Monday, July 4, 2022

நடிகர்.ஜோசப் விஜய் தந்தை அலெக்சாண்டர் சந்திரசேகர் 80ம் கல்யாணம் திருக்கடையூர் கோவிலில்

நடிகர் ஜோசப் விஜய் தந்தை அலெக்சாண்டர் சந்திரசேகர் 80ம் கல்யாணம் திருக்கடையூர் கோவிலில் விஜய் வரவில்லை



80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு. நடிகர் விஜய்  வரவில்லை

பெயரில் திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜை செய்த எஸ்.ஏ. சந்திரசேகர் - படங்கள்

S.A. Chandra Sekar at Thirukadaiyur | 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ.அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு. நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனை செய்தார்.

    ஜோசப் விஜய் இல்லாமல் திருக்கடையூரில் " 80வயது நிறைவு ஆயுஷோமம் செய்து கொண்டார்  S.A.சந்திரசேகர் ( சேனாபதிபிள்ளை அலெக்சாண்டர்)
    ஊருக்கு உபதேசம் சொல்லும் விஜய் ஜோசப் பெற்ற தாய் தந்தையை கவனிக்காமல் விட்டதால் தன் 80 வது வயதில் தாய் மதம் ( இந்து மதம் ) திரும்பினார் எஸ் ஏ சந்திரசேகர். பெற்ற பிள்ளை அருகில் இல்லாமல் (கவனிக்காமல்) அனாதை போல கோவிலில் சுற்றி வந்த தம்பதியினர்
    பீஸ்ட் பட ஹீரோயின் பிறந்தநாளுக்கெல்லாம் கேக் வெட்டி கொண்டாடிய அண்ணன் (விஜய் ஜோசப்) அப்பாவின் 80வது பிறந்த நாளில் கூடவாவது இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது

       
    SAC சொல்கிறார் எனக்கும் என் மனைவிக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது என்று..எல்லோரையும் அவர் மகனின் ரசிகர் போலவே இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார் போல.
    ஜெயம் ரவியின் தந்தை மோகன் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழாவில் SAC பேசியது உள்ளது.எனக்கும் என் மனைவிக்கும் 1973 ல் சீர்த்திருத்த திருமணம் நடந்தது அதன் பின்னால் விஜயக்கு 6 வயதாக இருக்கும் போது கிருஸ்த்தவ முறைப்படி சர்ச்சில் திருமணம் நடந்தது.தாய்,தகப்பனின் திருமணத்தை பார்த்த மகன் விஜய் மட்டும்தான் என்று மேடையிலேயே பேசினார்.
    இதே தகவலை தன் பழைய பேட்டியில் விஜய்யும் சொல்லியிருக்கிறார்.ஏன் அந்த திருமணம்? விஜய்யை கிருஸ்த்தவராக ஞானஸ்நானம் வழங்குவதற்கு தாய்,தகப்பன் இருவரும் கிருஸ்த்தவராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில்தானே? அல்லது கிருஸ்த்தவ முறையில் பதிவு செய்யப்பட்ட திருமணம் வேண்டும் என்பதற்குதானே?
    அதே போல விஜய் தன் மகனுக்கு ஜேசன் என்று தெளிவாகவே ஞானஸ்நான பெயரைத்தான் வைத்துள்ளார்.தன் மகளுக்கும் சாஷா என்றுதான் வைத்துள்ளார். இதெல்லாம் அவரது மத உரிமை,விருப்பம்,தனிப்பட்ட வாழ்வு.பிரச்சனை என்னவென்றால் SAC ஏன் பொய்சொல்லி தன்னை ஒரு மதசார்பற்றவனாக காட்டு விரும்புகிறார் என்பதுதான்.
    நான் சேனாதிபதி பிள்ளையின் மகன் சந்திரசேகரன்.நீலகண்டன் முதலியாரின் மகள் ஷோபா என்பதை அழுத்தி பதிய வைப்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார் SAC? தன் பழை ஹிந்து ஜாதிய அடையாளத்தின் வழி மதம் மாற்ற முனைகிறார் என்றுதானே குற்றம்சாட்ட முடியும்?
    அதற்கு ஆதாரம் ஜெயம் ரவி தந்தையின் புத்தக வெளியிட்டு விழாவில் அவர் பேசியதே உள்ளது.மோகன் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் அவர் காதலித்து திருமணம் செய்தது பிராமண பெண்ணை.பின்பு அவரும் தன் மத முறைப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்னைப் போலவே என்று SAC பேசினார்.அப்படியானால் திட்டமிட்ட ஏமாற்று வேலை என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?
    பவன் கல்யாண் ஆந்திர முதல்வர் ஜெகனிடம் இதைத்தானே கேட்கிறார்.'நீதான் மதம் மாறி போய்விட்டாயே? சநாதன தர்மம் வேண்டாம் என்று,உனக்கு ஏன் ரெட்டி பட்டம்' என்று.ஆக இதுதானே நமக்கு சந்தேகத்தை வரவழைக்கும் புள்ளி.

