Thursday, April 28, 2022

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் -வள்ளுவர் கூறுவது என்ன

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், பெருமை அதிகாரத்தின் குறளின் அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம். 

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை)

பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது. செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக ஒத்து இருக்காது.

எளிமையான இந்தக் குறளை வைத்து நவீன தமிழ் மெய்யியல் மரபை ஏற்காத நவீன புலவர்கள் பிரிவினை மூட்டி திருக்குறளை சிறுமை செய்வதால் நாம் விரிவாகக் காண வேண்டி உள்ளது.

பொருள் கொள்ள வரிஅமைப்பு: 

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும்.
செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா.
பதவுரை: பிறப்பு-தோற்றம்; ஒக்கும்-ஒத்து அமைகிறது; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும். சிறப்பு- பெருமை ஒவ்வா- ஒப்பாகாது - ஈடாகாது- இணையாகாது; செய்-செய்யும்; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால்.

எல்லா உயிர்க்கும் -எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் -

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
உயிர் என்கையில் எல்லாவித உயிரையும் வள்ளுவர் பல்வேறு குறளில் சொல்லி உள்ளார். 

செய்தொழில் வேற்றுமையான் என அடுத்த அடியில் உள்ளதால் இது மனிதர்களை மட்டுமே குறிக்கும் 

பிறப்பு ஒக்கும் &  சிறப்பு ஒவ்வா - அருஞ்சொல் - இவற்றை வள்ளுவர் வேறு குறட்பாவில் என்ன பொருளில் பயன் படுத்தி உள்ளார் 

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூ ஒக்கும் என்று.
                     குறள் 1112 நலம்புனைந்துரைத்தல்
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்து ருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய். (தலைவியின் கண்ணையும் பூவின் மலரையும் ஒப்பீடு, ஆனால் இரண்டு வேறு; எனவே பார்வைக்கு ஒன்று போலே ஆனால் வெவ்வேறு எனவே அமைந்துள்ளது).
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் எனில் பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது.எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – பிறப்பு இயல்பு என்பது ஒரே மாதிரியாக அமைகிறது. சமம் என்பது பொருள் இல்லவே இல்லை 

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண் ஒவ்வேம் என்று.
                                           குறள் 1114: நலம்புனைந்துரைத்தல்
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால்,  தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். 
ஒவ்வேம் என்பது ஒவ்வா என மேலுள்ள குறள் போலே எதிர்மறையிலே தான் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்
ஒவ்வேம் -தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே
செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் கிடைக்கும் பெருமை ஒன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள்.

செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா எனில் செய்யும் தொழிலால் பெருமைகள் ஒன்று போல அமைவதில்லை எனப் பொருள்
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (அதிகாரம்:பெருமை குறள்:972)
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற வேறுவேறு தொழில்களால் கிடைக்கும் பெருமை ஒத்து இருப்பதில்லை


அதிகாரத்தோடே பொருள் காண்பது
வள்ளுவர் எந்த அதிர்காரத்தில் ஒரு குறளை இயற்றி உள்ளாரோ - அந்த அதிகாரத்தின் தலைப்போடேயே தான் பொருள் காண்பது தமிழ் இலக்கண மரபு
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -குறள் பெருமை அதிகாரத்தில் உள்ளது

971. ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு பெருமை தரும்; அதை நீங்கி வாழ்வோம் என்று கருதுதல் சிறுமையே உண்டாக்கும்.
972. அனைத்து உயிர்களின் பிறப்பும் ஒரே போல அமைகிறது; அவரவர் செய்யும் தொழில்களால் பெருமை வேறுபாடு உணரப்படும்.
973. மேலிருந்தும் மேன்மையில்லாதார் மேன்மக்களல்லர்; கீழிருந்தும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களல்லர்.
974. மகளிர் மனத்திண்மையால் தம்மைக் காத்தொழுகுதல் போலப் பெருமையும் ஒருவன் தன்னைக் காத்தொழுகின் உண்டாகும்.
975. பெருமை உடையவர் அரிய செயல்களை முறையாகச் செய்து முடிக்க வல்லவராவர்.
976. பெரியாரைப் போற்றிக் கொள்வோம் என்னும் கருத்து சிறியவர்கள் அறிவிற்குத் தோன்றுவதில்லை.
977. சிறப்புக்கள் சிறியாரிடத்துச் சேருமாயின் நெறிகடந்த செயல்களே நடக்கும்.
978. பெருமையுடையவர் எந்நாளும் பணிவோடு இருப்பர்; சிறுமையுடையார் தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.
979. செருக்கு இன்மை பெருமையின் குணம்; சிறுமைக் குணம் என்பது தருக்கி உலாவருதல்.
980. பெருமையுடையவர் பிறரது மானக் கேட்டை மறைப்பர்; சிறுமையுடையவர் குற்றங் குறைகளையே கூறிக்கொண்டிருப்பர்.
பெருமை அதிகாரத்தில் குறள்972 - பிறப்பு ஒக்கும் என்றவர் அடுத்த குறளிலேயே
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். ( 973:பெருமை)
மு. வரதராசன் உரை: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.
வள்ளுவர் கல்வியும் நற்பண்புகளில் ஒருவன் உயர் நிலை அடைய முடியும் என்கையிலேயே-நாம் வள்ளுவர் மேல் கீழ் என்பதை பிறப்பால் எனவும் கூறுவதைக் காணலாம்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. (409: கல்லாமை)
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

