Sunday, July 17, 2022

Rev.ஜான் தயாள் -உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஒரு கன்னிகாஸ்திரியை கற்பழியுங்கள்

 Rev.ஜான் தயாள் -உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஒரு கன்னிகாஸ்திரியை கற்பழியுங்கள் செல்வராஜ் அறிவாயுதன்

சர்சைக்குரிய விஷயங்களை பேசும்போது கூட - சிறுபான்மை சமூக சர்ச்சை, பெரும்பான்மை சமூக சர்ச்சை என பிரித்து பார்த்தே பேசப்படுகிறது. சிறுபான்மை சமூக சர்ச்சை மூடி மறைக்கப்பட்டும், பெரும்பான்மை சமூக சர்ச்சை காலகாலத்திற்கும் பேசப்படுவதும் மாபெரும் அயோக்கியதனமில்லையா?

அந்த வகையில் மூடி மறைக்கப்பட்ட ஒரு சமூக ஆர்வலரின் விவாத பேச்சை மீண்டும் இங்கே பகிருகிறேன். 09-07-2019 அன்றைய தினம் மனித உரிமை ஆர்வலர் எனவும், முற்போக்காளி எனவும் சொல்லி கொண்ட ஜான் தயாள் எனும் நபர், மொத்த பெண்களையும் இழிவு செய்யும் விதமாக ஒரு கருத்தை சொன்னார் - தொலைக்காட்சி விவாதத்தில். அது குறித்து ஒரு வார்த்தை இங்கே உள்ள எந்த ரெட் லைட் ஊடகங்களில் பேசவில்லை. அச்சு ஊடகங்களும் அதே அயோக்கியதனத்துடன் தான் இருந்தது. எதை விவாதம் செய்ய வேண்டும், எதை விவாதம் செய்யக்கூடாது என்கிற அறிவில்லாமல் தான் ரெட் லைட் ஊடகங்கள் உள்ளன.
09-07-2019 அன்று, “டைம்ஸ் நவ்” சேனலில் ஒரு விவாதம். அதில் ஆர்எஸ்எஸ் பற்றிய ஒரு விவாதம் நடந்தது. விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது, ஜான் தயாள் ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு பதிலடியாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரஃபுல்ல கேத்கர் என்பவர், "உங்கள் சர்சுகளில் பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்யும், கற்பழிக்கும் பாதிரிகளை இதுவரை ஏதாவது செய்திருக்கிறீர்களா..? வழக்கு தொடுத்திருக்கிறீர்களா என்று கேட்டு விட்டு பல சர்சுகளின் பெயர்களையும் அங்கு நடந்த அத்து மீறல்களையும் குறிப்பிட்டார்.
கன்னிகாஸ்திரி கற்பழிப்பில் ஈடுபட்ட பிஷப் ஃப்ராங்கோ முலக்கல் மேல் ஏன் எந்த நடவடிக்கையும் உங்கள் மனித உரிமை சங்கம் எடுக்கவில்லை" என்று கேட்டார். அதற்கு பதிலாக மனித உரிமை ஆர்வலர் என சொல்லி கொள்ளும் ஜான் தயாள், "உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஏதாவது ஒரு கன்னிகாஸ்திரியை கற்பழியுங்கள். யாரும் உங்களைத் தடுக்க மாட்டர்கள்" என்று பதிலளித்தார். இப்படிப்பட்ட பேச்சால் நெறியாளர் நாவிகா குமார் உட்பட, விவாதத்தில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த லட்சக் கணக்கானோரும் அதிர்ந்தனர்.
அதன் பிறகு நெறியாளர் இவருடைய அருவெறுப்பான, அகம்பாவமான பேச்சிற்காக உடனேயே ப்ரஃபுல்ல கேத்கரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாதாடி கடைசியில் வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டார் ஜான் தயாள். நம் செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் ரெட் லைட் ஏரியா ஊடகங்கள் என்பதாலும், சர்ச்சைக்குரிய நபர் கிறிஸ்தவர் என்பதாலும் - இந்த மாபெரும் அயோக்கியதனமான பேச்சு குறித்து ஒரு செய்தி வெளியிடவில்லை. ஆனந்த விகடன், இந்து போன்ற அச்சு ஊடகங்கள் மட்டும் யோக்கியர்களா... மாமாக்கள் தானே. அவர்களும் இந்த செய்தியை வெளியிடவில்லை.
"ஏன்டா இந்த சர்ச்சைக்குரிய செய்தியை போடவில்லை" என கேட்டதற்கு ஒரு ரெட் லைட் ஊடகக்காரர் கூறியது, "ஆர்.எஸ்.எஸ். குறித்த விவாதத்தில், பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கன்னியாஸ்திரி பற்றி ஏன் பேச வேண்டும்" என கேட்டான். நியாயமான கேள்வி தான். ஆனால் ரெட் லைட் செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் நேர்மையற்று இருப்பதால், தான் ஆர்.எஸ்.எஸ் குறித்த விவாதத்தில், பாதிரியார்களால் கொடூரமாய் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கன்னியாஸ்திரிகளை பற்றியும் பேச வேண்டி உள்ளது.