    Krishnavel Chelladurai 

    நடிகர் ஜோசப் விஜய் அவர்களின் தந்தை SA.சந்திரசேகர் பேட்டி நேற்று தினதந்தியில் பார்த்தேன். அதில் சந்திரசேகர் சொன்ன கருத்துகளில் ஒரு சிலவற்றிற்கு கட்டாயம் நான் என் பக்க கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்.
    -----------------------------
    01 கருப்புபணம் சினிமாவில் இல்லை; நான் என்னை பற்றி மட்டுமே கூற முடியும்.
    நானும் உங்களை பற்றி மட்டுமே கேட்கிறேன் சந்திரசேகர்,
    2013-ல் ஆகஸ்ட் மாதம் தூத்துகுடியில் பிரிட்டோ(s xavier britto) என்ற நபர் வருமான வரிதுறையால் சுற்றி வளைக்கபட்டார். அந்த நபர் முறைகேடாக பலகோடி பரிவர்த்தனைகள் அரசுக்கு தெரியாது நடத்தி இருப்பது அவர் நிறுவனத்தில் கிடைத்த ஆதாரங்கள் கூறுவதாக ஒரு செய்திகள் வந்தது..
    அந்த நிறுவனத்தின் பெயர் Indev Logistics.
    இந்த பிரிட்டோ வேறு யாரும் இல்லை இன்று மகா யோக்கியனாக தன்னை காட்டிகொள்ள துடிக்கும் இந்த சந்திர சேகரின் சகலை.. இதை சந்திரசேகர் என்ன கூறுவார்???
    இந்த பிரிட்டோ தான் விஜய்க்கு பலகாலமாக பினாமியாக இருப்பதாக ஒரு தகவலும் உண்டு.
    இந்த பிரிட்டோவிடம் நடந்த சோதனைக்கு பின் தான் 2015ல் நடிகர் ஜோசப்விஜய் 5கோடி ரூபாய்க்கு வாருமானவரி ஏமாற்றியது கண்டுபிடிக்கபட்டது, அதை அவர் திருப்பி செலுத்தியதும் சந்திரசேகர் வசதியாக மறந்துவிட்டார் போலும்?????...
    விஷேசம் என்ன தெரியுமா? இந்த பிரிட்டோவின் வளர்ச்சி யாரும் நினைத்துபார்க்க முடியாத அளவு வளர்ச்சி.(எந்த ஏழைக்கும் இப்படி வருமானம் வந்து உங்களால் பார்க்கமுடியாது.)
    1.கல்லூரி St. Britto's College , சென்னை.
    2.பள்ளிகூடம்: st brittos academy, வேளாச்சேரி, சென்னை. (இந்த பள்ளியில் வருடம் 1,00,000ரூபாய் வரை கட்டணம். அத்துடன் வருடம் வருடம் 10% கட்டண உயர்வு)
    3.சென்னை அடையாரில் உள்ள : Esthell Hotel Adyar (ஸ்டார் ஹோட்டல்).
    4.Esthell - The Village Resort என்ற மிக ஆடம்பரமான ஹோட்டல் ஒன்று சென்னைக்கு வெளியில் திருக்கழுகுன்றம் என்ற இடத்தில் உள்ளது.
    5.சென்னையில் உள்ள Esthell Homes என்ற ரியல் எஸ்டேட் கம்பெனி;
    6.Ennore Cargo Container Terminal என்ற கார்கோ நிறுவனம் சென்னை துறைமுகம் அருகே உள்ளது.
    7.BSV Shipping Agencies L.L.C. இவருடையது தான்.
    இன்னு பல ஆயிரம் கோடி சொத்து வெறும் கடந்த 10 வருடத்தில் இவருக்கு எப்படி வந்தது????? சந்திரசேகர்-ஜோசப் விஜய் அவர்கள் கொஞ்சம் பதில் கொடுக்க முடியுமா???
    இன்னோரு அதிர்த்திகரமான தகவல்: சமீபத்தில் இந்த நிறுவனத்தின் 50% பங்கே மிக மர்மமான வகையில் இவர் ஒரு சீன நிறுவனத்திற்கு விற்று உள்ளார். அதன் மதிப்பு 1000கோடி... (இதனால் இப்போ இந்த நிறுவனம் KerryIndev Logistics என்ற பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளதாக தகவல்).
    சத்தியமாக சொல்கிறேன் கருப்புபணம் என்றால் என்ன என்று இந்த சந்திரசேகர் அவருக்கும் அவர் மகன் ஜோசப் விஜய் அவருக்கும் தெரியாது என்று நம்புவோம்.