நல்ல குடியில் பிறந்தவனிடனிடமே நல்ல பண்புகள் இருக்கும்
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.(குறள் 958:குடிமை)
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். ( 959: குடிமை)
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.


எல்லோரையும் ஒன்றாகப் பார்க்கவேணுமா
வள்ளுவர் மிகத் தெளிவாய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் ( 528:சுற்றந்தழால்)
அரசன் எல்லாரையும் சமனாகப் பொதுநோக்கு நோக்காமல் அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது (விரும்பிச் சுற்றமாக) வாழ்பவர்கள் பலராவர்.

இவ்வுலக வாழ்விற்கு வள்ளுவர் காட்டும் வழி
வள்ளுவர் தன்மனிதன் நட்பு தேர்ந்தெடுக்க கூறு வழி
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. (793: நட்பாராய்தல்)
மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. (794: நட்பாராய்தல்)
மு. வரதராசன் உரை: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
அரசன் தன் சார்பாக தூது அனுப்ப்வோரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் வழி
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. ( 681: தூது)
அன்புடையவனாதல், உயர்ந்த குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

வள்ளுவத்தின் அடிப்படை வழிகாட்டல்
ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிலிருந்து தொடக்கம் முழுமுதல் கடவுளை உலகைப் படைத்த இறைமை (பிரம்மத்தை) கூறி தொடங்கினார்.
கல்வி கற்பதன் பயனே இறைவனின் திருவடியைப் பற்றி கொள்ளவே என்றவர்; இறைவன் திருவடி சேராதாரோல் மீண்டும் மீண்டும் பிறக்கும் பெரும் கடலை நீந்த (முக்தி- மோட்சம் அடைதல்)இயலாது என்கிறார்.

திருக்குறளிற்கு வள்ளுவர் தரும் முகவுரை அறன் வலியுறுத்தல் அதிகாரம் முதல் பாடலிலேயே
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31:அறன்வலியுறுத்தல்)
மணக்குடவர் உரை: முத்தியும் தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று

வள்ளுவத்தின் அடிப்படை- இறை நம்பிக்கை, இறைவன் திருவடியைப் பற்றி இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் வகையில் அறத்தை செய்து இறைவனை அடையும் வழி நாடவேண்டும்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். (குறள் 38:அறன்வலியுறுத்தல்)
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள் 36:அறன்வலியுறுத்தல்)
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (356:மெய்யுணர்தல்)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (339 :நிலையாமை)

இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். ( 362: அவாவறுத்தல்)
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. ( 361: அவாவறுத்தல்)

திருவள்ளூவர் அறத்தை வலியுறுத்த உத்தி
1. முந்தைய நூல்கள் மீது ஏற்றி வலியுறுத்துவார்- இது வள்ளுவர் பண்டைய மெய்யியல் மரபினை வலியுறுத்துபவர் என்பதை உறுதி செய்யும்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். 183:
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல்(தர்ம சாஸ்திரங்கள்) சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

2. உலகின் மீது ஏற்றி கூறுதல் - மரபு வழியே வாழும் சான்றோர்கள் ஏற்பதே உலகின் மீது ஏற்றி கூறுவது ஆகும்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 140:ஒழுக்கமுடைமை.
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34: அறன்வலியுறுத்தல்.)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள் 35:அறன்வலியுறுத்தல்.)
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. 735: நாடு.
சாலமன் பாப்பையா உரை: சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. 181: புறங்கூறாமை.
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.


திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யாரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-
.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். குறள் 508: தெரிந்துதெளிதல்
ஒருவரை ஆராய்ந்து பார்க்காமல் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. குறள் 452: சிற்றினஞ்சேராமை
நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. சிற்றினஞ்சேராமை குறள் 458
நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும் நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை அமையும்

வள்ளுவர் காலம் தொட்டு அடுத்த ஆயிரம் ஆண்டுகள் பொஆ1800 வரையிலும் கூட ஆசிரியர் வீட்டில் அவரோடே வசித்து குருகுல அமைப்பில் படிப்பது தான் வழி, எனவே இவை பெரும்பாலும் அவரவர் குடிக்கான கல்வியை கற்கும் சூழல்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.

