Thursday, May 5, 2022

தமிழர் விரோத திருமா - பெங்களூர் மேடையில் துரத்தல்- கூலிபானாக இருப்பவர் மனிதத் தன்மையோடு மாறுவாரா?

பெங்களூரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த திருமாவளவனுக்கு எதிர்ப்பு 

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு தலித் அமைப்பின் நிர்வாகி ஒருவர் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. https://www.hindutamil.in/news/india/795940-opposition-to-thirumavalavan-who-criticized-prime-minister-modi-at-bangalore-meeting.html

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள சர்ஜாப்பூரில் கடந்த மாதம் 24-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


அம்பேத்கர் சேவா சமிதி அமைப்பின் சார்பில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி, ஆனேக்கல் காங்கிரஸ் எம்எல்ஏ சிவண்ணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாபா சாகேப் அம்பேத்கரின் சிலையை திறந்து வைத்து திருமாவளவன் பேசுகையில், “நாட்டின் அரசியலமைப்பை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கரே நவீன இந்தியாவின் தேச தந்தை ஆவார். அவர் வடிவமைத்து கொடுத்ததை கொண்டே இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கிறார்கள்.  

Krishnan SK
2004 ல் முதல் முதலாக பெங்களூரில் வேலை பார்க்க வந்த போது தெற்கு பெங்களூர் பகுதிகளான மடிவாலா, BTM, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி போன்ற பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சிகளின் போஸ்டர்கள் இருக்கும். அப்போது அவர்கள் DPI (Dalit Panthers of India) என்கிற பெயரில் இருந்தார்கள். நான் தங்கியிருந்த மடிவாலா பகுதியில் ஏப்ரல் 15 அம்பேத்கர் பிறந்த நாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இருக்கும்.
இன்றைய விஷயத்திற்கு வருகிறேன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சர்ஜாபூரில் தான் திருமாவளவன் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) கீழ் மடிவாலா, BTM, HSR லே அவுட் பகுதிகளில் தலித்துகள் வசிக்கும் பகுதிகளில் குடிசைகளை அகற்றி கான்க்ரீட் வீடுகள் 2018 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டன. அதனால் இங்கு பட்டியல் இன மக்களிடையே மோடி ஆதரவு தூக்கலாக இருக்கும்.
ஓசூர் தாண்டி என்ன நடக்கிறது என்று தெரியாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் திருமா மோடியை வில்லன் என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் தலித்துகளின் நலனுக்காகவே கட்சி நடத்துகிறார் என்று நம்பி விருது கேடயம் கொடுத்து கௌரவித்த DPI அமைப்பிற்கு இது எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அதனால் தான் திருமாவை மேடையை விட்டு இறக்கியதுடன் கேடயம், சால்வை உட்பட அனைததையும் பிடுங்கி வெளியே அனுப்பி இருக்கிறார்கள். விழா அமைப்பாளர் பேசும் போது "மோடி வில்லன் அல்ல. எங்களுக்கெல்லாம் ஹீரோ" என்று மைக்கில் சொல்லியிருக்கிறார்.
2014 ல் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் தனித்தனியாக போட்டியிட்ட போது 28 சீட்டுகளில் பாஜகவிற்கு 17 மட்டுமே கிடைத்தது. ஆனால் பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட்ட 2019 ல் 28 ல் 25 கிடைத்திருக்கிறது. காரணம் தெற்கு பெங்களூர், பழைய மைசூர், ஐதராபாத் கர்நாடகா போன்ற ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் வசிககும் மாவட்டங்களில் PMAY திட்டத்தின் படி கான்க்ரீட் வீடுகள் கட்டி கொடுத்தது தான்.
எல்லா மாநில மக்களும் சாராயத்திற்கும் சால்னாவிற்கும் ஓட்டை விற்கும் டுமிழன்கள் என்று நினைத்து விட்டு கண்டதையும் பேசியதால் தான் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார் திருமா.
தமிழகத்தில் உள்ள ரெட் லைட்கள் இந்த விஷயத்தை மறைத்தாலும் இங்கே பெங்களூரில் இது தான் பேசும் பொருளாக இருக்கிறது.
டிஸ்கி : கடந்த ஆண்டு இதே பெங்களூரில் சிவாஜி நகரில் ஒரு பேருந்தில் மோடியை திட்டியவனை சக பிரயாணிகள் பிரியாணி பண்ணி பேருந்தை விட்டே விரட்டி விட்ட சம்பவம் நடை பெற்றது. மோடி ஒயிக எல்லாம் அத்திபள்ளி செக்போஸ்ட் வரையிலும் தான்.