    இதுவரை நீங்கள் நடித்த படத்திற்கு காட்டிய வருமான வரி கணக்கை கொஞ்சம் வெளியிட முடியுமா???? ஏன் என்றால் உண்மை மக்களுக்கு அப்பட்டமாக சொல்லிவிட்டால் நல்லது.
    எனக்கு தெரிந்து ரஜினி, கமல், அஜித் இந்த யாரும் வரி ஏய்பு செய்தது இல்லை... ஆனால் அப்பட்டமாக கையும் களாவுமாக மாட்டியவர் இவர் மகன்,இவர் சகலை.. இவர் உக்காந்து எனக்கு கருப்பு பணம் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார் ???????
    இதில் மதம்மாற்றும் இயக்கங்கள் பணம் வருகிறதா என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் பணம் வரும் வழிகள் அனைத்தும் பெரும் சந்தேகத்தை கண்டிப்பாக சந்திரசேகர் சகலை மீது உருவாக்குகிறது.
    -------------------------------------------------------------------------------------
    02 GST அமலாக்கம் செய்தவிதத்தில் குறை உள்ளதாம்.. அதற்கு முன் தேவையான ஏற்பாடு செய்யவில்லையாம்..
    அறிவு இருக்கும் நபர் என்றால் இப்படி கூற மாட்டார். ஏன் என்றால் September, 2016 பின்னர் மட்டும் 22 அறிவிக்கபட்ட கூட்டமும், அறிவிக்கபடாத கூட்டமாக 20வதுக்கு மேலும் கூடி இந்த முக்கியமான முறைபடுத்த - அதற்கு முன்னர் அனைத்து மாநில அரசு பிரதிநிதிகளுடன் கூட்டிய கூட்டம் 3 ஆண்டுகள் 50க்கும் மேல்.
    இதில் கலந்து கொண்டவர்கள் எல்லோருமே இந்தியாவின் ஆகசிறந்த பொருளாதார நிபுணர்கள்... இந்த அளவு உழைத்து உருவாக்கபட்ட GST என்றால் என்னவென்று தெரியாத முட்டாள் போல் பேசி பேட்டி கொடுக்க வெக்கம் இல்லையா சந்திரசேகர் அவர்களுக்கு.
    விவரம் என்ன என்று தெரிந்து கொண்டு பேசும் பழக்கம் சினிமாவில் தான் இல்லை என்றால் ஒரு பேட்டிக்கு வரும் முன்னாது தெரிந்து கொண்டு வரவேண்டாமா?
    75% வரி இருக்கு... 28% அல்ல... உங்கள் மகன் ஜோசப் விஜய் rolls royce காருக்கு வரி போடுகிறார்கள்... அதில் என்ன தவறு இருக்கு???
    3கோடி , 4கோடி போட்டு இந்தியாவில் உற்பத்தியாகாத ஒரு காரை இறக்குமதி செய்து வோட்டவேண்டும் என்று நினைக்கும் உங்கள் ஆடம்பரத்திற்கு 75% வரி விதிக்கிறது GST. இதில் என்ன தவறு இருக்கு???
    தயிர் , பால், முட்டை, கோழி, தேன், உப்பு ,புத்தகம்,செய்தி தாள் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு அது எதற்குமே வரி கிடையாது அந்த எழவாது உங்களுக்கு தெரியுமா????
    எதுமே தெரியாது உங்கள் மகனுக்கு , உங்களுக்கு வரி இத்தனை நாளாக ஏமாற்ற வழி இருந்தது இன்று அனைத்தையும் மோடி அடைத்துவிட்டார் அதற்கு பொய் மூலம் மக்களை குழப்புகிறீர்????
    இதற்கு கேட்டால் கற்பனை என்று சமாளிக்கிறேங்களே சந்திரசேகர் - ஆனா அதே பேட்டியில் சமூகத்தில் தப்பு நடந்தால் தட்டி கேட்பான் என் மகன் சினிமாவில் என்று கூறினீர்... இதை கேட்டு தலையாட்ட தமிழகத்தில் எல்லோருமே முட்டாள் என்று நினைத்துவிட்டீரா???
    தப்பை தட்டி கேட்பேன் என்று கூறுவது- மாட்டி கொண்டால் கற்பனையாக கூறினேன் என்று மண்டையை சொறிய வெக்கமே இல்லையா சந்திரசேகர் அவர்களே????
    நீங்கள் பேட்டியில் கூறிய கேவலமான பிதற்றல்கள் சில :