நாடெங்கும் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளார்கள். புதிய தலைமுறை, நியூஸ் 7, நியூஸ் 18, தந்தி, கலைஞர் செய்திகள், பெரியார் தொலைக்காட்சி என எந்த ரெட் லைட் தொலைக்காட்சியாவது, விவாதம் நடத்தி உள்ளதா? ரெட் லைட் ஊடகங்களே பாரபட்சமுடன் விவாதம் நடத்தி கொண்டு கேவலமான பிறவிகளாக இருக்கையில், ஒரு விஷயத்தை பற்றி விவாதம் நடத்துகையில் இன்னொரு விஷயத்தை பற்றி பேசுவது சரியா" என யோக்கியனை போல் கேட்பது பச்சை அயோக்கியதனமில்லையா?
ஸ்டாலின், இஸ்லாமிய திருமணத்திற்கு சென்றுவிட்டு, தேவையில்லாமல், சம்பந்தமில்லாமல் ஓசி பிரியாணிக்காக, இந்துக்களின் திருமண முறையை குற்றம் சொல்லி பேசுவது சரியென்றால், ஒரு விவாதத்தில் இன்னொரு அயோக்கியதனத்தை பற்றி பேசுவது எப்படி தவறாகும். ஸ்டாலின், இஸ்லாமிய திருமணத்தில் இந்து திருமணம் குறித்து வைத்த கருத்துகளில் தவறில்லை என்றால், ஆர்.எஸ்.எஸ். குறித்த விவாதத்தில் பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் குறித்து பேசியது எப்படி தவறாகும்.
ரெட் லைட் ஊடகக்காரர்களுக்குக்கு, "ஜான் தயாள் என்கிற நபர், "உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஏதாவது ஒரு கன்னிகாஸ்திரியை கற்பழியுங்கள்." என சொன்னது தவறாக, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாக தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் குறித்த விவாதத்தில், இன்னொன்று பற்றி பேசுவது மட்டும் தவறாக தெரிகிறது. "சில விஷயங்களை பற்றி விவாதம் நடத்தவே ரெட் லைட் ஊடகங்கள் அஞ்சும்போது, இப்படி வேறு விவாதத்தில், இடைச்சொருகலாக சில கொடுமைகளை பேசினால் தானே உண்டு.
எந்த ஊடகமாகவது பாலியல் வன்கொடுமை பாதிரியார்களை பற்றி விவாதம் நடத்தியதா? கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் கத்தோலிக்க தேவாலயப் பேராயர் ஃபிரான்கோ தம்மை பலாத்காரம் செய்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்திய கன்னியாஸ்திரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என வாடிகனில் உள்ள போப்புக்கு கடிதம் எழுதியிருந்தார். "இந்த நாட்டு அரசு எதற்கு உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி தர முடியவில்லை. பாதிக்கப்பட்டவரும், அயல்நாட்டிலுள்ள மத பீடத்தை அணுகுகிறாரே.. இது சரியா" என எந்த ரெட் லைட் ஊடகங்களும் விவாதம் நடத்தவில்லை எனும்போது, இன்னொரு விவாத்தில் இதை பற்றி பேசுவதில் என்ன தவறிருக்க முடியும்.
இந்தியாவில் நடக்கிற மத வன்முறை பற்றி விவாதம் நடக்கையில், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ் தீவிரவாதக்குழுக்களை பற்றி பேசுவது தேவையில்லாதது தான். ஆனால் என்றைக்காவது எந்த ரெட் லைட் செய்தி தொலைக்காட்சிகளாவது, பெருந்திரளாக இந்தியாவிவிருந்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து, மாண்டு போவதை பற்றி விவாதமாக நடத்தி உள்ளதா? அவர்களும் இந்திய பிரஜைகள் தானே. அவர்கள் மீது அக்கரை இல்லையா? ஊடகங்கள் பேச மறந்தாலும் ஏதாவது ஒரு விவாதத்தில் இடையில் இம்மாதிரியான விஷயங்களை பேசுவது ஒரு அறம் சார்ந்த விஷயம் தான். இதிலென்ன தவறை கண்டுபிடித்தார்கள் ஊடகப் பேர்வழிகள் என தெரியவில்லை.

No comments:

Post a Comment

Sun TV must apologise for fradulantly making remarks against V.O.Chidambaram

HC asks TV channel Adithya to apologise for remarks mocking V.O. Chidambaram Published - August 05, 2026 08:16 pm IST - MADURAI   The Hindu...