“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)

இந்தக் குறளினை வைத்து தாங்கள் முற்போக்கு என நம்பிக்கைகளை வள்ளுவம் மேல் ஏற்றுவோர் தமிழிற்கு சிறுமை செய்கின்றனர், இதே வழியில் தொடர்புள்ள இன்னுமொரு குறள்

நீத்தார் என இவ்வுலக பற்றுக்களை நீத்து துறவறம் பூண்டோரைக் குறிப்பது

மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
கலைஞர் உரை: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505 : தெரிந்து தெளிதல்)
ஒருவரது சிறப்புக்கும் குறைபாட்டிற்கும் அவரவர் செயல்களே (செயலின் செம்மை) ஒருவர்க்குச் சிறப்பு தரும்.

ஒவ்வாக- ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் - செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

திருக்குறளின் அடிப்படை இறை நம்பிக்கையோடு முக்தியை தேடுதல் என்பது அதைவிடுத்து திருவள்ளுவர் சொல்லாததை திருவள்ளுவர் சொன்னதாகக் கூறி பிரிவினை வாதம் செய்வதை வள்ளுவர் ஏற்கமாட்டார் நாடு எனும் அதிகாரத்தில் அவர் கூறும் அதேபோல அருகிலேயே மிக முக்கியமான ஆழம் என்ன எனில் வள்ளுவர் கூறி உள்ளது எனவே பொய்யாக வள்ளுவத்தில் இல்லாததை வைத்துக்கொண்டு நாத்திகம் ஆத்திகம் இடையே பொருள் கூறுகிறேன் என்றும் தேவையற்ற விதத்தில் சிறிய விஷயத்தை பெரிது படுத்தி தமிழர் மெய்யியல் மரபு செய்வோர் திருக்குறளை சிறுமைப்படுத்தும் திருக்குறள் துரோகிகள் என பெண்களை அழைத்துக்கொண்டு பணி செய்யலாம்

நிறையுரை:எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; செய்யும் தொழிலின் வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவையாகா.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது பாடலின் பொருள்.
'பிறப்பொக்கும்' குறிப்பது என்ன?
பிறப்பு ஒக்கும் என்ற தொடர்க்கு பிறப்பு ஒத்துள்ளது என்பது பொருள்.
எல்லா உயிர்க்கும் என்ற தொடர் அனைத்து உயிர்களுக்கும் என்ற பொருள் தரும்.
சிறப்பு ஒவ்வா என்ற தொடர்க்கு பெருமையென்பது ஒத்திருக்காது என்று பொருள்.
செய்தொழில் என்ற தொடர் செய்கின்ற தொழில்கள் என்ற பொருளது.
வேற்றுமையான் என்ற சொல் வேற்றுமைகளால் என்ற பொருள் தருவது.

பிறப்பால் சிறப்பு உண்டாவதில்லை; செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுவதுண்டு.  

நண்பரைத் தேர்ந்தெடுக்க வழிமுறை 
திருவள்ளுவர் வாழ்வியல் வழிகாட்டி - நாம் 
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.                             குறள் 792: நட்பாராய்தல்
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.                                   குறள் 793: நட்பாராய்தல்
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல்
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.


நாட்டின் அரசன் தன் பணிக்கு தேர்வு செய்ய் வள்ளுவம் காட்டும் வழிமுறை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.             குறள் 681: தூது.
அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.                
குறள் 502: தெரிந்துதெளிதல்.
நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

அரசன் அனைவரையும் சமம் எனப் பார்க்கக் கூடாது
வள்ளுவர் மிகத் தெளிவய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. குறள் 993: பண்புடைமை
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.          குறள் 508:  தெரிந்துதெளிதல்
ஒருவரை  ஆராய்ந்து பார்க்காமல்  துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.               குறள் 528    சுற்றந்தழால்
 அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு.          குறள் 452:  சிற்றினஞ்சேராமை
 நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்

 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு 
இனநலம் ஏமாப் புடைத்து.        சிற்றினஞ்சேராமை குறள் 458
நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும்  நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை அமையும்

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959
நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 958

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 452

சார்ந்து வாழும் குழு- சார்தி - சாதி என்பது தெளிவான தமிழ் சொல், தமிழில் மிகப் பழமையான இலக்கியங்கள் (பொமு200 பொஆ 700 இடைய்லானது, தொல்காப்பியம் பொஆ 700 8ம் நூற்றாண்டிலானது, திருக்குறள் 9ம் நூற்றாண்டிலானது, சாதி இல்ல்லாத தமிழ் இலக்கியம் ஏதுமே இல்லை. இன்னும் வடமொழியிலோ இந்தியாவின் எந்த நூலில் இல்லாதபடி தமிழில் மெல் பிறந்தார், கீழ் பிறந்தார் எனப் பிறப்பால் சாதி/குலம் பேசப்படும். சாதி என்பது சமுதாயப் பிரிவாகத் தான் இருந்தது,

