Wednesday, July 27, 2022

கேரளா சிஎஸ்ஐ பிஷப்-மருத்துவ கல்லூரியில் பல கோடி டொனேஷன் ஊழலால் வெளிநாடு தப்புகையில் தடை

சிஎஸ்ஐ பிஷப் வெளிநாடு தப்பியோட முயற்சி: விமான நிலையத்தில் மடக்கிய அதிகாரிகள்!


 மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோட முயன்ற பாதிரியாரை குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் மடக்கி பிடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 கேரள மாநிலம் காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், மருத்துவ சீட் வாங்கி தருவதாக பாதிரியார் தர்மராஜ் ரசாலம் கூறி இருக்கிறார். இதனை, நம்பி பலர் அவரிடம் பணத்தை கொடுத்து இருக்கின்றனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி அவர் மருத்துவ சீட் பெற்றதரவில்லை என்று கூறப்படுகிறது. இவர், கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 14 பேர் உட்பட மொத்தம் 24 பேரிடம் சுமார் 92 லட்சம் வரை பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, பாதிரியாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில், அமலாக்கத் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் மருத்துவ கல்லூரி, பாதிரியார் வீடு மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் செயலாளர் பிரவீன் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, பாதிரியார் தர்மராஜிடம் வெளிநாடு செல்வது என்றால், எங்களின் அனுமதியை பெற்ற பின்பு தான் செல்ல வேண்டும் என அமலாக்கத்துறையினர் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். ஆனால், பாதிரியார் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு ஜனம் ஆன்லைன் இணையதள பக்கத்தின் லிங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

https://www.ndtv.com/kerala-news/kerala-medical-college-scam-bishop-dharmaraj-rasalam-stopped-from-flying-to-uk-questioned-3195274

சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! - பிஷப் இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு



சி.எஸ்.ஐ சபைக்குத் தெரியாமல் பிஷப் மற்றும் சபை நிர்வாகிகள் மாணவ, மாணவிகளிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டதாக சபை நிர்வாகிகள் சிலர் புகார் அளித்ததன் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் காரக்கோணத்திலுள்ள சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த பண மோசடி சம்பந்தமாக அமலாக்கத் துறை நான்கு இடங்களில் சோதனை நடத்திவருகிறது. பிஷப் இல்லம் உள்ளிட்டவை அடங்கிய, தலைமையிடமான திருவனந்தபுரம் பாளையத்திலுள்ள எல்.எம்.எஸ் வளாகத்திலும், நெய்யாற்றின்கரை அருகேயுள்ள சிறியகொல்லா பகுதியில் அமைந்துள்ள சபைச் செயலாளர் பிரவீனின் வீட்டிலும், காரக்கோணம் சி.எஸ்.ஐ மெடிக்கல் காலேஜிலும், மெடிக்கல் காலேஜ் இயக்குநராக இருக்கும் ஸ்ரீகாரியம் பகுதியைச் சேர்ந்த பெனட் ஆபிரகாம் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடை பெற்று வருகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்லும்போது சபைச் செயலாளர் பிரவீன் இல்லை என்றும், அவர் சென்னை சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

காரக்கோணம் சி.எஸ்.ஐ மெடிக்கல் காலேஜில் அட்மிஷன் சம்பந்தமாக ஊழல் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சோதனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரியில் படிக்க மாணவர்களுக்கு சீட் வழங்குவதாக உறுதி அளித்தும், வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து பெற்றும் பணம் வாங்கியுள்ளனர். பின்னர் மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்காமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர். இது பற்றி கல்லூரிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யும் ஃபீஸ் அத்தாரிட்டி கமிஷனில் மாணவர்கள் புகார் செய்தனர். ஃபீஸ் அத்தாரிட்டி கமிஷன் விசாரணையில் மாணவர்களிடமிருந்து பணம் வாங்கியதாகவும், அந்தப் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவோம் என சி.எஸ்.ஐ பிஷப் தர்மராஜ் உறுதி கூறியிருக்கிறார்.

இது பற்றி வெள்ளறடை மற்றும் மியூசியம் காவல் நிலையங்களில் மாணவர்கள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இரண்டு காவல் நிலையங்களிலும் உள்ள வழக்குகள் பின்னர் க்ரைம் பிராஞ்ச் போலீஸுக்கு மாற்றப்பட்டது. க்ரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அந்தக் குற்றப்பத்திரிகையில், பணத்தை திருப்பிக் கொடுக்கலாம் என உறுதியளித்த பிஷப்பின் பெயர் இல்லை என்றும், க்ரைம் பிராஞ்ச் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


அமலாக்கத்துறை சோதனை

பணம் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு அளித்தனர். மேலும் சபைக்குத் தெரியாமல் பிஷப் மற்றும் சபை நிர்வாகிகள் மாணவிகளிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டதாக சபை நிர்வாகிகள் சிலரும் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும் பிஷப் உள்ளிட்டவர்கள் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை இன்று திடீர் சோதனையில் இறங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சபையைச் சீர்குலைக்கும்விதமாக ஒரு குழுவினர் செயல்பட்டுவருவதாகவும். அதன் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை ரெய்டு நடப்பதாகவும் சி.எஸ்.ஐ சபையைச் சேர்ந்த போதகர் காட்வின் தெரிவித்திருக்கிறார்.

https://www.thenewsminute.com/article/kerala-medical-college-scam-bishop-stopped-travelling-uk-ed-issues-notice-166248

https://www.thequint.com/south-india/church-of-south-india-csi-bishop-dharmaraj-rasalam-appears-before-enforcement-directorate-corruption-charges

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...