 அந்தவகையில் அம்பேத்கர் தான் எப்போதும் ஹீரோ. அந்த காலத்தில் அவருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி. இந்த காலத்தில் வில்லனாக இருப்பவர் பிரதமர் மோடி” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் விமர்சித்து பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.








இறுதியாக நிகழ்ச்சி முடிந்து திருமாவளவன் கிளம்பும்போது மைக் அருகே சென்ற அமைச்சர் ஏ.நாராயணசாமியின் ஆதரவாளரும் தலித் அமைப்பின் நிர்வாகியுமான படாபட் சீனிவாஸ், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக, திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், விசிகவினரும் அதிர்ச்சி அடைந்து, அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.  

 

திருமா...!! உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள் திருமா... 

லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத் தமிழர்கள்...
திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,,
அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம்
இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நீதி அளியுங்கள் என்று கூறினார்
அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்பவர்,
உன்னை போன்ற ஆள்களால் தான் எங்கள் இனமே அழிந்தது,, எங்கள் மக்கள் அழிவிற்க்கு காரணமான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்த இன துரோகி நீ,
நிச்சயம் உன்னை போன்ற ஆள்கள் இருப்பதால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம்
இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டு வை ,,
அவர்களாவது பிழைத்து கொள்ளட்டும் ,,
உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்,,
இனி மிச்சம் மீதி இருக்கிற எங்களையாவது வாழ விடு.. https://www.facebook.com/jaihindusm/videos/353006618976447/?__tn__=%2CO

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாஜக ஆதரவாளர்கள் அதனை பகிர்ந்து, திருமாவளவனை விமர்சித்து வருகின்றனர்.  

திருமா போன்றவர்கள் தமிழ் பண்பாட்டிட்கு விரோதமாக பேசுவது ஏன், பலன் என்ன‌

 

முஸ்லிம் மசூதிகளில் தீண்டாமை ஜாதிகள்- பிரிவினைகள் (காணொளி)

இஸ்லாம் -ஒட்டக மூத்திரம், நபி மூத்திரமும் சளியும்; காணொளி + ஹத்தீஸ்

“மோடி வில்லன் இல்லை.. ஹிரோ..!” விசிக-வில் எதிர்ப்புக் குரல்..! பாதியில் கிளம்பிய திருமா.. வைரல் வீடியோ..

முஸ்லிம் மசூதிகளில் தீண்டாமை ஜாதிகள்பிரிவினைகள் (காணொளி)

 

முஸ்லிம் மதம் மாறும் போதே சரியான முஸ்லிம் ஜாதிக்கு மாறலைன்னா BC சர்டிபிகெட் கிடையாது

முஸ்லிம்களுக்குள் ஜாதி வேற்றுமை ஜமாத்து சண்டை, இறந்தவர் பிணம் அடக்கம் அனுமதி இல்லை 

பெங்களுரூவில் நடந்தக் கூட்டத்தில் திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும் போதே,  கூட்டத்தில் ஒருவர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதால், நிகழ்ச்சியை பாதியில் முடித்துவிட்டு அவர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து தொடங்கும் முதல் கடுமையாக விமர்சித்து வருபவர் திருமாவளவன். விசிக கட்சி தலைவரான இவர் சனாதன கொள்கைகளை பின்பற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகிறார். கட்சியில் சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், செய்தியாளர் சந்திப்பில் கூட பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் இந்திய அளவில் பாஜக எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்பதை அழுத்தமாக கூறி வருகிறார்.

 இந்நிலையில் பெங்களுரூவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட திருமாவளவன் உரையாற்றும் போது, பாஜகவை விமர்சித்தும் பிரதமர் மோடியை வில்லன் என்று குறிப்பிட்டு உரையாற்றியதாக கூறப்படுகிறது. அப்பொழுது கூட்டத்தில் எதிர்பார்காத வகையில் ஒருவர், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நபரோ, பிரதமர் மோடி வில்லன் இல்லை என்றும் இந்த தேசத்தில் ஹீரோ என்றும் கோஷமிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவிற்கு ஆதரவாகவும் மைக் பிடித்து அந்த நபர் பேசிக்கொண்டிருந்தார். ஒரு நிமிடம் நில்லுங்கள் தொல்.திருமாவளன் சார். நான் சொல்ல வருவதை கேளுங்கள். உங்கள் மேல் எனக்கு மரியாதை உள்ளது. நீங்கள் உங்கள் பேச்சில் மோடி இந்த நாட்டின் வில்லின் என்று பேசியதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும். மோடி இந்த நாட்டின் ஹீரோ என்று அவர் கத்தி பேசினார். 