'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவி நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே''(தொல்.1219)

என்கிறது நூற்பா. தோன்றிய குடிநிலை, குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம், வினை ஆளும் தன்மை, வயது, வடிவம், நிலைத்த காதல், மனஅடக்கம், பரிவுணர்வு, அறிவு, செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமைய வேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின் வாழ்க்கையையும், தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.

  முதலாவது வள்ளுவர் வேறு பல குறள்களில் குடி பெருமை தொடங்கி  கர்ம வினை வரை இந்து மத மதிப்பீடுகளை முழுக்க முழுக்க அடியொற்றியே தன் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார். தர்ம, அர்த்த, காம மோட்ச என்ற சனாதன லட்சியங்களுக்கான நல்லுரையைத்தான் அறம், பொருள், இன்பம் என்று வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

 இரண்டாவதாக, இந்தக் குறளைவிட பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்பதே பிறப்பு சாரா பார்வையை அழுத்தமாக முன்வைக்கும் குறள். ஆனால், அதற்கு இணையாக குண கர்ம விபாசக தொடங்கி ஏராளமான வரிகள் வேதங்கள் தொடங்கி கீதைவரையிலும் உண்டு.

 வள்ளுவர் எந்த அளவுக்கு வர்ணத்துக்கு அப்பாற்பட்டவரோ அந்த அளவுக்கு வேதங்களும் சனாதன தர்மமும் அப்பாற்பட்டுத்தான் சிந்தித்து இருக்கின்றன. அது இன்னும் ஒருபடி மேலே போய் வர்ணங்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றே போதிக்கிறது.

  இந்து தர்மம் எந்த அளவுக்கு பிறப்புக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறதோ அதே  அளவுக்கு இன்னும் சொல்லப்போனால் அதையும்விட அதிகமாகவே வள்ளுவரும் உயர் குடிப் பெருமையைப் போற்றிப் பேசவும் செய்திருக்கிறார்.

 நற்குடியில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா. இதன் அர்த்தம் என்ன?

  ஒருவனது குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், அவனது சுற்றத்தையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புச் செய்தல் வேண்டும்.

 அன்பான குணமும், உயர்ந்த குடிப்பிறப்பும், மன்னன் விரும்பும் சிறந்த பண்பும் கொண்டிருப்பதே தூது சொல்பவனின் தகுதிகளாகும்

 -போன்ற குறள்களில் நட்புக்கும் வேலைக்கு ஆள் எடுக்கவும் கூட என்ன குடி என்று பார்க்கவேண்டும் என்கிறார். பிறப்பு சார்ந்து ஒருவரை மதிப்பிடும் பார்வைதானே இது.

  மூன்றாவதாக, இன்றைய இந்துத்துவ அரசியலும் சொந்த ஜாதிப் பற்று பிற ஜாதி நட்பு என்று சொல்வதன் மூலமும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று சொல்வதன் மூலமும் அதே உயர்ந்த கொள்கைகளையே முன்வைத்துச் செயல்படுகிறது.

இந்தக் குறளில் அனைவரும் சமம் எனவெல்லாம் புரட்சி கருத்துக்களை அருவருப்பாக திணிப்போர் குறளில் அவை எங்கே எனக் காட்ட வேண்டும்             

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –( கணியன் பூங்குன்றனார்) எனும் கோட்பாடு படி  ஒருவன் செய்யும் செயல் அதில் உள்ள அறத்தின் பலன்(புண்ணியமே) உன் நிலையை தீர்மானிக்கும். வள்ளுவர் நீ இப்பிறவியில் செய்யும் அறத்தின் பயன் உன் அடுத்து எழும் பிறவிகளில் நல்லது செய்யும் என்பார்.

 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது                                                பொன்றுங்கால் பொன்றாத் துணை.             குறள்.36 அறன்வலியுறுத்தல்

பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழிந்த பின்பும் எழும் பிறவிகளில் அழியா துணையாகும். 

ஒரு பெரும் சமுதாயத்தில் பணிக்கு ஏற்ப சட்டங்கள் அமையும்,  அஹிம்சையையும், புலால் மறுத்தலையும் போற்றி துறவரவியலில் கூறிய வள்ளுவர்.

