Saturday, July 2, 2022

கன்னையாலால் படுகொலை செய்த முஸ்லிம் மதவெறியர்களை பாஜகவினர் எனும் அருவருப்பான தக்கியா

 https://m.facebook.com/story.php?story_fbid=1032668540746548&id=100020102355164

டெய்லர் கொலை
==============
ராஜஸ்தான் டெய்லரைக் கொலை செய்தவர் பாஜக உறுப்பினர் என்று வதந்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலாக, பேசாமல் கொலை செய்தவர் பெயர் 'விவேக் பாண்டே'; அவர் ராஜஸ்தான் பாஜக மாவட்ட செயலாளர்தான். பொய்யாக முஸ்லிம் பெயரில் ஆதார் கார்டு வாங்கி விட்டுப் பின்னர் கொலையில் இறங்கி இருக்கிறார் என்று சொல்லி விடலாம். படிக்க கொஞ்சமாவது சுவாரசியமாக இருக்கும்.
இப்படி எல்லாம் பரப்ப ஆரம்பிப்பதில் ஒரு ஆதாரப் பிரச்சினை இருக்கிறது. இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? நபி நிந்தனைக்காக முஸ்லிம்களில் யாரும் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். இது பாஜகவே செய்த உள்ளடி வேலை என்பதா இவர்கள் சொல்ல வருவது? அப்படியானால் நூபூர் ஷர்மா சர்ச்சையில் மாநிலம் மாநிலமாக வாகனங்களை எரித்தது, கல்லெறிந்தது, கலவரங்களை நிகழ்த்தியது எல்லாமே முஸ்லிம் பெயரில் இருந்த பாஜகவின் ஸ்லீப்பர் செல் ஆட்கள்தானா?
சரி, ஃபிரெஞ்சு ஆசிரியர் சாமுவேல் பேடியைக் கொன்றது யார்? ஃபிரெஞ்சு வலதுசாரி தலைவர் மரின் லா பென் அனுப்பிய ஆளா?
டென்மார்க்கில் ஜூலன்ட் போஸ்டென் (Jyllands-Posten) கார்ட்டூன் சர்ச்சையில் முகமது கார்ட்டூனுக்கு எதிராக நடந்த கலவரங்களில் சுமார் 250 பேர் இறந்து போயினர். இந்தக் கலவரங்களையும் நிகழ்த்தியது முஸ்லிம்கள் இல்லையா? முஸ்லிம் நாடுகளில் ஒளிந்திருந்த அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் ஏவி விட்ட ஆட்களா?
ஃபிரெஞ்சு நாட்டின் சார்லி ஹெப்டோ கார்ட்டூன் சர்ச்சையில் இதழ் அலுவலகத்தில் புகுந்து 12 பேரை சுட்டுத் தள்ளியது யார்? முஸ்லிம் அடிப்படைவாதிகள் இல்லையா? முஸ்லிம் அகதிகளை உள்ளே விடாமல் செய்வதற்காக ஃபிரெஞ்சு உளவுத்துறையே நடத்திய நாடகமா?
இஸ்லாமில் பெண்கள் நிலை பற்றி ஆயான் ஹிர்சி அலி எழுதிய Submission ஆவணப் பட சர்ச்சையில் அந்தப் பட இயக்குனர் தியோ வான் காக்-கை கொடூரமாக குத்திக் கொன்றது யார்? டச்சு போலீஸ் தாங்களே ரகசியமாக அவரைக் கொலை செய்து பழியை ஒரு முஸ்லிம் மேல் போட்டு விட்டார்களா? சரி, அதற்குப் பின் பயந்து போய் தலைமறைவான ஹிர்சி அலியை கொலை செய்ய நாடு நாடாகத் தேடி ஓடியது யார்? கிறித்துவ வலதுசாரிகளா?
மத அவமதிப்பு வழக்கில் நிரபராதி என்று விடுதலையான கிறித்துவப் பெண்மணி ஆசியா பீபியை விடுதலை செய்யக் கூடாது என்று பாகிஸ்தான் எங்கும் கலவரம் நடத்தியது யார்? போப்பாண்டவர் அனுப்பிய ஆட்களா?
குர்-ஆன் வரிகள் இருந்த போஸ்டரை கிழித்து விட்டார் என்று சிங்கள ஃபேக்டரி மேனேஜரை அடித்தே கொன்றது முஸ்லிம்கள் இல்லையா? பாகிஸ்தானுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்று ரஜபக்ஷ அனுப்பிய ஆட்களா?
சல்மான் ருஷ்டி புத்தகத்தை ஜப்பானில் மொழி பெயர்த்த எழுத்தாளரை கொன்று போட்டது ஜப்பானிய உளவுத் துறையா? ருஷ்டியை கொலை செய்ய மூன்று வருடங்களுக்கும் மேல் அவரைத் துரத்தி அலைந்தது யார்? பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி ஆட்களா? உலகெங்கும் ருஷ்டி புத்தகம் சார்ந்த கலவரங்களில் ஐம்பதுக்கும் மேல் இறந்து போனவர்களுக்கு யார் காரணம்? ஐநா சபையா?
இன்னும் நான் சொல்லிக் கொண்டே போகலாம். உலகெங்கும் நபி-நிந்தனை சார்ந்த எந்த ஒரு சம்பவமும் ஒரே ஒரு காவு கூட வாங்காமல் முடிவுக்கு வந்ததில்லை. இதுதான் நடைமுறை உண்மை. இப்படி டஜனுக்கும் மேற்பட்ட சமீபத்திய சம்பவங்கள் வரலாற்றில் இருக்கையில், நாங்கள் செய்யவில்லை; அவன் செய்தான் இவன் செய்தான் என்ற பிரச்சாரங்களின் மூலம் தடை மாற்ற முனைவது வீணான முயற்சி.
உண்மையிலேயே தங்கள் சமூகத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமெனில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது இதுதான்: தங்கள் மதம் ஏன் இப்படி அவமதிப்புகளுக்கு எல்லாம் கூனிக் குறுகி பொங்கி எழுகிறது, என்று ஆராய வேண்டும். நவீன உலகில் இப்படிப்பட்ட பொங்கல்கள் ஏதாவது பயன் தருமா அல்லது தங்கள் சமூகத்துக்கு எதிராக மாறுமா, என்று யோசிக்க வேண்டும்.

தங்களது தொட்டாற்சிணுங்கி குணம் உலகெங்கும் கிறித்துவ இஸ்லாமிய வலதுசாரிகளுக்குதான் பயன்பட்டு வருகிறது என்பதை உணர வேண்டும். உணர்ந்ததும், அப்படிப்பட்ட கொதிநிலையில் வாழ்வதில் இருந்து தங்கள் மதத்தை மீட்டெடுக்க வேண்டும். உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை இருக்கும் சமூகத் தலைவர்கள் இதைத்தான் செய்ய முனைவார்கள்.
அதை விட்டு விட்டு இப்படிப்பட்ட கான்ஸ்பிரசி தியரிகளை முன்னெடுப்பது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும்!

https://tamil.news18.com/news/national/union-home-ministry-hands-over-amravati-murder-case-to-nia-amid-similarities-to-udaipur-hate-killing-kan-766184.html

No comments:

Post a Comment