    "சினிமாவில் எந்த விடயத்தையும் நேரடியாக புள்ளிவிவரத்துடன் சொல்ல கூடாது? 28% அதிகபடியாக வசூல் செய்கிறார்கள்? புள்ளிவிவரம் சொல்லும் போது அதனுடைய அதிகபட்சத்தை எடுத்து கொள்ளவேண்டும்? 1லட்சம் சம்பளம் கொடுக்கவேண்டும் என்றால் 1.18கொடுக்க வேண்டி இருக்கு. எல்லாருக்கும் நம்பர் உண்டாகிருக்கனும்? சிங்கப்பூர் தவறான தகவல் அல்ல. அது என் கற்பனை."
    இதைவிட பிதற்றல் நான் வேறு ஒருவரை பார்த்தது இல்லை.
    -------------------------------------------------------------------------------------
    03 ரசிகர்கள் ஏமாற்றபடுகிறார்கள்.????
    சினிமா செலவு அதிகம் ஆனால் டிக்கெட் விலை அதிகம் வச்சு வித்து காசு பார்த்தால் தானே வியாபரம்???? நாங்கள் யாரையும் விஜய் படம் பார்க்க வாங்க என்று அழைக்கவில்லையே????
    இதை செருப்பால் அடித்தது போல் நல்ல கூறினீர்.. இனியாவது ரசிகர்கள் சிந்திக்கட்டும்..
    இதில் நீங்கள் கூறிய வியாபார செலவு எப்படி அதிகம் ஆகிறது???? நடிகர் சம்பளம் 25கோடி , அவருக்கு கட்டவுட் முதல் பேணர்கள் வரை செலவு செய்ய படம் எடுக்கும் செலவு அதிகம் ஆக தானே செய்கிறது????
    ஆக உங்கள் மகன் சம்பளம் குறைத்து கொள்ள மாட்டீர் - பாவம் ரசிகர்கள் 100 ருபாய்க்கு பார்க்கவேண்டிய படத்தை அப்பட்டமாக 300ரூபாய் 500 ரூபாய் என்று வித்து கொள்ளடிக்க நீங்கள் எல்லாம் எப்டி ஊர் நியாயம் பேசுகிறீர்???
    அதற்கு என்ன தார்மீக தகுதி சந்திரசேகர் அவர்களுக்கு இருக்கு??????
    --------------------------------------------------------------------------------------------------------
    இறுதியாக :
    ரசிகர்களை டியூன் பண்ணுகிறார் விஜய்.... இதை நான் ஏற்றுகொள்கிறேன் யார் ஜோசப் விஜய் பற்றி பேசினால் அவனை/அவளை எவ்வளவு கீழ்தரமாக அருவருப்பாக திட்டமுடியுமோ அதை செய்ய சொல்லி இவர் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உங்கள் கட்டளைபடி ரசிகர்களை டியூன் செய்கிறார்கள்..
    ஆனால் பாருங்க அப்படி டியூன் பண்ணி ஜெயுலுக்கு போன மதுரையை சேர்ந்த உங்கள் ரசிகர் ராம்குமார் என்பவனுக்கு இன்னும் பெயில் கிடைக்கவில்லை அது தெரியுமா உங்களுக்கு? ஜெயிலில் கிடக்கான் அவன் குடும்பம் தினமும் அழைகிறார்கள் அது தெரியுமா சந்திரசேகர் சார்???
    இப்போ கூட தமிழிசை அவர்களை திட்டியதற்கு ஒரு நாளு டியூன் செய்யபட்ட உங்கள் ரசிகர்களை போலீஸ் தேடுகிறது அது தெரியுமா?????
    முன்னர் திமுக,பெரியார் கூட்டம் தான் விமர்சித்தால் எழுதியதற்கு பெண் பத்திரிக்கையாளருக்கு மலத்தை அனுப்பினர் என்று படித்திருக்கிறேன்.. இந்த அருவருப்பான திராவிட கலாச்சாரம் இப்போ உங்கள் ரசிகர்கள் வாய் வழியாக மீண்டும் பார்க்கிறேன்.
    மலத்தை பார்சல் அனுப்பிய திராவிட கழக செயலும்- வாய்வழியாக மலத்தை கொட்டும் உங்கள் ரசிகர்களின் அருவருப்பான பேச்சும் பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. முதலில் நாகரீகமாக பேச கற்றுகொடுங்கள்.
    அரசியலுக்கு வருவதற்கு முன்பே இத்தனை அட்டூழியங்கள் , குற்றங்கள், பணத்தாசை, ஆடம்பரம் ????சந்திரசேகர் பதவிக்கு , பணத்திற்கு அலையும் ஒரு மோசமான மனிதன்.

    No comments:

    Post a Comment