சட்டம் - ஒழுக்கு என வருகையில் அது அவரவர் தொழில், தன்மைக்கு ஏற்ப மாறும் இதை நாம் திருக்குறளிலேயே காணலாம். அஹிம்சை, புலால் மறுத்தலை வலியுறுத்தும் வள்ளுவர் கொடியோரை (பாழ் செய்யும் உட்பகை இல்லாதபடிக்கு) - வயலைல் களை பிடுங்க் எரிதல் போலே மொழி - இனம் எனப் பிரிவினை தூண்டும் கொடியோரை வேரோடு அழிக்க வேணும் என்பார்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்                                                களைகட் டதனொடு நேர்.                 செங்கோன்மை குறள் 550

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.


எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.                      ஒற்றாடல்  குறள் 582

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்                    ஒழுக்கமுடைமை குறள் 134:

பிராமணன் தினமும் கூறும் வேதங்களை மறந்தாலும் மீண்டும் நினைவில் கொணரலாம், ஆனால்  தன் குடிப்பிறப்பு  ஆசாரத்தில்  குன்றினால் கெடு்ம்.


தமிழருள் பகைமூட்ட கிறிஸ்துவ நச்சுப் பரப்பல் செய்த தேவநேயப் பாவாணனைப் போலும், காலனி ஆதிக்க சர்ச் அடிமைகள் தமிழை காட்டிமிராண்டி எனப் பழித்த ஈ.வெ.ராமாசாமி வழி தமிழின் எதிரிகளும்

அற நூல் எழுதிய வள்ளுவரை வைத்து - இந்தக் குறள் மூலம் தமிழர் மெய்யியல் மரபை நிராகரிக்கிறார் என பிதற்றுவர்.

திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யோரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-

.கிறிஸ்துவ மதமாற்ற வேசித்தனத்தால் தமிழரை ஆரியர் - திராவிடர் என பொய்யான மோசடி நச்சு பரப்புவோரோடு பழகும் தமிழறிஞர்கள் வள்ளுவத்தினை சிதைக்கும் உரை தவறான கூட்டு தான். 

நச்சு கிறிஸ்துவமும், தமிழை காட்டு மிராண்டி பாஷை; தமிழை அழிக்கவே திராவிடம் என சொல்லியோர் கூட்டத்தில் இணைவோர் திருக்குறளை இழிவு செய்கின்றனர்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –( கணியன் பூங்குன்றனார்) எனும் கோட்பாடு படி  ஒருவன் செய்யும் செயல் அதில் உள்ள அறத்தின் பலன்(புண்ணியமே) உன் நிலையை தீர்மானிக்கும். வள்ளுவர் நீ இப்பிறவியில் செய்யும் அறத்தின் பயன் உன் அடுத்து எழும் பிறவிகளில் நல்லது செய்யும் என்பார்.


 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.             குறள்.36 அறன்வலியுறுத்தல்

பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழிந்த பின்பும் மறுமையில் அழியா துணையாகும்.


வள்ளுவர் ஒரு அரசன் தன் நாட்டை ஆளும் செங்கோல் பிராமணர்களின் வேதங்கள் மற்றும் அறநூல்களுக்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் என்பார்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 

நின்றது மன்னவன் கோல்.                குறள்.543   செங்கோன்மை

நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள்- அறநூல்களை மறப்பர்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 

காவலன் காவான் எனின்.             குறள் 560  கொடுங்கோன்மை

ஒரு பெரும் சமுதாயத்தில் பணிக்கு ஏற்ப சட்டங்கள் அமையும்,  அஹிம்சையையும், புலால் மறுத்தலையும் போற்றி துறவரவியலில் கூறிய வள்ளுவர்.


சட்டம் - ஒழுக்கு என வருகையில் அது அவரவர் தொழில், தன்மைக்கு ஏற்ப மாறும் இதை நாம் திருக்குறளிலேயே காணலாம். அஹிம்சை, புலால் மறுத்தலை வலியுறுத்தும் வள்ளுவர் கொடியோரை (பாழ் செய்யும் உட்பகை இல்லாதபடிக்கு) - வயலைல் களை பிடுங்க் எரிதல் போலே மொழி - இனம் எனப் பிரிவினை தூண்டும் கொடியோரை வேரோடு அழிக்க வேணும் என்பார்


கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.                 செங்கோன்மை குறள் 550

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்


எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.                      ஒற்றாடல்  குறள் 582

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்                    ஒழுக்கமுடைமை குறள் 134:

பிராமணன் தினமும் கூறும் வேதங்களை மறந்தாலும் மீண்டும் நினைவில் கொணரலாம், ஆனால்  தன் குடிப்பிறப்பு  ஆசாரத்தில்  குன்றினால் கெடு்ம்.


