Monday, July 18, 2022

பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவனுக்கு ஓரினச்சேர்க்கை உடல் முழுக்க கடித்த வார்டன்

பாளையங்கோட்டை கத்தோலிக்க விவிலிய மாவட்ட தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு  மாணவனை ஏசப்பா வார்டன்  ஓரினச்சேர்க்கை  உடல் முழுக்க கடித்து பாலியல் கொடுமை  

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாளையங்கோட்டை தூய சவேரி பள்ளி விடுதி வார்டன் மற்றும் பிளஸ் 2 மாணவன் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாவட்ட நூலகம் அருகே இருக்‍கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பரமக்‍குடியை சேர்ந்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்‍கு முன்பு அந்த மாணவருக்கு திடீரென உடல் நலக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து மாணவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் உள்ள விடுதி வார்டன் ராஜ்குமார் மற்றும் அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மற்றொரு மாணவனும் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. 

இதில் மாணவருக்கு உதடு கை விரல்கள், மார்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர் பரமக்குடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக பெற்றோர் நெல்லை மாகர காவல்துறையிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், விடுதி வார்டன் ராஜ்குமார் மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_187393.htmlhttps://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thirunelveli/hostel-warden-suspended-for-gave-sexual-harassment-for-school-student/tamil-nadu20220715152317794794352https://www.dailythanthi.com/News/State/chess-olympiad-tamil-nadu-team-meets-pm-modi-today-748983?infinitescroll=1

No comments:

Post a Comment