இதனால் வேறு ஏதும் அசபாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில், நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு,  திருமாவளவன் மேடையில் இருந்தே வேகமாகபுறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த காட்சிகளை பாஜகவினர் பகிர்ந்து, தமிழகத்திலும் இதுபோன்று விரைவில் நடக்கும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 பெங்களூர் மேடையில் மோடியை விமர்சனம் செய்த திருமாவளவன்! "என்ன பேசுறீங்க?" திடீர் எதிர்ப்பு.. பரபரப்பு

 By Shyamsundar I Updated: Thursday, May 5, 2022

 பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் விசிக எம்பி திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசிக எம்பி திருமாவளவன் கடந்த 24ம் தேதி பெங்களூரை அடுத்துள்ள சர்ஜாப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அம்பேத்கர் சேவா சமிதி அமைப்பின் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் பாபா சாகேப் அம்பேத்கரின் சிலையை திறந்து வைக்க விசிக தலைவரான திருமாவளவன் அழைக்கப்பட்டு இருந்தார்.


 திருமாவளவன் என்ன பேசினார் இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கார் சிலையை திறந்து வைத்து பேசிய திருமாவளவன் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். பிரதமர் மோடி ஒரு வில்லன் என்று ஆங்கிலத்தில் பேசினார். அம்பேத்கார்தான் இந்த நாட்டின் ஹீரோ. அன்று அம்பேத்காருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி.. 

 

இன்று அந்த வில்லன் பாத்திரத்தில் இருப்பவர் பிரதமர் மோடி. இந்த நாட்டின் தந்தை.. நவீன இந்தியாவை வடிவமைத்தவர் அம்பேத்கார். பிரதமர் மோடி அம்பேத்கர் வகுத்து கொடுத்த சட்டத்தின் அடிப்படையிலேயே இவர்கள் ஆட்சி செய்கிறார்கள். பிரதமர் மோடி அடித்தட்டு மக்களை கைவிட்டுவிட்டார். அவர் அடித்தட்டு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அம்பேத்கர் கொள்கைக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று பிரதமர் பற்றி திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

 அந்த மேடையில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி (பாஜக), ஆனேக்கல் காங்கிரஸ் எம்எல்ஏ சிவண்ணா ஆகியோரும் இருந்தனர். பல பாஜக நிர்வாகிகளும் இருந்தனர். என்ன நடந்தது? 

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து திருமா எழுந்து செல்ல முயன்றார். அப்போது படாபட் சீனிவாஸ் என்ற நிர்வாகி திடீரென மைக் முன் வந்து கத்தி பேசினார். இவர் அமைச்சர் ஏ.நாராயணசாமியின் ஆதரவாளரும் தலித் அமைப்பின் நிர்வாகியும் ஆவார். திருமாவளவன் சார் நீங்கள் என்ன பேசுறீங்க.. சொல்லுங்க.. 

பிரதமர் மோடி பற்றி இப்படி பேசலாமா? அவர் வில்லன் கிடையாது. அவர்தான் இந்த நாட்டின் ஹீரோ. ஹீரோ பிரதமர் மோடிதான் இந்த நாட்டை உலக மேடையில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். நீங்கள் என்ன பேசுறீங்க.. காங்கிரஸ் இந்த நாட்டிற்காக என்ன செய்தது என்று கடுமையாக கூறினார். இவர் கத்தி கத்தி பேசியதை கண்டுகொள்ளாமல் திருமா அங்கிருந்து வெளியேறினார். 

இவரிடம் வாக்குவாதம் செய்யாமல் திருமா அங்கிருந்து வெளியேறினார். அதே சமயம் சில காங்கிரஸ் நிர்வாகிகள் படாபட் சீனிவாஸை ஏய் ஏய் என்ன பேசுற என்று விமர்சனம் செய்தனர். கடந்த மாதம் நிகழ்ந்த சம்பவம் இப்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/thirumavalavan-sir-what-are-talking-a-member-tried-to-heckle-vck-mp-in-bangalore/articlecontent-pf687652-457164.html 

 

No comments:

Post a Comment