தமிழருள் பகைமூட்ட கிறிஸ்துவ நச்சுப் பரப்பல் செய்த தேவநேயப் பாவாணனைப் போலும், காலனி ஆதிக்க சர்ச் அடிமைகள் தமிழை காட்டிமிராண்டி எனப் பழித்த ஈ.வெ.ராமாசாமி வழி தமிழின் எதிரிகளும்

அற நூல் எழுதிய வள்ளுவரை வைத்து - இந்தக் குறள் மூலம் தமிழர் மெய்யியல் மரபை நிராகரிக்கிறார் என பிதற்றுவர்.

பொய்யான உரைகள்.

 சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான்.    என்பதை செய்யும் தொழிலால் வரும் வேறுபாட்டு சிறப்புகளும் பொருந்தாது என கதைக்கின்றனர்.


சிறப்பு ஒவ்வா உள்ள ஒவ்வா வேறோர் குறளிலும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்.

 ஒவ்வாக-  ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா

சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான் -   செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

வள்ளுவர் மிகத் தெளிவய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.               குறள் 528    சுற்றந்தழால்

 அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.


திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யோரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-

.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 

தீரா இடும்பை தரும்.          குறள் 508:  தெரிந்துதெளிதல்

ஒருவரை  ஆராய்ந்து பார்க்காமல்  துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்

சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 

இனத்தியல்ப தாகும் அறிவு.          குறள் 452:  சிற்றினஞ்சேராமை

 நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்

 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு 

இனநலம் ஏமாப் புடைத்து.        சிற்றினஞ்சேராமை குறள் 458

நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும்  நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை அமையும் 


கிறிஸ்துவ மதமாற்ற வேசித்தனத்தால் தமிழரை ஆரியர் - திராவிடர் என பொய்யான மோசடி நச்சு பரப்புவோரோடு பழகும் தமிழறிஞர்கள் வள்ளுவத்தினை சிதைக்கும் உரை தவறான கூட்டு தான். 

நச்சு கிறிஸ்துவமும், தமிழை காட்டு மிராண்டி பாஷை; தமிழை அழிக்கவே திராவிடம் என சொல்லியோர் கூட்டத்தில் இணைவோர் திருக்குறளை இழிவு செய்கின்றனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை) பிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான்

எல்லா உயிர்க்கும் – யாவர்க்கும்

சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது

செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள

வேற்றுமையான் – வேற்றுமைகளால்

எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது .


திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று சொல்கிறார். எனவே அவர் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை ஏற்கவில்லை. அதாவது சனாதன வர்ணாஸ்ரம வைதிக தர்மத்தை அவர் ஏற்கவில்லை என்று சொல்லியே  வள்ளுவரை இந்துத்துவத்துக்கு அப்பாற்பட்டவராகச் சொல்கிறார்கள்.


 இந்தக் கூற்று மூன்று வகைகளில் பிழையானது.


  முதலாவது வள்ளுவர் வேறு பல குறள்களில் குடி பெருமை தொடங்கி  கர்ம வினை வரை இந்து மத மதிப்பீடுகளை முழுக்க முழுக்க அடியொற்றியே தன் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார். தர்ம, அர்த்த, காம மோட்ச என்ற சனாதன லட்சியங்களுக்கான நல்லுரையைத்தான் அறம், பொருள், இன்பம் என்று வகுத்துக் கொடுத்திருக்கிறார்.


 இரண்டாவதாக, இந்தக் குறளைவிட பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்பதே பிறப்பு சாரா பார்வையை அழுத்தமாக முன்வைக்கும் குறள். ஆனால், அதற்கு இணையாக குண கர்ம விபாசக தொடங்கி ஏராளமான வரிகள் வேதங்கள் தொடங்கி கீதைவரையிலும் உண்டு.


 வள்ளுவர் எந்த அளவுக்கு வர்ணத்துக்கு அப்பாற்பட்டவரோ அந்த அளவுக்கு வேதங்களும் சனாதன தர்மமும் அப்பாற்பட்டுத்தான் சிந்தித்து இருக்கின்றன. அது இன்னும் ஒருபடி மேலே போய் வர்ணங்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றே போதிக்கிறது.

  இந்து தர்மம் எந்த அளவுக்கு பிறப்புக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறதோ அதே  அளவுக்கு இன்னும் சொல்லப்போனால் அதையும்விட அதிகமாகவே வள்ளுவரும் உயர் குடிப் பெருமையைப் போற்றிப் பேசவும் செய்திருக்கிறார்.

 நற்குடியில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா. இதன் அர்த்தம் என்ன?

  ஒருவனது குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், அவனது சுற்றத்தையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புச் செய்தல் வேண்டும்.

