தமிழகத்தில் அதுவும் நம்ம மதுரையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மதுரையில்  45 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர், தனது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். 

இதனையடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த வீரமணி என்ற நபருடன் இந்த பள்ளி ஆசிரியைக்கு அறிமுகம் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் தொடர்ந்து பழகி வந்து உள்ளனர். பின்னர், அவர்களுக்குள் கள்ளக் காதல் உறவு உருவானதாக கூறப்படுகிறது.

 

இதனால், அந்த ஆசிரியை தனது கள்ளக் காதலனுடன் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தான், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில், அந்த பள்ளி ஆசிரியை, தனது கள்ளக் காதலன் வீரமணியுடன் சேர்ந்து ஆபாச இணைய தளத்தில் பல ஆபாச வீடியோக்களை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த ஆபாச வீடியோக்களில் இருப்பது போன்று, ஒரு விதமான பாலியல் ரீதியான உறவு வைத்துகொள்ள, தன்னிடம் டியூசன்  படிக்க வந்த 2 மாணவர்களிடம் அந்த ஆசிரியை, பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்றும், பின்னர் அதனை தனது செல்போனில் அவர் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டார் என்றும், கூறப்படுகிறது.

பின்னர், ஒரு நாளில் அந்த வீடியோவை, தனது கள்ளக் காதலன் வீரமணியிடம் அந்த ஆசிரியை காட்டியதாகவும், அதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை வீரமணி தனது நண்பர் ஒருவருக்கு காட்டியதாகவும் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ விவகாரம் அங்கு பெரும் பிரச்சனைாயக மாறி உள்ளது.

இந்த விசயம், சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கும் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவர்கள், “ஏன் எங்கள் வீடியோவை இப்படி எல்லோருக்கும் போட்டு காட்டினீர்கள்?” என்று கேட்டு உள்ளனர்.

இதனால், அந்த ஆசிரியையின் கள்ளக் காதலன் அந்த மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள், அங்குள்ள கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நம்மந்தப்பட்ட வீரமணியை கைது செய்து, அவர் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்து உள்ளனர்.

அப்போது, அந்த ஆபாச வீடியோ அனைத்தும் செல்போனில் இருந்து உள்ளது.  இதனையடுத்து, வீரமணியும், அவரது காதலியான அந்த ஆசிரியையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், “அந்த பள்ளி ஆசிரியை, தனது கள்ளக் காதலன் உடன் சேர்ந்து சக மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதுடன், தனது மகனையும் மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கொடூரமும் நிகழ்ந்திருப்பதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.