யாலாயாக்களின் உரிமையை நிறைவேற்றுவதற்கான வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.
நமது ஜனநாயகம் முதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பல விருப்புரிமை அதிகாரங்களை பாஜக ஆட்சி நீக்கியுள்ளது.: 2011 ஆம் ஆண்டு அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தபடி பெட்ரோல் பங்குகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை ரத்து செய்தல் மற்றும் பல்வேறு அமைச்சர்களின் நியமனங்கள் மற்றும் நியமன அதிகாரங்களை ரத்து செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. மாணவர் சேர்க்கைக்கான மத்திய கல்வி அமைச்சரின் விருப்ப ஒதுக்கீடு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. 2020-21ல் மத்திய கல்வி அமைச்சர் தமக்கான ஒதுக்கீட்டு முறையை திரும்ப ஒப்படைக்கும் வரை, இந்த ஒதுக்கீட்டின் வாயிலான சேர்க்கை 450ல் இருந்து 12,295 ஆக ஏறக்குறை 27 மடங்கு அதிகம் உயர்ந்திருந்தது. இதன் பின்னர் மத்திய கல்வி அமைச்சரின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறவில்லை.

இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, சிறப்பு சேர்க்கை திட்டத்தின் கீழ் எம்.பி.யின் விருப்ப ஒதுக்கீட்டை ரத்து செய்வது சரியானதாக இருக்கும்.

இந்த கட்டுரை முதன்முதலில் 24ம் தேதியிட்ட அச்சுப் பதிப்பில் ‘A quota too many’ என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வராக இருந்தவர். தற்போது பீகார் மாநிலத்துக்கான ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.



No comments:

Post a Comment