 அன்பான குணமும், உயர்ந்த குடிப்பிறப்பும், மன்னன் விரும்பும் சிறந்த பண்பும் கொண்டிருப்பதே தூது சொல்பவனின் தகுதிகளாகும்

 -போன்ற குறள்களில் நட்புக்கும் வேலைக்கு ஆள் எடுக்கவும் கூட என்ன குடி என்று பார்க்கவேண்டும் என்கிறார். பிறப்பு சார்ந்து ஒருவரை மதிப்பிடும் பார்வைதானே இது.

  மூன்றாவதாக, இன்றைய இந்துத்துவ அரசியலும் சொந்த ஜாதிப் பற்று பிற ஜாதி நட்பு என்று சொல்வதன் மூலமும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று சொல்வதன் மூலமும் அதே உயர்ந்த கொள்கைகளையே முன்வைத்துச் செயல்படுகிறது.

 அம்பேத்கர், காந்தி தொடங்கி பலரும் வியந்து சொன்ன ஒரு விஷயம் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் ஆர்.எஸ்.எஸ். முழுக் கட்டமைப்பில் ஜாதி சார்ந்த ஒடுக்குதல் துளிகூட இல்லை என்பதுதான். இன்றும் அது அப்படியே இந்து ஒற்றுமையையே தன் இலக்காகக் கொண்டே செயல்பட்டு வருகிறது.

 இத்தனை ஆண்டு கால வரலாற்றில் ஆர்.எஸ்.எஸில் ஜாதி பார்த்து நடத்தியதாக ஒரே ஒரு குற்றச்சாட்டுகூட யாராலும் வைக்க முடிந்திருக்க வில்லை. இத்தனைக்கும் அனைத்து அமைப்புகளுக்குள்ளும் ஊடுருவி அதை அழிக்கும் வேலைகளைச் செய்யும் மாபெரும் அழிவு சக்திகள் இடைவிடாது களமாடிக்கொண்டுதான் இருக்கின்றன.

 புனித நூல்களுக்கிடையிலான மோதலானது வேதங்களுக்கும் (கீதைக்கும்) திருக்குறளுக்கும் இடையில் நடக்கக்கூடாது. இரண்டுமே ஒரே உன்னத அறங்களை, லட்சியங்களை போதிப்பவையே. வேதங்களும் திருக்குறளும் கை கோர்த்துக்கொண்டு பைபிளையும் குர்ரானையும் எதிர்கொள்ளவேண்டும். அந்த அரசியல் பார்வை இந்துத்துவத்துக்குத் தெளிவாக இருப்பதால்தான் அது மங்கலான நிலையில் இருக்கும் தமிழகத்தில் கூட அதைக் கட்டம் கட்டித் தாக்கும் போக்கு இருந்துவருகிறது.

 எனவே வேத, சனாதன தர்மத்தை ஆதரிப்பவர்களும் திருக்குறளை மதிப்பவர்களும் இந்துத்துவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது பைபிள், குர்ரான், தாஸ் கேப்பிடல் புத்திரர்களையே.

 சரியாகச் சொல்வதானால் இந்த அடையாளங்கள் அனைத்தையும் வைத்து அம்மானை ஆடும் கார்ப்பரேட் சக்திகளையே எதிர்க்க வேண்டும்.

 நடைமுறை அரசியல் சார்ந்து நாம் யாரை எதிர்த்தாலும் ஆதரித்தாலும் கோட்பாட்டு ரீதியாக  இந்தத் தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.

  பி.ஆர்.மகாதேவன் (எழுத்தாளர், பத்திரிகையாளர்)

இந்தக் குறளில் உள்ள ஒக்கும், ஒவ்வேம் எனும் சொற்களை பொருள் செய்ய நாம் குறள் உள்ளேயே அணுகலாம், 20ம் நூற்றாண்டு சர்ச் அடிமையை நவீனர் தேவையே இல்லை.


ஒக்கும் - ஒத்து இருக்கின்றன, ஆனால் இரண்டும் வேறு என்பதைப் பொருத்தவே கட்டுகிறார்


'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

உருவி நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருஎன

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே''(தொல்.1219)


என்கிறது நூற்பா. தோன்றிய குடிநிலை, குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம், வினை ஆளும் தன்மை, வயது, வடிவம், நிலைத்த காதல், மனஅடக்கம், பரிவுணர்வு, அறிவு, செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமைய வேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின் வாழ்க்கையையும், தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.


நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959

நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை

குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 958


நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு

இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 452


சார்ந்து வாழும் குழு- சார்தி - சாதி என்பது தெளிவான தமிழ் சொல், தமிழில் மிகப் பழமையான இலக்கியங்கள் (பொமு200 பொஆ 700 இடைய்லானது, தொல்காப்பியம் பொஆ 700 8ம் நூற்றாண்டிலானது, திருக்குறள் 9ம் நூற்றாண்டிலானது, சாதி இல்ல்லாத தமிழ் இலக்கியம் ஏதுமே இல்லை. இன்னும் வடமொழியிலோ இந்தியாவின் எந்த நூலில் இல்லாதபடி தமிழில் மெல் பிறந்தார், கீழ் பிறந்தார் எனப் பிறப்பால் சாதி/குலம் பேசப்படும். சாதி என்பது சமுதாயப் பிரிவாகத் தான் இருந்தது,


குறள் 993: பண்புடைமை

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.


இந்தக் குறளில் அனைவரும் சமம் எனவெல்லாம் புரட்சி கருத்துக்களை அருவருப்பாக திணிப்போர் குறளில் அவை எங்கே எனக் காட்ட வேண்டும்.                   

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –( கணியன் பூங்குன்றனார்) எனும் கோட்பாடு படி  ஒருவன் செய்யும் செயல் அதில் உள்ள அறத்தின் பலன்(புண்ணியமே) உன் நிலையை தீர்மானிக்கும். வள்ளுவர் நீ இப்பிறவியில் செய்யும் அறத்தின் பயன் உன் அடுத்து எழும் பிறவிகளில் நல்லது செய்யும் என்பார்.


 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது                                                பொன்றுங்கால் பொன்றாத் துணை.             குறள்.36 அறன்வலியுறுத்தல்

பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழிந்த பின்பும் எழும் பிறவிகளில் அழியா துணையாகும். 

ஒரு பெரும் சமுதாயத்தில் பணிக்கு ஏற்ப சட்டங்கள் அமையும்,  அஹிம்சையையும், புலால் மறுத்தலையும் போற்றி துறவரவியலில் கூறிய வள்ளுவர்.


சட்டம் - ஒழுக்கு என வருகையில் அது அவரவர் தொழில், தன்மைக்கு ஏற்ப மாறும் இதை நாம் திருக்குறளிலேயே காணலாம். அஹிம்சை, புலால் மறுத்தலை வலியுறுத்தும் வள்ளுவர் கொடியோரை (பாழ் செய்யும் உட்பகை இல்லாதபடிக்கு) - வயலைல் களை பிடுங்க் எரிதல் போலே மொழி - இனம் எனப் பிரிவினை தூண்டும் கொடியோரை வேரோடு அழிக்க வேணும் என்பார்.


கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்                                         களைகட் டதனொடு நேர்.                 செங்கோன்மை குறள் 550

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

வள்ளுவர் மிகத் தெளிவய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.               குறள் 528    சுற்றந்தழால்

 அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.                      ஒற்றாடல்  குறள் 582

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்                    ஒழுக்கமுடைமை குறள் 134:

பிராமணன் தினமும் கூறும் வேதங்களை மறந்தாலும் மீண்டும் நினைவில் கொணரலாம், ஆனால்  தன் குடிப்பிறப்பு  ஆசாரத்தில்  குன்றினால் கெடு்ம்.

தமிழருள் பகைமூட்ட கிறிஸ்துவ நச்சுப் பரப்பல் செய்த தேவநேயப் பாவாணனைப் போலும், காலனி ஆதிக்க சர்ச் அடிமைகள் தமிழை காட்டிமிராண்டி எனப் பழித்த ஈ.வெ.ராமாசாமி வழி தமிழின் எதிரிகளும்

அற நூல் எழுதிய வள்ளுவரை வைத்து - இந்தக் குறள் மூலம் தமிழர் மெய்யியல் மரபை நிராகரிக்கிறார் என பிதற்றுவர்.

திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யோரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-

.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 

தீரா இடும்பை தரும்.          குறள் 508:  தெரிந்துதெளிதல்

ஒருவரை  ஆராய்ந்து பார்க்காமல்  துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்

சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 

இனத்தியல்ப தாகும் அறிவு.          குறள் 452:  சிற்றினஞ்சேராமை

 நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்

 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு 

இனநலம் ஏமாப் புடைத்து.        சிற்றினஞ்சேராமை குறள் 458

நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும்  நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை அமையும் 

கிறிஸ்துவ மதமாற்ற வேசித்தனத்தால் தமிழரை ஆரியர் - திராவிடர் என பொய்யான மோசடி நச்சு பரப்புவோரோடு பழகும் தமிழறிஞர்கள் வள்ளுவத்தினை சிதைக்கும் உரை தவறான கூட்டு தான். 

நச்சு கிறிஸ்துவமும், தமிழை காட்டு மிராண்டி பாஷை; தமிழை அழிக்கவே திராவிடம் என சொல்லியோர் கூட்டத்தில் இணைவோர் திருக்குறளை இழிவு செய்கின்றனர்.


No comments:

Post a Comment